Labels

Tuesday, August 30, 2011

தூக்குக்கு எதிர்ப்பு : நாடாளுமன்றத்தில் திருமாவளவன் முழக்கம்



ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், முருகன்,சாந்தன் ஆகிய மூவருக்கும் வரும் செப்டம்பர் 9ம் தேதி தூக்கு தண்டனை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து இவர்களின் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் 26.8.2011 அன்று நாடாளுமன்றத்தில் முழுக்கமிட்டார்.

மூவரின் தூக்கை ரத்து செய்ய வேண்டும் என்று ஆங்கிலத்தில் எழுதிய அட்டையை ஏந்தியபடி நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார்.

உள்ளே சென்று, அட்டையை உயர்த்தி பிடித்து மூவரின் தூக்கை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று ஆங்கிலத்தில் முழக்கமிட்டார்.பின்னர் வெளிநடப்பு செய்தார்.

வெளியே வந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’பேரறிவாளன், முருகன்,சாந்தன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை மத்திய அரசு உடனே ரத்து செய்து விடுதலை செய்ய வேண்டும்.

மரண தண்டனை கொள்கையை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினேன். இதற்காக 26.8.2011 அன்று நாடாளுமன்ற அவையில் இருந்து வெளிநடப்பு செய்தேன்
’’ என்று தெரிவித்தார்.

பேரறிவாளன், சாந்தன், முருகனின் உயிரை காப்பாற்ற குடியரசு தலைவர், பிரதமருக்கு திருமாவளவன் கடிதம் :

தமிழகத்தில் நடந்த ராஜீவ்காந்தி கொலைவழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 20 ஆண்டுகளாக சிறை தண்டனையை கழித்த பேரறிவாளன் சாந்தன், முருகன் ஆகியோர் வரும் செப்டம்பர் 9 அன்று தூக்கில் இடப்படுவார்கள் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தமிழகமெங்கும் மரணத் தண்டனைக்கு எதிரான குரல் வெடித்து வருகிறது .மரண தண்டனையை கைவிட வேண்டும் என்றும், பேரறிவாளன், சாந்தன், முருகனின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்றும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.


இத்தகைய சூழ்நிலையில் விடுதலைச்சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் மரண தண்டனை ஒழிப்பு தொடர்பாக மக்களவையில் விவாதிக்க வேண்டுமென 26.8.2011 அன்று குரல் எழுப்பினார். அத்துடன் இந்திய குடியரசு தலைவர் பிரத்திபா பாட்டில் அவர்களுக்கும், இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கும், திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார்.


20 ஆண்டுகள் சிறை தண்டனையை கழித்து இருக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு மரண தண்டனை வழங்குவது ஒரு குற்றத்திற்கு இரண்டு தண்டனை வழங்குவதாக அமைந்துவிடும் என்று சுட்டிகாட்டி இருபத்துடன், மரண தண்டனை கொள்கையை இந்திய அரசு முழுமையாக கைவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து அம்மடல் எழுத்தபட்டுள்ளன. நாடாளுமன்ற செயலகத்தின் மூலம் குடியரசு தலைவருக்கும், தலைமை அமைச்சருக்கும் அவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment