Labels

Tuesday, August 30, 2011

பேரறிவாளன், சாந்தன், முருகனின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய தமிழக அரசால் முடியும்: வைகோ



ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனையை ரத்து செய்ய தமிழக அரசால் முடியும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.

விருதுநகரில் நடைபெற்ற மதிமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர்,


பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனையை ரத்து செய்ய தமிழக அரசால் முடியும். இதுகுறித்து மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்த வேண்டும். இந்த மூன்று பேரின் உயிரை காப்பாற்றுங்கள். கருணையோடு காப்பாற்றுங்கள். சட்டத்திலே இடம் இருக்கிறது. மத்திய அரசை நீங்கள் இந்த மூன்று பேரின் மரண தண்டனையை நிறைவேற்றக்கூடாது ரத்து செய்ய வேண்டும். முதலில் தடை பிறகு ரத்து என்ற கோரிக்கையை வையுங்கள். மூவரின் உயிரைக் காக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தமிழர்களின் மனதில் இடியாக தாக்கியுள்ளது - கொளத்தூர் மணி :

வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே 23.08.2011 அன்று மதியம் மதிமுக, விடுதலை சிறுத்தைகள் மற்றும் திராவிட இயக்க தமிழர் பேரவை, நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் தூக்குதண்டனையை அரசு ரத்து செய்ய வேண்டும் என கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு உரையாற்றினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம், ராஜிவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, கடந்த 20 ஆண்டுகளாக சிறையில் வாடி வருகின்றனர்.

இவர்களது கருணை மனு நிராகரிக்கப்பட்டது தமிழர்களின் மனதில் இடியாக தாக்கியுள்ளது. உலக நாடுகளில் தூக்கு தண்டனை ஒழிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கடந்த 13 ஆண்டுகளாக யாருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை.

தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
.’’என்று கூறினார்.

No comments:

Post a Comment