Labels

Showing posts with label Kavithai. Show all posts
Showing posts with label Kavithai. Show all posts

Wednesday, May 11, 2011

வாளினை எடடா! - பாவேந்தர் பாரதிதாசன்



வலியோர்சிலர் எளியோர்தமை
வதையே புரிகுவதா?
மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம்எனும் நினைவா?
உலகாள உனதுதாய்மிக
உயிர்வாதை யடைகிறாள்;
உதவாதினி ஒருதாமதம்
உடனே விழி தமிழா!

கலையேவளர்! தொழில்மேவிடு!
கவிதைபுனை தமிழா!
கடலேநிகர் படைசேர்கடு
விடநேர்கரு விகள்சேர்!
நிலமேஉழு! நவதானிய
நிறையூதியம் அடைவாய்;
நிதிநூல்விளை! உயிர் நூல்உரை
நிசநூல்மிக வரைவாய்!

அலைமாகடல் நிலம்வானிலுன்
அணிமாளிகை ரதமே
அவைஏறிடும் விதமேயுன
ததிகாரம் நிறுவுவாய்!
கொலைவாளினை எடடாமிகு
கொடியோர்செயல் அறவே
குகைவாழ்ஒரு புலியேஉயர்
குணமேவிய தமிழா!

தலையாகிய அறமேபுரி
சரிநீதி யுதவுவாய்!
சமமேபொருள் ஐனநாயகம்
எனவேமுர சறைவாய்!
இலையேஉண விலையே கதி
இலையேஎனும் எளிமை
இனிமேலிலை எனவேமுர
சறைவாய் முரசறைவாய்!

- பாவேந்தர் பாரதிதாசன்

குமுறி எழடா.... விடுதலை பிறக்கும் -காசி ஆனந்தன்



உன்னை எடுத்தெறி தமிழா!
ஒதிய மரம்போல் நின்றனை பேடி!
அன்னை துடித்திடல் அழகா?
அவள் படுந்துயர் எத்தனை கோடி!
தன்னை மறந்தொரு வாழ்வா?
தமிழ்மண் அன்றோ நம்முயிர் நாடி?
முன்னைக் கதைகள் அளப்பாய்....
முண்டம்! எங்கடா மூவேந்தர் பாடி?
மேடையில் தமிழ்விழா வைப்பாய்!
மேனிசிலிர்க்க வெறும்வாய் பிளப்பாய்!
ஓடைத் தவளைபோல் கத்தி
உலகில் என்னதான் பண்ணிக் கிழிப்பாய்?
பாடை உடன்கொண்டு வாடா!
பகைவன் களத்தே விழப்பாய்! அழிப்பாய்!
பீடை தொலைவதெந்நாளோ?
பிள்ளாய் விழிப்பாய்! பிள்ளாய் விழிப்பாய்!
எட்டி உலகினை நீ பார்!
எங்கும் விடுதலை வாழ்வே இருக்கும்!
கட்டி உனைமட்டும் போட்டார்!
கைவிலங்கென்று நொறுங்கிப் பறக்கும்?
தட்டி எழுக உன் தோளை!
தாவுக போரில்! இத்தாய்மண் சிரிக்கும்
கொட்டி நிறைத்திடு குருதி!
குமுறி எழடா.... விடுதலை பிறக்கும்.

- காசி ஆனந்தன்.

Saturday, April 2, 2011

புலிகளின் 'இரை'யாண்மை - தாமிரா



மானுட வேட்டை போலில்லை
புலிகளின் வேட்டை.

அச்சுறுத்தலின்றி அவை
தூக்குவதில்லை தம் நக ஆயுதங்களை.

புலிகள் அமைதி விரும்புபவை...
தனித்து இருப்பவை...
தனக்கென எல்லைகள் வகுத்துக் கொள்பவை...
தன் எல்லை தாண்டி வராது
புலிகள் எப்போதும்...
புலிகளுக்கும் உண்டு
எல்லை தாண்டா இறையாண்மை

புலி இனம் அழிந்து வருவதாக
யாரும் சொன்னால்கூட நம்பாதீர்கள்...
காடுகளின் கம்பீரம் புலிகள்.
புலிகள் பாதுகாக்கப்பட வேண்டியவை.

சிங்கமும் புலியும்
ஒரு வனத்தில் வாழ்வதில்லை.
சிங்கமும் புலியும்
ஒரு போரில் மோதுவதில்லை.
மோதினால்...
புலிதான் வெல்லுமென்கிறது
வனங்களின் வரலாறு.

- தாமிரா

Tuesday, March 29, 2011

வெள்ளைக்காரன் பெத்துப்போட்ட... பாடலாசிரியர் : தலித் சுப்பையா



வெள்ளைக்காரன் பெத்துப்போட்ட...
பாடல்-பண் : தலித் சுப்பையா

பல்லவி :
வெள்ளைக்காரன் பெத்துப்போட்ட
கள்ளப்பிள்ளை காங்கிரசு
இத்தாலிப் பெண்மணியின்
ஏவல் படையாய் மாறிப்போச்சு.

அ.பல்லவி :
ஊருக்கு நாளுபேரு கணக்குங்க சும்மா
பேருக்கு காங்கிரசு இருக்குங்க. (வெள்ளை)

சரணம் 1 :
காமராசர் செல்வாக்குல ஆண்டது - பிறகு
கழுதை தேஞ்சு கட்டெறும்பா ஆனது
குருடனுக்கு ராசபார்வை கிடைக்குமா - கை
தமிழகத்தை ஆளும்கனவு பலிக்குமா (வெள்ளை)

சரணம் 2 :
அரசியலில் காங்கிரசு சாக்கடை - இரு
கரைகளாக கழகங்கள் வெளிப்படை
மாறி மாறி பிச்சைவாங்கி செயிக்குது - இதில்
மான ஈனம் ஏதுமின்றி குரைக்குது! (வெள்ளை)

சரணம் 3 :
கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது - நம்
கடல்மக்கள் உரிமைகளை பறிச்சது
சிங்களப்படை மீனவரை கொல்லுது - இதை
தடுத்துநிறுத்த துப்பில்லாமல் மழுப்புது (வெள்ளை)

சரணம் 4 :
அழிவுப்படை ஈழத்துக்கு போனது - அங்கு
அடிபட்டு அசிங்கப்பட்டு மீண்டது
எறிந்தபந்து எதிர்த்திசையை தாக்குமே - அதை
தமிழகத்தில் நாமெல்லோரும் பார்த்தோமே. (வெள்ளை)

சரணம் 5 :
தமிழ்ஈழ விடுதலையைத் தடுக்குது - அதன்
தலைவரையே கொன்றுவிடத் துடிக்குது
இலங்கைக்கு ஆயுதங்கள் கொடுக்குது - தமிழரை
இளிச்சவாயர் கூட்டமென்று நினைக்குது. (வெள்ளை)

சரணம் 6 :
புலிகளை அழித்துவிடத் துடிக்குது - அவர்தம்
தடயமறிய ராடர்களை கொடுக்குது
படையனுப்பி பயிற்சிதந்து அழிக்குது - மூன்று
மலையாளிகள் பொறுப்பில்இது நடக்குது (வெள்ளை)

சரணம் 7 :
சட்டமன்றத் தீர்மானத்தை மதிச்சதா - அதை
சலூன்கடை தாள்என்று நினைக்குதா
மனிதச்சங்கிலி லட்சம்பேரு நடத்துனோம் - எந்தப்
பலனுமின்றி தமிழினமே தவிக்கிறோம். (வெள்ளை)

சரணம் 8 :
பாகி°தானை பிரித்துதந்தார் தாத்தனார்
பங்களாதேசுக்கு காரணமே மாமியார்
ஈழத்தமிழர் அழிப்பைசெய்தார் கணவரு - அந்த
இரண்டகத்தை சோனியாவும் செய்கிறார். (வெள்ளை)

சரணம் 9 :
காங்கிரசை ஒழிக்கச்சொன்னார் பெரியாரு - அந்தக்
கடனடைக்க களமாடுது தமிழ்நாடு
தமிழ்ஈழம் மலரப்போவது நிச்சயம் - துரோகக்
காங்கிரசை ஒழிப்பதே நம் லட்சியம் (வெள்ளை)

Wednesday, March 2, 2011

பிரபாகரன் இருக்கிறானா? இல்லையா? - கவிஞர் வாலியின் உருக வைக்கும் கவிதை..!



கவியரங்கம் தொடங்குமுன் - ஒரு
கண்ணீர் அஞ்சலி..
ஒரு
புலிப் போந்தை ஈன்று
புறந்தந்து -
பின் போய்ச் சேர்ந்த
பிரபாகரன் தாய்க்கு; அந்தப்
பெருமாட்டியைப் பாடுதலின்றி
பேறு வேறுண்டோ எனது வாய்க்கு..?

* * * * *

மாமனிதனின்
மாதாவே! - நீ
மணமுடித்தது வேலுப்பிள்ளை;
மடி சுமந்தது நாலு பிள்ளை!
நாலில் ஒன்று - உன்
சூலில் நின்று - அன்றே
தமிழ் ஈழம்
தமிழ் ஈழம் என்றது; உன்-
பன்னீர்க் குடம்
உடைத்துவந்த பிள்ளை - ஈழத் தமிழரின்
கண்ணீர்க் குடம்
உடைத்துக் காட்டுவேன் என்று..
சூளுரைத்து - சின்னஞ்சிறு
தோளுயர்த்தி நின்றது;
நீல இரவில் - அது
நிலாச் சோறு தின்னாமல் -
உன் இடுப்பில்
உட்கார்ந்து உச்சி வெயிலில் -
சூடும் சொரணையும் வர
சூரியச் சோறு தின்றது;

அம்மா!
அதற்கு நீயும் -
அம்புலியைக் காட்டாமல்
வெம்புலியைக் காட்டினாய்; அதற்கு,
தினச் சோறு கூடவே
இனச் சோறு ஊட்டினாய்;
நாட்பட -
நாட்பட - உன்
கடைக்குட்டி புலியானது;
காடையர்க்கு கிலியானது!

* * * * *

தம்பி!
தம்பி! - என
நானிலம் விளிக்க நின்றான் -
அந்த
நம்பி;
யாழ்
வாழ் - இனம்
இருந்தது - அந்த..
நம்பியை
நம்பி;
அம்மா!
அத்தகு -
நம்பி குடியிருந்த கோயிலல்லவா -
உன்
கும்பி!

* * * * *

சோழத் தமிழர்களாம்
ஈழத் தமிழர்களை..
ஓர் அடிமைக்கு
ஒப்பாக்கி; அவர்களது
உழைப்பைத் தம் உணவுக்கு
உப்பாக்கி;
செம்பொன்னாய் இருந்தோரை -
செப்பாக்கி; அவர்கள் வாழ்வை
வெட்ட வெளியினில் நிறுத்தி
வெப்பாக்கி;
மான உணர்வுகளை
மப்பாக்கி;
தரும நெறிகளைத்
துப்பாக்கி -
வைத்த காடையரை
வீழ்த்த...
தாயே உன்
தனயன் தானே -
தந்தான்
துப்பாக்கி!

* * * * *

இருக்கிறானா?
இல்லையா?
எனும் அய்யத்தை
எழுப்புவது இருவர்;
ஒன்று -
பரம்பொருள் ஆன பராபரன்;
இன்னொன்று
ஈழத் தமிழர்க்கு
அரும்பொருள் ஆன
பிரபாகரன்!

* * * * *

அம்மா! இந்த
அவல நிலையில் - நீ..
சேயைப் பிரிந்த
தாயானாய்; அதனால் -
பாயைப் பிரியாத
நோயானாய்!
வியாதிக்கு மருந்து தேடி
விமானம் ஏறி
வந்தால் சென்னை அது -
வரவேற்கவில்லை உன்னை!
வந்த
வழிபார்த்தே -
விமானம் திரும்பியது; விமானத்தின்
விழிகளிலும் நீர் அரும்பியது!

* * * * *

இனி
அழுது என்ன? தொழுது என்ன?
கண்ணீர்க் கலப்பைகள் - எங்கள்
கன்ன வயல்களை உழுது என்ன?
பார்வதித் தாயே! - இன்றுனைப்
புசித்துவிட்டது தீயே!
நீ -
நிரந்தரமாய்
மூடிக்கொண்டாய் விழி; உனக்குத்
தங்க இடம் தராத - எங்கள்
தமிழ்மண்
நிரந்தரமாய்த்
தேடிக் கொண்டது பழி!

இடம் : வாணியம்பட்டி கவியரங்கம்

நன்றி : ஜூனியர்விகடன் - 06-03-2011

Thursday, February 10, 2011

தேவரீர் சபைக்கொரு விண்ணப்பம் - தமிழ்நதி



ஆயுதங்களைக் கைவிடும்படி
அறிவித்தல் கிடைத்தது.

நல்லது ஐயா!

எங்களுக்கு அவகாசம் கொடுங்கள்

எறிகணைகளுக்கும் விமானங்களுக்கும் தப்பி
எஞ்சிய வீடுகளையும் கோயில்களையும்
நாங்களே தரைமட்டமாக்கிவிடுகிறோம்.
கைவிடப்பட்ட கடவுளர் சிலைகளை
கடலின் ஆழத்துள் புதைத்துவிடுகிறோம்.
சுவர்களிலும் மரங்களிலும்
எங்கள் குழந்தைகளின் தலைகள் சிதறடிக்கப்படும்போதில்
வழியும் வெண் மூளைச்சாற்றின்
கனவில் இருப்பவர்களே!
சற்றே அவகாசம் கொடுங்கள்
எங்கள் குழந்தைகளுக்கு
நாங்களே நஞ்சூட்டிக் கொன்றுவிடுகிறோம்.
மேலும் நீங்கள்
வன்புணர்ந்து சிதைக்கவிருக்கும்
எங்கள் பெண்கள்
இழிவின்முன் தற்கொலைசெய்துகொள்ள
சற்றே அவகாசம் கொடுங்கள்.

போராளிகள் ஆயுதங்களைக் கைவிடும்முன்
கவிஞர்கள்
தம் கடைசிக் கவிதையை
எழுதிக் கொள்ளட்டும்.
பத்திரிகையாளர்கள்
'ஜனநாயகம்... ஜனநாயகம்' என்றெழுதி
துண்டாடப்படவிருக்கும் நாக்குகளால்
அச்சொல்லின் மீது காறியுமிழட்டும்.

எங்களுக்கு அவகாசம் கொடுங்கள்.
உங்களுக்கும் அது வேண்டியதே.

சுறுசுறுப்பாக இயங்கவிருக்கும்
உங்கள் வதைகூடங்களைச் சுத்திகரிக்க...
நவீன சித்திரவதைகளில்
சிறையதிகாரிகள் பயிற்சி பெற...
புகட்டுவதற்கென
மலமும் மூத்திரமும்
குடுவைகளில் சேகரிக்க...
நகக்கண்களுக்கென ஊசிகள்
குதிகால்களுக்கென குண்டாந்தடிகள்…
முகம் மூடச் சாக்குப்பைகள்...
கால்களுக்கிடையில் தூவ
மூட்டைகளில் மிளகாய்த்தூள்கள்
மேலும் சில இசைக்கருவிகள்
வதைபடும்போதில் எழும் கதறலை
நீங்கள் இசையமைத்து
பண்டிகைகளில் பாடவிரும்பலாம்.

எங்களுக்கு அவகாசம் கொடுங்கள்.

மறந்தே போனேன்
எங்களைக் கைவிட்டவர்கள்
தேர்ந்த சொற்களால்
இரங்கலுரைகளை முற்கூட்டியே எழுதிக்கொள்ளலாம்.

எங்களது பூர்வீக நிலங்களில் குடியமர்த்த
ஆட்களையும் அடியாட்களையும்
தயார்ப்படுத்தியாயிற்றெனில்
யாவும் நிறைவு.

அந்தோ! பூரண அமைதி பொலிகிறது.

நாங்கள் கேட்கும்
அவகாசத்தை வழங்கி
தேவரீர் அருள்பாலிக்க வேண்டுகிறோம்.

- தமிழ்நதி

Sunday, December 19, 2010

மானத்தி அவள்; தமிழச்சி !!



செய்தித் தொகுப்பாளர் இசை ப்ரியா!

1
மண்ணின்
விடுதலைக்குப் போராடிய
தமிழச்சியின் நிர்வாணம்
இணையமெங்கும் ஒளிபரப்பு;
உயிரிருந்தும் உலவும் நாம் -
அதை கண்டும் -
சாகாத; இழி பிறப்பு!!
————————————————————–
2
மானத்தில் -
தொட்டால் சுடும் நெருப்பு,
இழிவாய் -
பார்த்தாலே பாயும் மின்சாரம்,
அவள் -
தாயிற்கும் ஒரு படி மேல் என்று
இனி புரியும் – சிங்களனுக்கு!!
————————————————————–
3
அவளுக்கு மட்டும் தெரிந்திருந்தால்
ஒன்று பார்த்தவரையெல்லாம்
எரித்திருப்பாள்,
அல்லது – தன்னையாவது
எரித்துக் கொண்டிருப்பாள்!!
————————————————————–
4
தப்பித் தவறி
அவள் பிள்ளை இதை
பார்த்திருந்தால்-
எத்தனை ராஜபக்ஷேவை அவன்
கொன்றிருப்பானோ!!!!!!!?
————————————————————–
5
எம் மண்ணின்; வீரமென்
தமிழச்சிகள்,
நாய்கள் கொன்றுவிட்டு தான்
கொந்தியிருக்கின்றன!!
————————————————————–
6
ஜென்மம்
எத்தனை எடுத்தாலும் இனி
ரத்தத்தின் ஒரு துளியிலாவது
இருக்கும் -
அவன் மீதான; அவளின் கோபம்!
————————————————————–
7
யாரும் சாட்சிக்கு வேண்டாம்
காற்றும்.. வெளிச்சமும்..
மண்ணும்.. வானும்..
மரமும் செடிகளும் -
பார்த்துக் கொண்டு தானிருந்தன
அந்தக் கயவர்களை!!
————————————————————–
8
கடல் தகதகவெனக்
கொதித்து -
உலகத்தை சூழ்ந்து அழித்திருக்கும்;
அந்த கொடுமைக்கு உடனே
தண்டனை கொடுப்பதெனில்!!
————————————————————–
9
யாரோ ஒருவனுக்கு
துணிவிருந்தால்
அவள் கையில் ஒரு அரிவாளை
கொடுத்துவிட்டு சொல் -
உன்னை இப்படிச் செய்வேனென்று;
அந்த அரிவாளில் -
உன்னைப் போல் – அவள்
நூறு பேரை அறுத்திருப்பாள்!!
————————————————————–
10
எனக்கு
மரணத்தை இப்பொழுதேக் கொடு;
அதற்கு ஈடாக -
இணையத்தில் தெரிந்த
என் தமிழச்சியின் வெற்றுடம்பை
ஈழ விடுதலையால் போற்று,
இன்னொரு மானத்தி மிஞ்சட்டும்!!
————————————————————–
வித்யாசாகர்

நன்றி : நக்கீரன் நந்தவனம்.

உறைபனியில் அக்கினிப் பூக்க(ள்) கண்டேன்!



உறைபனியை உருகவைத்த
வேட்கைத் தீ - பௌத்தத்தின்
புனிதம் மறந்த ராஜபக்சேவை - அச்சத்தில்
வியர்க்க வைத்த வீரத் தீ...!

முள்ளிவாய்க்காலில் -
எக்காளமிட்டவர்களை - கீத்துரு
விமான நிலைய புறக்கடை வழி
ஓடச் செய்த வீர பிரபாகரன் இனத் தீ...!

வீரத் தமிழச்சியர்... எங்கள் தீரத் தமிழச்சியர்...
இசைப்பிரியாவினர் வெற்றுடம்பை
கண்ட பின்பும் வெறுமனே இருக்க - இது
இற்றுப்போன இனமல்லவே ;
பற்றி விட்டது அவள் கொண்ட மானத் தீ...!

வீழ்ந்து விட்டான் வீர தீரன் - இனி
வீழ்ந்தது ஈழம் என்று -
வெறித் தம்பட்டம் கொட்டியதே-
சிங்களக் கூட்டம்...!

என்றும் வீழ்ந்திடக் கூடுமோ
உயிர் பாய்ச்சி வளர்த்த ஈழம்;
வீழவில்லை வீழ்வதில்லை
வீழ்ந்தது என்றால் அது அறிவீனம்...!

ஒரு பிரபாகரன் விதைத்ததில் - இன்று
ஓராயிரம்... ஒரு லட்சம்...
பல கோடி பிரபாகரன்கள் -
வீறுகொண்டு முளைத்திட்டனர் காண்...!

புறப்பட்டார் தன்மானத் தமிழர் - இனி
ஈழக் கொடி வெற்றி நாட்டும்...!

புற்றுபோல் வளர்ந்துவிட்ட
புற்றீசல் சிங்கள வாழ்க்கை -
சிறு நாள் வாழ்க்கை - அது
போய் ஒழியும் காலம் விரைவில்
எண்ணிக் கொள்கவே...!

இங்கிலாந்தில் பற்றி எரிந்தது போல்
இங்கும் கொழுந்துவிட்டிருந்தால் -
என்றோ கருகியிருக்கும்
ஈன இனவெறியர் கொட்டம் ;
அந்தச் சாம்பலைக் -
கரைத்து அன்றே பூத்திருக்கும்
ஈழத் தமிழர் சட்டம்...!

ஆயிரந்தான் இருந்தாலும்
இலங்கையில் மடியும் தமிழன் -
மாற்றான் தாய்ப்பிள்ளை என்று - ஒருவேளை
மடமையர் இங்கு நினைத்ததாலோ!?

பூக்காடான முள்ளிவாய்க்கால் எங்கும் - பூத்ததே
பூவுடல்களின் சாக்காடு ;
கொள்ளை உயிர் போனாலும்
விலைபோகா மானத்தை -
விடநேர்ந்த உடன்பிறப்புக்கள் - தவித்தன
துடித்தன தளிர்நெஞ்சங்கள் அங்கே...!

லட்சம் சொச்சம் உயிரிழந்தப் பின்னும்
மிச்சம் - அந்தோ !
அனாதையாய் தவிக்கிறதே;
அட...! மதிகெட்ட புத்தி இதை
வெற்றி என்று கதைக்கிறதே !?

இவர்களுக்கு -
துக்கப்படத்தான் நேரமில்லை - இதில்
வெட்கப்படவுமா நேரவில்லை... ?

அயலகத் தமிழா !
உம்மை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்;
வாழும் இடம் தூரப்பட்டாலும்
எம் சிந்தைக்கு அருகில் வந்து - நீவீர்
உறைக்கச் செய்த - எம்
உள்ளுணர்வு கொண்டு உம்மை வாழ்த்துகிறேன்...!

மக்களால் மக்களுக்காக
மக்களாட்சி நடக்கும் நாட்டில் நீ இருக்கிறாய்;
என் செய்வேன் - நானோ
அரசியலால் அரசியலுக்காக
அரசியலாட்சி ஆளும் நாட்டில் அல்லவோ இருக்கிறேன்...!

இத்தனை நாள் உறைந்து கிடந்த - சில
இதயங்களும் உம் வேகத் தீ கண்டு
இன்று உயிர்ப்பு கொண்டன...!

இனி...
ஈழம் மலரும்... ஈழம் மலரும்... ஈழம் வளரும் - இதை
இறவாத பிரபாகரன் காணக் கூடும்...!

:~ நா. இதயா, ஏனாதி...

நன்றி : நக்கீரன் நந்தவனம்.

அடிமைச் சங்கிலி அறுப்போம்...! -கவிஞர் தணிகைச்செல்வன்



கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், காவியக் கவிஞர் வாலி தலைமையில் "தமிழுக்கும் அமுதென்று பேர்' என்கிற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது.

கவியரங்கத்தை கவிஞர் மு.மேத்தா தொடங்கி வைத்தார். தொடர்ந்து கவிஞர்கள் பழனிபாரதி, பா.விஜய், தணிகைச் செல்வன், இளம்பிறை, உமாமகேஸ்வரி, தமிழ்தாசன் உள்ளிட்டோர் தங்கள் கவிதைகளை வாசித்தனர்.

ஒவ்வொரு கவிஞரும் ஒவ்வொரு கோணத்தில் வாசித்த நிலையில், ஈழத்தைப் பற்றி அதிகம் பேசிய தணிகைச்செல்வனின் கவிதை வரிகள், திரண்டிருந்த மக்களிடம் உணர்வு தாக்கத்தை ஏற்படுத்தின.

அவரது கவிதையிலிருந்து...


முள்ளிப்போர் முனைமுகத்தில் முணைந்து சரணடைய

வெள்ளைக் கொடிவீசி வந்தாரை; விதிமீறி

கள்ளக் கொலைசெய்த காட்டுவெறி காண்கிலையோ...!

பிள்ளைக் கறிகேட்கும் பேயர்களின் பலிகளமாம்

முள்வேலிக்குள் கதறும் மரணஒலி கேட்கலையோ...!



கொள்ளையர்கள் கொடுங்கரத்தில் குமரியர்கள் குமுறுகின்ற

வல்லுறவின் வதைகண்டும் மனசாட்சி வேர்க்கலையோ...!

ஒரு குவளை நீருக்கும், ஒரு கவளம் சோறுக்கும்

இரவலரைப் போல் ஏங்கும் ஈழவரை காண்கிலையோ...!



அய்யோ உலகே ! அய்யகோ பேருலகே !

பொய்யோ உலகசபை ? புனைவுகளோ சபைவிதிகள் ?



கையேந்தி வந்தாரை கரமேந்தி காத்த இனம்

கையேந்துதல் காண்கிலையோ கஞ்சிக்கும் கருணைக்கும்.



எல்லாம் இழந்தோம் இழப்பதற்கு ஏதுமில்லை...

கணவனை இழந்ததாலே கண்ணகி சீற்றம் நியாயம்

துணியதனை இழந்ததாலே துரோபதி சபதம் நியாயம்

தனதுமண் இழந்ததாலே தருமனின் யுத்தம் நியாயம்

அனைத்தையும் இழந்த எங்கள் ஆவேசம் நியாயம் ! நியாயம் !



தாக்குண்டால் புழுக்கள்கூட தரைவிட்டுத் துள்ளும் , கழுகு

தூக்கிடும் குஞ்சிகாக்க துடித்தெழும் கோழி; சிங்கம்

மூர்க்கமாய் தாக்கும்போது முயல்கூட எதிர்த்து நிற்கும்...



சாக்கடைப் கொசுக்களா நாம் ? சரித்திர சக்கரங்கள் !


சரித்திரம் சுழலும்போதும் சமுத்திரம் குமுறும்போதும்

பொறுத்தவன் பொங்கும்போதும் புயல்காற்று சீறும்போதும்

பறித்தவன் ஆதிக்கத்தைப் பசித்தவன் எதிர்க்கும்போதும்

மறித்தவன் வென்றதுண்டா ? மறுத்தவன் நின்றதுண்டா?



புவியோடி படர்ந்திருக்கும் நவகோடி தமிழினமே !

நீ , இழக்கப்போவது அடிமைச் சங்கிலிகளைத்தான்-

பெறப்போவதோ ஒரு பேருலகம் ! ஒரு பொன்னுலகம் !

அதுதான் தமிழுலகம்...!

நன்றி : நக்கீரன் நந்தவனம்.

மே-18 : விழிமழைக் காலம் விரைவில் மாறும்







காலம் எழுதிய துயரக் காவியம்

கண்களை இன்னும் நனைக்கிறதே-மன

ஓலம் இன்னும் ஓய்ந்திட வில்லை

உலகம் கல்லாய்க் கிடக்கிறதே.



இரவின் உதடுகள் கண்ணீர் சொற்களை

ஏந்திய படியே அழுகிறதே-அலை

புரளும் கடலும் மௌனம் நோற்று

புவியை வெறுத்து எழுகிறதே.

உறக்கம் குதறும் ஊமை நினைவுகள்

உயிரில் வலியாய் வலிக்கிறதே-எம்

உறவுகள் எழுப்பிய மரணக் கூச்சல்

ஒவ்வொரு நொடியிலும் ஒலிக்கிறதே.



முள்ளி வாய்க்கால் கரைகளின் மீது

முளைத்த மரணப் புதர்களிலே-எம்

பிள்ளைகள் ஆடிய பொம்மைகள் கூட

பிணம்போல் வெறித்துக் கிடக்கிறதே.

விழிமழைக் காலம் விரைவில் மாறும்

வெளிச்சம் தேடி நடையிடுவோம்-நம்

வழிநடைப் பயணம் ஈழம் அடையும்

வருத்தங்க ளுக்கு மடையிடுவோம்.


-ஆரூர் தமிழ்நாடன்

நன்றி : நக்கீரன் நந்தவனம்.

Saturday, December 11, 2010

அந்த நாளில் நாம் என்ன செய்துகொண்டிருந்தோம்



ஒரு நாளை நினைவுகூரும்போது
அந்த நாளின் எல்லா நிமிடங்களையும் நாம்
கற்பனைசெய்து பார்ப்பதில்லை

இப்போது
அந்த நாளை நினவுகூரும்
இந்த கணத்தில்
நாம் எண்ணிப்பார்ப்பது எதை?
அந்த நாளின் பகலையா?
இரவையா?


நள்ளிரவு கடந்து அந்த நாள் உயிர்பெற்ற
ஆரம்ப கணங்களில்
எப்படி இருந்திருப்பார்கள்?
சில்லிட்டுப்போன காற்றில்
நடுங்கும் உடல்களைக் கைகளால்
போர்த்தியிருந்திருப்பார்களா?
அழும் குழந்தையின் சப்தம்
கவனத்தை ஈர்த்துவிடுமென்று பயந்து
அதன் குரல்வளையை நெரித்திருப்பார்களா?
பகலைநோக்கி ஊர்ந்துகொண்டிருக்கும்
இரவைத்
தடுத்து நிறுத்துவது எப்படி என யோசித்திருப்பார்களா?
அந்த இரவு
குண்டுகளின் சப்தங்களால்
சீரழிக்கப்படாத இரவாக இருந்திருக்குமா?


அவர்களின் நாளை
எப்படி நாம் நினைவுகூர முடியும்?
நமக்குத் தெரியாது
எறிகணையொன்று விழுவதற்குமுன் கேட்கும் சப்தம்
அது வெடித்துச் சிதறும்போது
விலகிக் கூடும் இருளின் சிறிய இடைவெளியில்
புலப்படும் முகங்கள்
அவற்றில் அப்பியிருக்கும் பயம்


நமது நாசிகளுக்குத் தெரியாது
கந்தக மணத்தோடு கலந்திருக்கும்
கருகிய உடல்களின் வாசனை
நம் செவிகள் அறியாது
சிதறிய உடல்களின்மீது
தவழும் குழந்தை ஒன்றின் அழுகுரல்

அந்த நாளை
நாம் எப்படி நினைவுகூரமுடியும்?

நமக்குத் தெரியாது
போர் நடக்கும் இடம்
எப்படி இருக்குமென்பது

அங்கு
இரவுகளில் மனிதர்கள் தூங்கியிருப்பார்களா?
அதிகாலையின் மெல்லிய வெளிச்சத்தில்
மரித்துக்கிடக்கும் தம் உறவுகளைப் பார்த்து
அழுவதற்கும் அவர்களுக்கு நேரம் இருந்திருக்குமா?
எதுவுமே நமக்குத் தெரியாது
பதுங்கு குழிகளில் வாழ்வது
அல்லது சாவது
நமக்குத் தெரியவே தெரியாது

அப்படியிருக்கும்போது
அவர்களின் நாளை
எப்படி நாம் நினைவுகூரமுடியும்?

நமக்குத் தெரிந்தது
நம்முடைய நாள்தான்

அவர்கள் ஒட்டுமொத்தமாகப்
புதைக்கப்பட்ட
அந்த நாளில் நாம்
என்ன செய்துகொண்டிருந்தோம்?
திரையரங்குகளில் இருந்தோம்
உணவகங்களில் விருந்துண்டோம்
தொலைக்காட்சிகளில் புதைந்துகிடந்தோம்
பயணித்தோம்
புகைத்தோம்
குடித்தோம்
பாதுகாப்பான நம் வீடுகளில்
புணரவும் செய்தோம்

நம்முடைய நாளைத்தான் நமக்குத் தெரியும்
அதைத்தான் நம்மால் நினைவுகூரமுடியும்

அப்புறம் ஏன்
அறியாத ஒரு நாளைப்பற்றிப் பேசுகிறோம்?
நாம் பார்க்காத உடல்களைப்பற்றி
புதைகுழிகளைப்பற்றி
தொட்டுணராத குருதியைப்பற்றி
வீரத்தைப்பற்றி
தியாகத்தைப்பற்றி
துயரத்தைப்பற்றி
ஏன் பேசுகிறோம்?


நாம் பேசவேண்டும் நமது சுயநலத்தை
நாம் பேசவேண்டும் நமது கையாலாகாத்தனத்தை
நாம் பேசவேண்டும் நமது துரோகத்தை
நாம் பேசவேண்டும் நாம் மனிதர்களே இல்லை
என்ற உணமையை

( முள்ளிவாய்க்கால் கொடுமையின் முதலாண்டு நினைவாக மணற்கேணி பதிப்பகம் வெளியிட்ட ' எங்கள் காலத்தில்தான் ஊழி நிகழ்ந்தது ' என்ற கவிதைத் தொகுப்பில் இடம்பெற்ற கவிதை. )

- ரவிக்குமார், விடுதலை சிறுத்தைகள் சட்டமன்ற உறுப்பினர்.

ரவிக்குமார் கவிதைகள்



1. முன்பொரு காலமிருந்தது

ஈழத்தில் அழுத கண்ணீர்
இங்கே பெருக்கெடுத்து
தெருவெல்லாம் ஓடி
தீயை உசுப்பிவிட்ட காலம்

முன்பொரு காலமிருந்தது

துவக்கு, லோறி, சப்பாத்து, சாரம் என
நாமும் கதைத்து
நண்பர்களைப் பார்த்து
விசரோ? எனக்கேட்டு வேடிக்கை செய்த காலம்

முன்பொரு காலமிருந்தது

குப்பியணிந்த சிறுவர்கள்
ஒருகையில் துவக்கும்
மறுகையில் புல்லாங்குழலுமாய்
புகைப்படங்கள் எடுத்துக்கொண்ட காலம்

முன்பொரு காலமிருந்தது

‘தமிழன் இல்லாத நாடில்லை
தமிழனுக்கென்று ஒரு நாடில்லை‘
முழக்கங்களின் கவர்ச்சியில்
மூழ்கிக் கிடந்த காலம்

முன்பொரு காலமிருந்தது

கேப்றன், கேணல்
தேசியத் தலைவர் மாவீரர்
பட்டங்களே அடையாளங்களாய்
மாறிவிட்டிருந்த காலம்

முன்பொரு காலமிருந்தது


செய்தியாளர் சந்திப்புக்கு
உலகமே திரண்டுவந்து
முண்டியடித்து நின்ற காலம்

அப்படியொரு காலமிருந்தது.......



2.

கைகளுக்குப் பதிலாக
கட்டுகளோடிருக்கும் குழந்தை
புன்னகைக்கும் விழிகளால்
நம்மைப் பார்க்கும்போது
நாம் ஏன் முகத்தைத் திருப்பிக்கொள்கிறோம்?

3.

கைகளைக் கோர்த்துக்கொண்டு
சுவர்போல நின்றோம்.
சாலையில் விரைந்தவர்களை
எதிரிகளாய் எண்ணிச் சபித்தோம்.
நீர்சவுக்காய் விளாசிய
மழையையும்மீறி முழக்கமிட்டோம்.
முகத்தில் வழிந்த தண்ணீர்பட்டு
நனைந்திருந்தது குரல்
எனினும் ஆக்ரோஷம் குறையவில்லை.
தொலைக்காட்சிக் காமிராக்கள்
படம்பிடித்துச் செல்லும்வரை
கட்டுப்பாடு காத்தோம்
அதன்பிறகு
வீடுகளுக்கு விரைந்தோம்
செய்தியில் வரப்போகும்
முகங்களைப் பார்ப்பதற்கு

4.
கால்களின்றிப் படுத்திருந்தவனிடம் கேட்டேன்
பதில்சொல்லவில்லை
விழிகள் இருந்த இடத்தில்
பஞ்சு உருண்டைகளோடிருந்த
பெண்ணிடமும் கேட்டேன்
பதில் சொல்லவில்லை
கன்னத்துச் சதை பிய்ந்து
கடைவாய்ப் பற்கள் தெரியக் கிடந்த முதியவனும்
மௌனமாகவே இருந்தான்

உங்களில் எவருக்கும்
நாட்குறிப்பு எழுதும் பழக்கமில்லையா?
உங்களில் எவரிடமும்
புகைப்படக் கருவி இல்லையா?
உங்களில் எவரும் கவிஞர்களில்லையா?
ஓவியம் தீட்டத் தெரிந்தவர்கள்
ஒருத்தருமே இல்லையா?
இறுதிநாளில் என்னதான் நடந்தது?

கேள்விகளுக்கு எவரும் பதில்சொல்லவில்லை
செத்தவர்களில் யாரிடமேனும் கேட்கலாமெனப்
பிணவறைக்குப் போனேன்
அங்கு கிடத்தப்பட்டிருந்தது எனதுடல்
மார்புக்கூடு பிரிக்கப்பட்டிருந்தது
இதயம் இருந்த இடத்தில்
கிடந்ததொரு குழவிக்கல்

- ரவிக்குமார், விடுதலை சிறுத்தைகள் சட்டமன்ற உறுப்பினர்.

Saturday, November 27, 2010

அன்பு அண்ணன் பிரபாகரனுக்கு பிறந்தநாள் வாழ்த்து - வித்யாசாகர்



எவனோ கிள்ளியெறியத் துணிந்த எம் வீரத்தை
விடுதலையை -
எம் உணர்வை -
மீண்டும் மீண்டுமாய் உயிர்பித்துத் தந்தவரே;

வாழ்வின் வெற்றிதனை -
விடுதலை வேட்கையாகக் கொண்டு -
மொழி உணர்வை தமிழ் உணர்வென – என்
கடைசி தமிழனுக்கும் ஈந்தவரே;

வீழும் ஒரு தோல்வியில் கூட -
பாடம் உண்டென மீண்டு -
எமை மெல்ல மெல்ல ஒருங்கிணைத்து
ஒரு தேசமாய் வளர்த்தவரே;

அடங்கிப் போனவள் கையில் ஆயுதம் பிடிக்கவும்
அடிமை என்றெண்ணியவனுக்குத் திருப்பியடிக்கவும்
உயிர் பறித்துப் போனவனிடம் இருந்து – எம்
விடுதலையை மீட்கவும் பாடம் புகட்டியவரே;

ஒழுக்கத்தை ஒவ்வொரு குடிமகனுக்கும் போதித்து
வீரத்தை எம் குழந்தைகளுக்கும் ஊட்டி -
தேசம் என்றால் எது என்றும், அதை தமிழன் ஆண்டால்
எப்படி இருக்குமென்றும் உலகிற்குக் காட்ட உழைத்தவரே;

என் தாய் வயிற்றில் பிறக்காமல் உற்ற
என்னன்பு அண்ணனே,
என்றேனும் ஓர் தினம் எம் தேசம் ஆளப் போகும்
எம் புகழ்மிகு மன்னனே,

உனக்கு செல்வங்கள் பதினாறென்ன -
இருக்கும் எல்லாம் வளமும் நலமும் கிடைத்து
சுதந்திரம் வீசும் மண்ணின் – ஒற்றை தலைவனாய்
எமை காக்கும் உண்மை தலைவனாய்

வாழ்வாங்கு வாழ -
எம் இனத்தின் மொழியின் வழிநின்று
இறையின் அருளுக்கு இறைஞ்சி
மனதார வாழ்த்துகிறோம்!!

- வித்யாசாகர்.

Friday, November 26, 2010

அண்ணைக்கு அன்னை - அறிவுமதி



அழுவதற்கும் முடியாமல்
அழுகின்றேன் அம்மா
உன் தூய மகன் கருவறையைத்
தொழுகின்றேன் அம்மா

என் இனத்தை எழுப்புதற்கே
இனிய மகன் பெற்றெடுத்தாய்
இன்று
எழ முடியா நோய்தன்னை
எதற்கம்மா தத்தெடுத்தாய்?

ஈரய்ந்து மாதந்தான்
உன் பிள்ளை
உன் வயிற்றில் இருந்தான்
பின்பு, ஈழத் தாய் பெற்றெடுக்க
காடென்னும் கருவறைக்குள்
கன காலம்
கன காலம் கரந்தான்

தமிழருக்கே தெரியாமல்
தமிழருக்கே உழைத்தான்
தன் தம்பி தன் தங்கை
தமிழீழம் தனைக் காண
தன்னோடு களமாட அழைத்தான்
தம் நண்பர் கயமைக்கும்
தகவில்லார் சிறுமைக்கும்
தப்பித்துத் தப்பித்தே உழைத்தான்

சிறு துளியும் கறை சொல்ல
முடியாத வெள்ளை
எம் வேர்த் தமிழின்
சீர் மீட்கக் கருவான பிள்ளை

என் தந்தை என் அன்னை
என் பிள்ளை என்றே
எப்போதும் எப்போதும்
இவன் பார்த்ததில்லை

அவருக்குச் சொத்தாகத்
தப்பாகத் தப்பாகத்
துளியேனும் முறை மீறிப்
பொருள் சேர்த்ததில்லை

அத்தனைத் தாய்க்கும்
மகனாய் இருந்தான்
அத்தனைச் சேய்க்கும்
அன்னையாய்ச் சிறந்தான்

புலம்பெயர்ப் பிள்ளைகள்
புத்திக்குள் போனவன்
அவர்தம் பொறுக்கா குளிருக்கும்
போர்வையாய் ஆனவன்

இணையிலா இசையினில்
ஈடிலா ஆடலில்
எம் இனப் பிள்ளையை
ஈடுபடுத்தினான்

இடையறா முயற்சியால்
இடை விடா பயிற்சியால்
உடல்களில் உயிர்களில்
உயிர்த் தமிழ் ஊறிய
உளவியல் உளவியல்
மேடை நடத்தினான்

நம்முடன் வாழ்ந்தவன்
நமக்கென வாழ்ந்ததை
நாமா நாமா
நன்கறிந்தோம்

நா கூசாமல் கூசாமல்
நல்ல அத்தமிழனை
வன்முறையாளனாய்
வாய் குழறிப் பேசியே
வரலாற்றில் பெயரிழந்தோம்

தாய்மொழி அறியாத
தலைமுறை ஒன்றிங்கு
தலைவரை உணர்ந்து எழும்
அன்றுதான்
தக தக தக தக
தக தக தக வென
தமிழினம் உயர்ந்து எழும்

தன் பிள்ளை சொகுசாகத்
தப்பித்துப் போக
ஊர்ப்பிள்ளை வைத்திங்கா களமாடினான்?
போடா போடா
அவன் பிள்ளை களமாடி அழியாத புகழ்சூடி
மாவீரர் பட்டியலில் படமாகினான்

தாய்த் தமிழ்நாட்டில்
வாழ்ந்த தன்
தாயையும் தந்தையையும்
அவசரமாய் அழைத்தாங்கே
குடியேற்றினான்

மனிதமற்ற கயவர்களின்
மரண நெடி நாட்களிலே
அவர்களையும் மக்களுடன்
அலையவிட்டு அலையவிட்டு
அன்பு மகன் அதிலேயும் பழி மாற்றினான்

என்னதான் குறை சொல்ல முடியும்
அம்மா உன் பிள்ளையை
என்றுதான் எவர் வெல்ல முடியும்
இல்லையென்றா இவர் கணக்கு முடியும்
உன் பிள்ளை இல்லையென்றால்
இல்லையென்றால்
இல்லை
என்றால் எங்களுக்கு எப்படித்தான்
இக் கிழக்கு விடியும்

வல்வெட்டித் துறையிலங்கே
வாடிக் கிடப்பவளே
உன் கண் முட்டும் கண்ணீரைக்
கை நீட்டித் துடைக்கின்றோம்
தலைவர்க்குப் பால் கொடுத்த
மார்புகளின் பசி வாங்கித் துடிக்கின்றோம்

ஆயிரம் மருத்துவர்கள்
அம்மா உன் அருகிருந்துத்
தீவிர சிகிச்சைதன்னைச்
சிறப்பாகச் செய்வதற்கு
ஆவலாய்க் காத்திருந்தும்
அறமற்றக் கயவர்களின்
அணை தாண்ட முடியாமல்
அடி மனசில் அடி மனசில்
அய்யோ வெடிக்கின்றோம்

சிங்களரும் உனைத் தேடி
சிரம் தாழ்த்தி
வணங்குகிறார் அம்மா
உன் சிறந்த மகன் தூய்மைக்குச்
சிறிதேனும் இணங்குகிறார்

உறவான தாய்த் தமிழர்
ஊமையாய்ப் பார்த்திருப்போம்
உறவற்ற எவர்களையோ
அன்னையென்றும் அம்மையென்றும்
அனுதினமும் தோத்தரிப்போம்

முள்வேலிக் கம்பிக்குள்
உம் காயங்கள் கொத்திக்
கண்ணீரில் பசியாறிக்
கடல் தாண்டி வந்த
அந்தக் காகங்கள்
உம் கதையைக்
கதறி உரைக்கிறதே

ஏமாறச் சம்மதித்து
எவருக்கும் தலையாட்டும்
எந்திரமாய் ஆனதனால்
எம் சனங்கள் உம் துயரை
உமியளவும் உணராமல்
உறங்கிக் கிடக்கிறதே

உலக அற மன்றம்
ஒரு கேள்வி கேட்கலையே
உம் உரிமைக்குத் தடை நீக்க
ஒரு நீதி வாய்க்கலையே

ஒன்று மட்டும் உறுதியம்மா...
ஈழக் கதவுகளை
என் தாயே என் தாயே
உன் மகன்தான் உன் மகன்தான்
திறப்பான்
உன் ஈர விழியருகில்
என் தாயே என் தாயே
மிக விரைவில் உன் பிள்ளை
உன் பிள்ளை இருப்பான்

- அறிவுமதி.

நன்றி : விகடன்.

Saturday, July 24, 2010

பிரபாகரன் அந்தாதி (கதிர்க்கையன் ஈற்றெடுப்பு!) - 10


விரட்டிவரும் வான்படையை வீழ்த்த விரைந்துன்
முரட்டுப் படையர் முனைந்தார் –திரட்டி
அடித்ததில் ‘‘நாயக’’ வான்தளம் வீழும்
வெடித்(து)உலங்(கு) ஊர்திபல வெந்து! (91)

நாயக –கட்டுநாயக வான்படைத்தளம்

வெந்து தணிந்ததில் விம்மினர்; வீங்கினர்;
நொந்து நொடிந்தனர் நோக்கிலார்; –வந்து
அமைதி உடன்படிக்கை நார்வே அமைக்க
தமைநொந்து கொண்டனரே தாழ்ந்து! (92)

தாழப் பிறந்தோர் தரைமீதில் பல்லாண்டு
வாழப் பிறந்தயெமை வாட்டினார் –பாழும்
சிறுமதியர்க்(கு) இந்தச் சிறுசெயலை நீயே
முரசறைந்து சுட்டினாய் முன்பு! (93)

முன்னே அமைதி முரசினொலி ஓயும்முன்
பின்னே படைநடத்திப் பாய்ந்திடுவார் –என்னே
அமைதி குலைத்தாயென்(று) ஆங்கவரைக் கேட்க
உமையன்றி வேறிலரே ஓர்ந்து! (94)

ஓர்ந்து பிரித்தார்நம் ஒப்பில் படையணியை;
சேர்ந்தான் ‘அருளன்’அச் சீயருடன் –நேர்ந்த
பழியறியும் பண்பில்லான் பாழும் வழிசென்(று)
இழிந்தோர்க்(கு) உதவினனே இங்கு! (95)

அருளன் –கருணா; சீயர் –சிங்கத்திடமிருந்து பிறந்தவராகச் சொல்லிக்
கொள்கின்ற சிங்களர்.

இங்குன் படைப்பிரிவை ஏற்று நடத்தியவன்
அங்குளவு சொல்லி அடிவீழ்ந்தான் –எங்கும்
இவன்போல் இரண்டகனை இவ்வுலகம் காணா;
இவன்போல் இவனே எனும்! (96)

====

ஏற்றிப் பிடித்தார் இனப்பகையை; இந்தநிலை
மாற்றத் துடித்த மறவனுனைத் –தூற்றித்
தடைபோடும் மண்ணுலகம்; தாங்கியதை வென்று
நடைபோடும் நம்மியக்கம் நன்கு! (97)

நலிவு புரிந்தும், நமைத்தடை செய்தும்
களிக்கின்ற காடையர் காண -உலகம்
வியக்கும் விதத்தில் விரிநீர் நடுவில்
இயக்கம் வளர்த்தாய் இயன்று! (98)

இயல்வது செய்தெம் இனத்தவரைக் காக்க
முயல்வது போலும் மொழிவார் –முயல்வதெம்
மக்களை மாய்க்கும் வழியறிய வேயந்தக்
குக்கலைக் கொல்வதுன் கோள்! (99)

குக்கள் –நாய்கள்; கோள் –குறிக்கோள்.

கோரிக்கை வைத்தும் கொடுத்திடார்; எம்மக்கள்
வாரிக்கை கூப்பியும் வந்துதவார்; -சீறித்
தடைபோடும் ஆங்கு நுகர்பொருட்கே; மீறி
நடைபோடும் நம்மினம் நன்கு! (100)

பிரபாகரன் அந்தாதி (கதிர்க்கையன் ஈற்றெடுப்பு!) - 9


முனைநாள் குமரி முழுதும் அழித்தும்
தணியாப் பசியால் தவித்துத் –துணிவாய்
எழுந்ததோ பேரலை இன்னல் இழைக்கப்
பொழுது புலரும்முன் பூத்து? (81)

பூத்துக் குலுங்கும் பொழிலைப் புயற்காற்று
வீழ்த்திச் சிதைக்க விழைவதுபோல் –கூத்தொன்றை
ஆழிசூழ் பேரலை ஆங்கரங்(கு) ஏற்றியதே!
ஊழிசூழ்ந் தன்ன உயர்ந்து! (82)

பொழில் –சோலை; ஆழி –கடல்; ஊழி –அழிவுக்காலம்.

உயிர்போய்க் கிடந்த உடல்கள் அகற்றி
உயிர்த்தோர்க்(கு) உதவ உலகம் –முயன்றால்
தடுத்தவ் உதவியைத் தன்வயம் கொள்ளும்
கெடுமனம் கொண்ட குலம்! (83)

குலக்கா வலனே! குடிகள் குறையை
விலக்கத் துடித்தாய் விரைந்தே –நிலங்காக்கும்
முப்படையை ஏவி முதலுதவி செய்கென்றாய்
அப்படையும் வந்துதவிற்(று) ஆங்கு! (84)

ஆழி இழைத்த அழிவின் களையெடுத்து
மேழி பிடித்ததன் மேலுழுதாய் –பாழின்
வழிவந்த காடையர்கள் கண்டு மருண்டு
மொழியற்று நின்றார் முனிந்து! (85)

ஆழி –கடல்; மேழி –ஏரு.

முனைநாள் முதலாய் முடிவில்லாப் போரை
வினையால் விரித்தாரவ் வீணர் –புனைகதையாம்
மாகுலத்தைக் கற்று மதங்கொண்டார்; கொண்டதனால்
சாகுலத்தர் ஆனார் சரிந்து! (86)

மாகுலம் –மகாவமிசம் (சிங்களர்களின் வேதம் எனப் பீற்றப் படுகின்ற
புனைநூல்); சாகுலத்தர் –அழியும் இனத்தவர்.

சரிக்குச் சரிநின்று சாய்க்கப் பிறந்தாய்
அரிமுகத்தர்க்(கு) அச்சம் அதனால்; –விரிகற்றை
பிஞ்சோலை அன்னஇளம் பிள்ளைகளைக் கொன்றார்
செஞ்சோலை இல்லிற்குச் சென்று! (87)

சென்றெதிர்க்க நெஞ்சில் திறனில்லாக் காடையர்கள்
கொன்றொழிக்க வான்வழியே குண்டெறிந்தார் –நின்றிருக்கும்
கூரை சிதற, குடிசையுள்ளோர் செத்தொழிய
ஊரை அழித்தார் உவந்து! (88)

உவக்காண் உடலின் உறுப்பிழந்தோர் ஓலம்;
இவக்காண் இறந்தோரை என்றே –உவப்பான்
உலங்கூர்தி ஓட்டுநனும் உள்ளிருக்கும் மற்றை
விலங்கும்ஆம் என்னும் விரைந்து! (89)

விரட்டிவரும் வான்படையை வீழ்த்த விரைந்துன்
முரட்டுப் படையர் முனைந்தார் –திரட்டி
அடித்ததில் ‘‘நாயக’’ வான்தளம் வீழும்
வெடித்(து)உலங்(கு) ஊர்திபல வெந்து! (90)

பிரபாகரன் அந்தாதி (கதிர்க்கையன் ஈற்றெடுப்பு!) - 8


தனிவிடப் பட்ட தமிழினம்பா(ர்) எங்கும்
துணிவுடன் ஏகித் துளிர்த்தார் –இனியும்நாம்
ஏமாளி யாதல் இழிவென்(று) இசைந்தேற்றார்
கோமானாய் உன்னைக் குறித்து! (71)

இசைந்து –உடன்பட்டு; கோமான் –அரசன்.

குறிவைத்துக் கொன்றார் கொடியர்; அவரைப்
பொறிவைத்து வெல்லல் பொருந்தும் –நெறிவைத்த
நெஞ்சினாய்! எம்மின் நிறைகாக்க வேண்டிநீ
நஞ்சணிந்து கொண்டாய் நயந்து! (72)

நயந்துசிவன் அற்றைநாள் நஞ்சினை ஏற்றான்;
வியப்பின் முதலே! விரும்பி –அயிர்க்கா(து)
ஒருநீளத் தாம்பில் உணர்ந்தேற்ற நீயும்
கருநீலத் தொண்டையன் காண்! (73)

அயிர்க்காது –ஐயமில்லாமல்; தாம்பு –கயிறு; கருநீலத் தொண்டையன் –சிவன்.

காணக் கிடைக்காக் கவினே! உனையேயெம்
மாணத் துணையாய் மனமேற்றோம்-மான
மறவா! எமையாள் இறைவா!வா! நீயே
இறவாப் புகழின் இருப்பு! (74)

கவின் –அழகு; மாணம் –மாட்சிமை.

இரும்பு மனிதா இதுகேள்! எமையுன்
அரும்பு மனத்தால் அணைத்தாய் –துரும்பும்
எமைத்தீண்டா வண்ணம் எழுந்தருள் செய்தாய்
உமையேற்றோம் உள்ளம் உவந்து! (75)

உவட்டும் உடலர்; உளத்தில் கயவர்;
எவர்க்கும் அடங்கா இழிந்தோர்த் –தவறெலாம்
சொல்லி அடித்தாய்இத் தொல்லுலகில் உன்புகழைச்
சொல்லும்வல் வெட்டித் துறை! (76)

உவட்டுதல் –அருவருக்கத்தக்க

துரையப்ப னைக்கொன்ற தூயவனே! பொன்னின்
வரை*யொத்த தோளுடைய மள்ளா!* –வரைவில்*
உறுதி மனத்தில் உடையோய்!எஞ் ஞான்றும்*
இறுதியுனக்(கு) உண்டோ இயம்பு! (77)

மள்ளன் –மறவன்; வரை –மலை; வரைவில் –முடிவில்லாத; எஞ்ஞான்றும் –எப்பொழுதும்.

இயக்கம் அழிக்க இயன்றார் எனினும்
வியக்கும் வகையில் வளர்த்தாய் –தயக்கம்
அடைந்த குழுமாட்டுக் கூட்டத்தார் அஞ்சி
நடைகட்டிக் கொண்டார் நலிந்து! (78)

குழுமாடு –காடையர்.


நன்புணர்ச்சி தன்னில் நயங்கொள்ளாக் காடையர்கள்
வன்புணர்ச்சி செய்தே மகிழ்வெய்வார் –முன்புணர்ச்சி
பொங்க படைநடத்திப் பொய்யர் புறங்காண
வெங்கொடுமை தீர்த்தாய் விரைந்து! (79)

வன்புணர்ச்சி -கற்பழிப்பு

விரிகடல் பேரலை விண்ணில் எழுந்து
கரைகடந்(து) ஊரைக் கடக்கும் –திரையில்
அகப்பட்(டு) உழன்றோர்க்(கு) அரணாய் அழிவில்
முகங்கொடுத்து நின்றாய் முனைந்து! (81)

திரை –அலை.