Labels

Tuesday, August 30, 2011

தூக்குக்கு எதிர்ப்பு: பெண் வக்கீல்கள் உண்ணாவிரதம்



ஜனாதிபதி கருணை மனு நிராகரிக்கப்பட்டதால் ராஜீவ் கொலையாளிகள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் வேலூர் ஜெயில் சூப்பிரண்டு மூலம் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு மனு அனுப்பி உள்ளனர்.

அந்த மனுவில் அரசியலமைப்பு சட்டம் பிரிவு 161-ன் படி தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த மனுவின் நகல்கள் தமிழக கவர்னர், ஐகோர்ட்டு தலைமை நீதிபதி, உள்துறை செயலாளர், உள்துறை இயக்குனர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக அவர்களது வக்கீல் என்.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே முதல்வருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கோரிக்கை மனுவை பைசல் செய்யும் வரை தூக்குதண்டனை நிறைவேற்றுவதை நிறுத்தி வைக்க கோரி ஐகோர்ட்டில் 3 பேரும் மனு தாக்கல் செய்கிறார்கள்.

திங்கள் கிழமை (29.08.2011) மனுதாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது. இந்த நிலையில் 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி ஐகோர்ட்டு வளாகத்தில் பெண் வக்கீல்கள் சுஜாதா, கயல்விழி, வடிவாம்பாள் ஆகியோர் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

மேலும் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி வக்கீல்கள் கிருஷ்ணகுமார், முருகபாரதி, சங்கரன் உள்பட ஏராளமான வக்கீல்கள் கையெழுத்து வேட்டை நடத்தி முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தூக்குக்கு எதிர்ப்பு -நடிகர், நடிகைகள் போராட்டம் :

இயக்குநர் பாரதிராஜா தலைமையில் சென்னையில் இயக்குநர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின்னர் பாரதிராஜா,


தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் செயற்குழுவின் அவசர கூட்டம் இன்று (26.08.2011) நடந்தது. அதில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கருணை மனு தள்ளுபடி செய்யப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேர்களுக்கும் மரண தண்டனை நிறைவேற்றக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


மனித உயிர் அரிதானது. இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களை படுகொலை செய்த பாவம் இன்னும் போகவில்லை. இந்த நிலையில், மூன்று தமிழர்களுக்கு தூக்குத்தண்டனை விதிப்பது மகா பாவம். ஒரு கொலைக்கு இன்னொரு கொலைதான் தீர்வு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.


அது தமிழராக இருந்தாலும் சரி, ஜப்பானியராக இருந்தாலும் சரி, ஒரு கொலைக்கு இன்னொரு கொலை என்பதை ஏற்க முடியாது.


இந்த 3 தமிழர்களின் உயிரையும் காப்பாற்றுவது, இனமானத்தை காப்பாற்றுவது போல் ஆகும். தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் ஆகிறது. மிக சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். அவர் படித்தவர். அறிவாளி.


தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூன்று தமிழர்களையும் காப்பாற்றுவதற்கு முதல் அமைச்சர் ஜெயலலிதா குரல் கொடுக்க வேண்டும் என்று தமிழர்கள் அத்தனை பேரும் எதிர்பார்க்கிறார்கள். இதுதொடர்பாக, நாங்கள் முதல் அமைச்சரை நேரில் பார்த்து மனு கொடுக்க இருக்கிறோம்.

பேரறிவாளன் 19 வயதில் ஜெயிலுக்குள் போனவர். இப்போது 40 வயதை கடந்து விட்டார். இத்தனை வருடங்கள் தண்டனையை அனுபவித்த பிறகும் அவருக்கு மரண தண்டனை கொடுப்பது, குரூரம். எனவே இந்த பிரச்சினை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி சென்னை கோர்ட்டுக்கு வந்து வாதாடும்போது, தமிழ் இன உணர்வாளர்கள் அத்தனை பேரும் கோர்ட்டு முன்பு ஒன்று கூடுவோம்.


பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேர்களின் உயிர்களை காப்பாற்றக்கோரி, கல்லூரி மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்தவும் முடிவு செய்து இருக்கிறோம். எந்த மாதிரியான போராட்டம் என்பதை பின்னர் அறிவிப்போம்.''

இவ்வாறு பாரதிராஜா கூறினார்.

தூக்குக்கு எதிர்ப்பு - போராட்டத்தில் இரும்பொறை :

பேரறிவாளன், முருகன்,சாந்தன் மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே மனித சங்கில் போராட்டம் நடைபெற்றது.

தமிழர் கழகம் புதுக்கோட்டை பாவாணன், நாம் தமிழர் சத்தியமூர்த்தி, பாமக மாவட்ட செயலாளர் தரணி.ரமேஷ் மற்றும் 100க்கணக்காணோர் தமிழின உணர்வாளர்கள் கலந்துகொண்டனர்.

இரண்டு மணி நேரத்திற்கு இந்த மேலாக மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.


ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 26 பேருக்கு தடா நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கி, பின்னர் 22 பேரின் தூக்கு ரத்து செய்யப்பட்டது. அந்த 22 பேரில் ஒருவரான இரும்பொறை இந்த போராட்டத்தில் பங்கேற்றார்.

பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி திருப்பூரில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. பாமக, மதிமுக உட்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

ஈரோட்டில் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் புதுச்சேரியிலும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.


No comments:

Post a Comment