Labels

Tuesday, August 30, 2011

குடும்பத்துடன் தற்கொலை செய்வோம் : குயில்தாசன்



ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளனுக்கு வரும் செப்டம்பர் 9ம் தேதி தூக்கு தண்டனை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜோலார்பேட்டையில் பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் உருக்கமாக, ‘’செய்யாத குற்றத்திற்காக மகன் பேரறிவாளன் 21 ஆண்டாக சிறையில் வாடுகிறான்.

மகன் தூக்கிலிடப்படுவதற்கு முன்பே சிறை முன் குடும்பத்துடன் தற்கொலை செய்வோம்
’’ என்று தெரிவித்தார்.

மூன்று பேரின் உயிரைக் காப்பாற்றக்கோரி, ஜோலார் பேட்டை பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் சார்பில் உண்ணாவிரம் நடைபெற்றது. பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் மற்றும் சகோதரர்கள், உறவினர்கள் ஆகியோர் இந்த உண்ணாவிரத்தில் பங்கேற்றுள்ளனர்.


தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூன்று பேரின் உரிரை காப்பாற்றுவது தமிழக முதல் அமைச்சர் கையில் தான் உள்ளது என்று பேரறிவாளனின் தந்தை தெரிவித்தார். தனது மகனை காப்பாற்றி தன்னிடம் ஒப்படைக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

No comments:

Post a Comment