Labels

Tuesday, August 30, 2011

ராஜிவ் கொலை குற்றவாளிகளை தூக்கு தண்டனையிலிருந்து விடுவிக்க முன்வர வேண்டும் : கலைஞர் வேண்டுகோள்



திமுக தலைவர் கருணாநிதி 26 .08 .2011 அன்று வெளியிட்ட அறிக்கை:

ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகள் என குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகிய மூன்று பேரை ஏழு நாட்களில் தூக்கிலிட வேண்டும் என்று குடியரசு தலைவர் உத்தரவு வந்ததாக செய்தியாளர்கள் என்னிடம் கேட்டனர். நான் தூக்கு தண்டனை என்பதே கூடாது என்று பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்துள்ளேன். அது இந்த மூன்று பேருக்கும் பொருந்தும். குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் ஏற்கெனவே இருபது ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டனர்.

அவர்கள் செய்தது குற்றம் என்றாலும் கூட அவர்கள் சிறையில் இருந்ததை கருத்தில்கொண்டு அவர்களை தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்ற நம்மல் முடிந்த முயற்சிகளை எல்லாம் மேற்கொள்ள வேண்டியது அவசர அவசியமாகும். தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் 3 பேரின் உயிரை காப்பாற்ற உருக்கத்துடன் செயல்பட வேண்டும். காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர் சோனியா காந்தியும் இந்த பிரச்சனையில் அக்கறையுடன் 3 உயிர்களை காக்க முன் வரவேண்டும். இதுகுறித்து முடி வெடுக்க மத்திய அரசும், மாநில அரசும் இந்த பிரச்சனையில் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு இந்த 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும்.


இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment