
18.8.11 அன்று நடந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தொல்.திருமாவளவன் பேசுகையில்,
பிரதமர் அவர்கள், தனது நீண்ட நெடிய அறிக்கையில் அத்தகைய சந்தர்ப்ப சூழ்நிலையில் அன்னா அசாராவை கைது செய்ய நேரிட்டது என்று விரிவாக எடுத்துரைத்தார். அந்த அறிக்கையில் அன்னா அசாரேவிற்கு உண்ணாவிரதம் இருக்க அனுமதியளிக்கபட்டதாகவும் ஆனால் அதில் சில நிபந்தனைகள் அவருக்கு ஏற்புடையதாக இல்லையென்றும் அவரது பிடிவாதமான நிலைபாட்டால், அவர் மேற்கொள்ள இருந்த சில செயல்பாடுகள் சட்டம்,ஒழுங்கை பாதித்து விடுமோ என்கின்ற ஐயத்தில் அவரை கைது செய்யும் நிலைக்கு அரசு தள்ளபட்டது என தனது நீண்ட அறிக்கையில் தெரிவித்தார்.
மேலும் இந்த அரசு அமைதியான போராட்டங்களுக்கு எதிரானது அல்ல என குறிப்பிட்டார். சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவே இந்த நடவடிக்கைகள் எடுக்கபட்டது என்று பிரதமர் சொன்னாலும் கூட, இந்த சூழலை இன்னும் திறன்பட கையாண்டு இருக்கலாம். இதுபோன்ற கைது நடவடிக்கையின் மூலம் மக்கள் மத்தியில் இந்த அரசின் மீது ஓர் எதிர்மறையான எண்ணம் தோன்றியுள்ளது.
ஆளும் காங்கிரஸ் கட்சி, ஊழலை ஒழிக்க முன்வரவில்லை என்ற ஓர் கருத்து மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. ஏனோ எதிர்கட்சிகள் மட்டுமே ஊழலை ஒழிக்க மெனக்கிட்டு எதிர்த்து போராடி வருவதைப்போல ஒரு பொய் தோற்றத்தை உருவாக்கியுள்ளது. அவர்கள் இந்த சூழ்நிலையை தங்களுக்கு வசமாக பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முற்பட்டுள்ளார்கள்.
அன்னா அசாராவை கைது செய்ததற்கு பதிலாக அவரை வீட்டு காவலில் வைத்து இருக்கலாம் அல்லது அவர்களின் உண்ணாவிரதத்தை தொடர அனுமதித்து, அவருடன் பேச்சுவார்த்தை நடத்திருக்கலாம். இந்த பிரச்னையை தக்க வழிமுறையில் கையாண்டு சுமூகமாக அதே நேரத்தில் ஒரே அடியாக தீர்த்து வைத்திருக்கலாம். ஆனால் இதனை இப்போது கையாண்ட முறையினால் அரசுக்கு எதிரான ஒரு கருத்தை உருவாக்கியுள்ளது. இந்த அவையினை இன்றைக்கு வழிநடத்துவது ஆளும் கூட்டணியா? அல்லது எதிர்க்கட்சிகளா என்கின்ற ஒரு தெளிவற்ற நிலை உள்ளது.
எதிர்கட்சியினர் இந்த அரசை அடிக்கடி பணையம் வைக்கின்றனர் .அவர்கள் இந்த அவையை தாங்கள் இழுத்த இழுப்பிற்கு ஏற்றவாரு செயல்ப்பட வேண்டுமென நினைகிறார்கள், தொடர்ந்து இந்த அவையினை செயலிழுக்க வைக்கின்றனர்.
சொந்த மண்ணில், மனித தன்மையற்ற முறையில் இலங்கையில் பரிதாபத்திற்கும், பட்சதாபதிற்கும் உரிய அப்பாவி ஈழத்தமிழர்களின் நிலையினை எடுத்துரைத்து, அவர்களுக்காக இந்த அவையிலே குரல் எழுப்பமுடியாத ஒரு மோசமான நிலை இதனால் ஏற்பட்டுள்ளது என்பதை கனத்த இதயத்தோடு இந்த அவையில் பதிவு செய்கின்றேன்.
பல லட்சம் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகததான் நாங்கள் இந்த அவையிலே இருகின்றோம். இலட்சகணக்கான தமிழர்கள் இலங்கையில் வதைப்படும் நிலைகுறித்து, இந்த அவையில் குரல் எழுப்புவதற்கு எங்களுக்கு ஜனநாயக வாய்ப்பு மறுக்கப்படுகிறது. எதிர்கட்சிகள் தான்தோன்றி தனமாக நடந்து கொள்வதும், அசாரே கைதின் மூலம் ஏற்பட்டுள்ள சுழலும் அவர் விடுவிக்கப்பட்ட முறையும் இந்த அரசு, எதிர்கட்சியினரின் இதுபோன்ற போராட்டத்தின் அழுத்தத்திற்கு பணிந்துவிட்டது என்றே தோன்றுகிறது.
நான் இந்த அரசிடம் வழியுறுத்துவது, கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது, ஊழலை எதிர்த்து போராடுபவர்கள்மீது அல்ல ஊழலுக்கு எதிராகத்தான் இன்னும் குறிப்பாக ஊழலுக்கான ஆணிவேராக இருப்பவர்கள் மீதும் ஊழல்வாதிகள் மீதும்தான் இருக்க வேண்டுமென்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது.
எனது இந்த நிலையினை எதிர்க்கட்சி ,ஆளும்கட்சி சார்ந்த இருவரிசையில் உள்ளவர்களும் ஏற்றுகொள்வார்கள் என நம்புகிறேன் இன்றைக்கு எதிர்கட்சியினர், எதோ அவர்கள்தான் ஊழலை வேரோடு பிடிங்கி ஏறிய வந்தவர்கள் போன்ற ஒரு போலித்தனமான தோற்றத்தை உருவாக்கி வருகின்றனர்.
இந்த மாயையை உடைத்து ஏறிய வேண்டும் .நாம் அனைவரும் நம் அறிவாற்றலை ஓன்று சேர்த்து ஊழலை, இந்த சமூகத்தில் இருந்து துடைத்து ஏறிய வேண்டும். இதற்கு நாம் ஊழலில் ஆணிவேரை கண்டறிய வேண்டும் .ஏழ்மையும் ஊழலும் ஒரே நாணையத்தின் இருவேறு பக்கங்களாகும் ,ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால் தேர்தல் முறையில் பல புரட்சிகரமான திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும். மிகப்பெரிய தொழில் நிறுவனங்களும் ,வியாபார நிறுவனங்களும் தான் பல முக்கிய வேட்பாளர்களுக்கும் நிதி ஆதாரம் அளித்து அதன்மூலம் அவர்களை கைபாவையாக்கி தங்கள் சொற்படி அரசை நடத்துகிறார்கள் ,முதலாளிகளும்,தொழில் அதிபர்களும்,தேர்தலில் பணத்தை தண்ணீராக வாரியிறைத்து ஊழலுக்கு வழிவகுக்கிறார்கள் எனவே இந்த அரசு ஊழலுக்கான இந்த ஊற்று கண்ணை அடைத்து ஊழலை முளையிலே கிள்ளி ஏறிய உறுதியான நடவடிக்கைகளை திறன்பட மேற்கொள்ள வேண்டும் என்பது தான் என் விருப்பம்.
ஒப்பந்த புள்ளிகள் ஒப்பந்த பணிகள் ஏலம் முறைகள் போன்றவற்றில் தற்போது உள்ள முறைகளை நெறிமுறைப்படுத்தி வெளிபடையாக்கி ஊழலுக்கான வாய்ப்பினை முற்றிலுமாக தவிர்க்கலாம். கருப்பு பணத்தைமுழுவதுமாக வெளிக்கொண்டுவர வேண்டும்.
ஊழல் என்பது மனித வரலாற்றில் அங்கமாக இருந்து வருகிறது. அதை எளிதில் வேரறுக்க முடியுமா ? ,வெறும் சட்டத்தினால் இதனை அழித்துவிடமுடியாது. நாம் ஏற்கனவே தடா. போடா போன்ற கொடும் சட்டங்கள் நடைமுறைபடுத்தி பயங்கரவாதத்தையும் ,வன்முறையும் கட்டுபடுத்த முடியவில்லை. எனவே கடுமையான சட்டங்கள் மட்டும் ஊழலை ஒழிக்க உதவாது திருவள்ளுவர் அவர்கள் "நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும், வாய்நாடி வாய்ப்பச் செயல்" என்கின்ற குரலில் நோயினை தீர்க்க அடிப்படை அணுகுமுறை அந்த நோய்க்கான மூலகாரணத்தை அறிவதுதான். என அறிவார்ந்த முறையில் எடுத்துரைத்து இருப்பதை மேற்கொள்ளகாட்ட விரும்புகிறேன்.
நாம் தக்க நடவடிக்கையின்மூலம் ஊழலுக்கு காரணமானவர்களின் இந்த சமூகத்தை ஊழல் மயமாக்குபவர்கள் யார் என்பதை ஊழல்வாதிகள் யார் என்பதையும்கண்டறிந்து ஊழலை இந்த சமூகத்தில் இருந்து முற்றிலுமாக துடைத்து ஏறிய வேண்டும் .ஊழல் முதலாளிகள் ,தொழில் அதிபர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என இந்த அரசை வழியுருத்துகிறேன் ஜென்லோப் சட்டமாக இருந்தாலும் லோக்பால் சட்டமாக இருந்தாலும் அதனால் ஊழலை வேரறுக்க முடியாது.
ஊழலுக்கான ஆணிவேர் கண்டறியப்படுவதோடு மக்களின் அடிப்படை மனநிலையும் மாறவேண்டும் தொழில் நிறுவனங்கள் ,முதலாளி மீதான பிடியினை இந்த அரசு இருக்கவேண்டுமென வழியுருத்துகிறேன்.
மேலும் இந்த விவகாரம் குறித்து ஒரு சமாதான உடன்படிக்கை ஏற்படுத்தும் வகையில் அன்னா அசாரே உடன் பேச்சுவார்த்தை தொடங்கி ஊழல் பிரச்சனையை திறன்பட கையாண்டு முழுமையாக ஒழிக்க முற்பட வேண்டும்.
இவ்வாறு திருமாவளவன் பேசினார்.
No comments:
Post a Comment