Labels

Tuesday, June 29, 2010

சிறிலங்கா அரசின் நல்லெண்ண முயற்சிகள் கபட நோக்கம் கொண்டவை – தமிழீழ விடுதலைப் புலிகள் அறிக்கை


சிறிலங்கா அரசின் நல்லெண்ண முயற்சிகள் கபட நோக்கம் கொண்டவை என்று தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைச்செயலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

தலைமைச் செயலகம்
தமிழீழ விடுதலைப் புலிகள்
தமிழீழம்.
29.06.2010

சிறிலங்கா அரசின் நல்லெண்ண முயற்சிகள் கபட நோக்கம் கொண்டவை.

அன்பான தமிழ் பேசும் மக்களே!

சிறிலங்கா அரசு முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் சர்வதேசத்தின் நெருக்கடிகளை எதிர்கொண்டுவருகின்ற அதே வேளை எம் உரிமைக்கான போராட்டத்தினை நசுக்க தொடர்ந்தும் திடசங்கற்பம் பூண்டுள்ளது.

எம் மக்களின் உரிமைக்கான போராட்டம் என்பது சர்வதேச ரீதியாக பல வழிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எமது இயக்கத்தினை அழிப்பதன் மூலம் தமிழர்களின் போராட்டத்தின் இலட்சியத்தை அழித்துவிடலாம் என்ற சிங்கள அரசின் நோக்கம் எடுபடவில்லை.

இத்தகைய சூழலில் சிறிலங்கா அரசு பல்வேறு நரித்தனம் கொண்ட தந்திரத் திட்டங்களை வகுத்து நகர்த்தி வருகின்றதை எம்மக்கள் நன்கு அறிவர்.

சர்வதேச ரீதியாக எழுந்துள்ள அழுத்தங்களைத் தணிப்பது சர்வதேச உதவிகளை தமிழர்களின் பேரால் பெற்று சிங்களக் குடியேற்றங்களைப் பெருக்குவது இன நல்லிணக்கம் என்ற பேரிலும் அபிவிருத்தி என்ற பேரிலும் எம் உரிமைக்கான போராட்டத்தினை அடியோடு இல்லாமல் செய்வது ஆகிய நீண்டகால திட்டங்களை சிறிலங்கா அரசு நடைமுறைப்படுத்தி வருகின்றது.

இத்தகைய சிங்களப் பேரினவாதத்தின் சூழ்ச்சி நடவடிக்கைகளுக்குப் புலம்பெயர் தமிழர்கள் பெரும் தடையாக இருப்பதனை சிறிலங்கா அரசாங்கம் நன்கு கணித்துள்ளது. முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் இருந்த விரக்தி குழப்பங்கள்இ கருத்து முரண்பாடுகளைக் களைந்து ஆரோக்கியமான முறையில் ஒன்றிணைந்து செயற்படத் தொடங்கிய புலம்பெயர் தமிழரின் செயற்பாடுகள் சிறிலங்கா அரசாங்கத்துக்குப் பெரும் தலையிடியாக அமைந்து வருகின்றன. இதன்காரணத்தால் புலம்பெயர் தமிழர் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தி அவர்களின் ஒற்றுமையைக் குலைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது சிறிலங்கா அரசாங்கம். அதன் ஒருபகுதியாக சிறையிலுள்ள போராளிகள் சிலரைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்தி சில திட்டங்களைச் செயற்படுத்தி புலம்பெயர் மக்களின் ஒருதொகுதியைத் தம் வசப்படுத்தி வளங்களை உள்வாங்க முனைகிறது. இதன்மூலம் குழப்பங்களை ஏற்படுத்தி எமது ஒற்றுமையைச் சிதைத்து தமிழரின் உரிமைக்கான போராட்டத்தினையும் புலம்பெயர் தேசங்களில் நசுக்க எண்ணியுள்ளது. இதன் வெளிப்பாடாகவே சிறிலங்கா அரசாங்கத்தால் சில நகர்வுகள் அண்மையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

போராளிகளை விடுவிப்பதற்கும் தாயக மக்களின் துயரங்களைப் போக்குவதற்கும் எமது இயக்கமும் புலம்பெயர் மக்களும் விட்டுக் கொடுப்புக்களுக்குத் தயாராக இருக்கின்றார்கள் என்ற நல்ல நோக்கினை சிறிலங்கா அரசாங்கம் கபடத்தனமாகப் பயன்படுத்த முனைகிறது. அதற்காக தமிழ்மக்களின் எதிர்பார்ப்பைப் பயன்படுத்தி தம்வசப்படுத்தும் உளவியற்போரை சிறிலங்கா அரசு கையாளத் தொடங்கியுள்ளது.

தமிழ்மக்களுக்கு நன்மை செய்யப் போவதாகக் கூறும் சிங்கள அரசாங்கம் செய்தவை,செய்துகொண்டிருப்பவை என்ன?

யுத்தத்தின்போது ஈவிரக்கமற்ற முறையில் எமது மக்களைக் கொன்றுகுவித்தது. சரணடைந்தவர்களைக் கொடூரமாகக் கொலைசெய்தது. ஊடகங்களைச் சுயாதீனமாகச் செயற்படவிடாமல் தடுத்தது. சரணடைந்தவர்கள் குறித்த முழுமையான விபரங்களை இன்றுவரை வெளிப்படுத்தாமலுள்ளது. நாளாந்தம் பாலியல் வல்லுறவு சித்திரவதை கொலை என்று தடுப்புக்காவலிலுள்ளவர்களைப் பலியாக்கிக் கொண்டிருக்கிறது. தொண்டு நிறுவனங்களைச் சுதந்திரமாகச் செயற்பட விடாது தடுப்பது மட்டுமன்றி போர்க்குற்றவியல் விசாரணை தொடர்பான பன்னாட்டு முயற்சிகளை முற்றாக உதறித்தள்ளிக் கொண்டிருக்கிறது இந்தச் சிறிலங்கா அரசாங்கம்

இதே அரசாங்கம் தடுப்புக் காவலிலுள்ள போராளிகள் சிலரை விடுவிப்பது மக்களின் புனர்வாழ்வு அபிவிருத்தி என்ற திட்டங்களைக் கபட நோக்குடன் பயன்படுத்தி எமது மக்களை வசியப்படுத்த முயல்கிறது. தடுப்புக்காவலிலுள்ளவர்களை விடுவிப்பது என்பது முற்றுமுழுதாக சிறிலங்கா அரசின் கையிலுள்ள விடயம்; அதற்கு எந்தத் தடையுமே இல்லை. அது குறித்துப் பேசுவதானாற்கூட தாயகத்தில் இதே கோரிக்கைகளை முன்வைத்த தமிழ் அரசியற்கட்சிகளுடன் பேசாமல் புலம்பெயர் தேசத்திலிருந்து தனிநபர்கள் சிலரை அழைத்துப்

பேசவேண்டிய தேவையில்லை. இதுவொரு தமிழ்மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் முயற்சியாகவும் தம்மீதான அழுத்தங்களைத் தணிக்க சிறிலங்கா அரசு ஆடும் ஒரு நாடகமாகவுமே பார்க்கப்பட வேண்டும்.

தமிழ்மக்கள் மேல் அக்கறையும் அவர்களின் துயரங்களைப் போக்க வேண்டுமென்ற விருப்பும் உண்மையாகவே சிறிலங்கா அரசாங்கத்துக்கு இருக்குமானால்

*சிறிலங்கா அரசாங்கம் அவசரகால சட்டத்தினையும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தினையும் நீக்கவேண்டும்.
ழூ தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்க வேண்டும்.

*ஐயத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பொதுமக்களையும் மனிதாபிமானப் பணியாளர்களையும் விடுவிக்க வேண்டும்.

*இன்னமும் மீளக் குடியமர்த்தப்படாமல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்களனைவரையும் அவரவரின் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்த வேண்டும்.

*பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்களையும் உள்ளூர்த் தொண்டு நிறுவனங்களையும் தமிழர் தாயகத்தில் சுதந்திரமாக அபிவிருத்திப் பணிபுரிய அனுமதிக்க வேண்டும்.

இவ் அனைத்துச் செயற்பாடுகளும் வெளிப்படையாக இடம்பெறவேண்டும். அத்தோடு தாயகத்திலுள்ள தமிழர் பிரதிநிதிகளுடன் இணைந்து இவற்றைச் செய்யவேண்டும். புலம்பெயர் தமிழர்களுடன் இணைந்து செய்யப்பட வேண்டிய பணிகளுக்கென அணுகப்பட வேண்டியவர்கள் அதற்கெனவுள்ள மக்கள் கட்டமைப்புக்களேயன்றி தனிநபர்களல்லர். இவ்வாறான செயற்பாடுகளை வெளிப்படைத்தன்மையுடன் செய்யும்போது உலகத்தமிழர்களும் அதற்கு முன்நின்று உழைப்பார்கள்.

ஆனால் சிறிலங்கா அரசாங்கமோ மிகமிக இரகசியமாக சிறையில் கைதிகளாகவுள்ள எமது இயக்கத்தைச் சேர்ந்த சிலருடனும் வெளிநாட்டில் இருந்து அண்மையிற் சென்ற தனிநபர்கள் சிலருடனும் சேர்ந்து திரை மறைவில் சில செயற்பாடுகளை முன்னெடுப்பது உள்நோக்கம் கொண்டவை. ஆகவே இந்தக் கபடநோக்கம் கொண்ட சிறிலங்கா அரசின் முயற்சிகள் தொடர்பில் புலம்பெயர் மக்கள் மிக விழிப்புடனும் கூட்டுப்பொறுப்புணர்வுடனும் செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றோம். அத்தோடு மக்கள் பிரிதிநிதிகளைப் புறந்தள்ளி தனிநபர்களைக் கொண்டு காரியமாற்றும் சிறிலங்கா அரசின் இந்தக் கபட முயற்சியினை பன்னாட்டு அமைப்புக்கள் மற்றும் அரசுப் பிரதிநிதிகள் சரியாக விளங்கிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இதேவேளை சிறிலங்கா அரசின் இந்தச் சூழ்ச்சிக்குப் பலியாகிஇ நல்லெண்ண அடிப்படையில் சிறிலங்கா அரசின் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிக் கொண்டிருக்கும் வழங்க முன்வந்திருக்கும் புலம்பெயர்ந்த தனிநபர்கள் சிறிலங்கா அரசின் கபடத்தனத்தை விளங்கிக் கொண்டு விழிப்புணர்வோடு செயற்பட்டு அரசின் சதிக்குப் பலியாகாமல் இருக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

சிலருக்குப் பொதுமன்னிப்பளித்து அவர்களைக் கொண்டு சில நடவடிக்கைகளை மேற்கொண்டும் அபிவிருத்தியென்ற பெயரில் சலுகைகளை வழங்கியும் அரசியல் இலாபம் தேடமுனையும் சிறிலங்கா அரசாங்கத்தின் வஞ்சகச் சூழ்ச்சியைத் தமிழ்மக்கள் இனங்கண்டு கொள்ள வேண்டும். அத்தோடு சலுகைகளுக்காக எமது இனத்தின் அரசியல் அபிலாசைகளை விலைபேசும் சக்திகளைத் தமிழ்மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

எமது போராட்டத்தின் நியாயத்தன்மையை உரத்துச் சொல்லவும் எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை வெளிப்படுத்தி அதற்கான நீதியை உலகமட்டத்தில் பெற்றுக்கொடுக்கவும் பணியாற்றும் வலுவுடனிருக்கும் எமது புலம்பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக அணிதிரண்டு செயற்படுவதன் மூலம் எமது விடுதலையை வென்றெடுக்கப் பாடுபட வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

இராமு.சுபன்
இணைப்பாளர்
தலைமைச் செயலகம்
தமிழீழ விடுதலைப் புலிகள்
தமிழீழம்.

Wednesday, June 16, 2010

நாடுகடந்த தமிழீழ அரசு: நிர்வாக தகவல்கள்


நாடுகடந்த தமிழீழ அரசு தனது நிர்வாகத்துறை மற்றும் துறை பொறுப்பாளர்கள் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

1. Committee for Political and Constitutional Affairs

1. Pon Balarajan – Convenor

2. M.A. Yogendran

3. Saravanamuthu Sasikumar

4. Jeyaprakash Jeyalingam

5. Thanikasalam Thayaparan

6. Sivanandan Murali

7. Rajaratnam Jeyachandran

8. Sivarajah Srisajeetha

9. Thiru S. Thiruchelvam

10. Manoranjan Nicholas

11. Theivendran Kandiah

12. Murugiah Jeyasankar

13. Ponambalam Maheshwaran

14. Nagalingam Balachandran

15. Ponnuthurai Prabaharan

16. Arumugam Thevarajan

17. Kulasegaram Esan

18. M.K.Eelavendathan

19. Ruthirapathy Sekar ruthira.

20. Suntheralingam Suba

21. Senathirajah Jeyananthamoorthy


2. Committee for Education, Culture, Health and Sports

1. Selvarajah Sellathurai – Convenor

2. Ratnabalan Sureshananth

3. Washington Remmon

4. Sivapragasapillai Luxan

5. Markandu Mokanasingham

6. Paramasivan Karthikesan

7. Atchthan Jeyavani

8. Logeswaran Renuka

9. Iyampillai Shanmuganathan

10. Mahalingam Baskaralingam

11. I. A. Selvanathan

12. Pirathiparaj Lalithasorubiny

13. Ponnuthurai Prabaharan

14. Arumugam Thevarajan

15. Suntheralingam Suba

16. Sivanesan Ruban


3. Committee for Economic Welfare and Development

1. I. A. Selvanathan - Convenor

2. Joe Antony

3. Markandu Mokanasingham

4. Sivasubramanium Mahinthan

5. Maheswaran Sasithar

6. Atchuthan Jeyavani


4. Committee for International Lobbying

1. Gerard Francis – Convenor Intelligentsia

2. Thanikasalam Thayaparan –Convenor Lobbying

3. Kulasegaram Esan – Convenor Media

4. Balan Ratnarajah

5. Shanmuganathan Kaviraj

6. Muthukumarasamy Ratna

7. Thiru S. Thiruchelvam

8. Pon Balarajan

9. Sunderam Shan

10. Prapaharan Tharani

11. Nadarajah Bhuvanendran

12. Manoranjan Nicholas

13. Sothinathan Sumughan

14. Joe Antony J

15. Dr. Ram Sivalingham

16. Deluxon Morris

17. Sangary Siva

18. Pulendran Janarthanan

19. Maharajah Nanthakumar

20. Sivasubramanium Mahinthan

21. Alex Doss

22. Ruthirapathy Sekar ruthira.

23. Sivagurunathan Sutharshan

24. Puthirasigamany Suganya

25. Murugiah Suginthan

26. Mahendran Suren

27. Arumugam Arthythy

28. Senathirajah Jeyananthamoorthy


5. Committee to Investigate Genocide, War Crimes and Crimes Against Humanity

1. Deluxon Morris – Convenor

2. Sellathurai Selvarajah r

3. Murugavel Karan

4. Nagalingam Niruthan

5. Sunderam Shan

6. Jeyasangar Vithiya

7. Thillaiampalam Sivakanesan

8. Arumugam Arthythy

9. Senathyrajah Jeyananthamoorthy


6. Committee for the Welfare of Women, Children and Elderly

1. Murugadas Balambigai – Convenor

2. Somaskanda Vasuky

3. Sinnathambi Rajanidevi

4. Ranjendram Vanitha

5. Kuruparan Subashini


7. Committee for Economic and Business Development

1. Ponambalam Maheshwaran– Convenor

2. Vaithilingam Waran

3. Joe Antony

4. Sivaguru Balachandran

5. I. A. Selvanathan

6. Rajah Thavendra


8. Committee for the Welfare of the Families of Cadres and Martyrs

1. Ruthirapathy Sekar– Convenor

2. Balan Sivapatham

3. Joe Antony

4. Suntheralingam Suba

5. Nagalingam Balachandran

6. I. A. Selvanathan e

7. Selvarajah Jeyam

8. Nirmalanathan Sukenthini


9. Committee for the Release of POWs

1. Sivasothy Jeyamathy – Convenor

2. Sumugan Sothinathan

3. Joe Antony

4. Nagalingam Niruthan

5. Arulanandam Deivendran

6. Alex Doss

7. Arumugam Arthythy


10. Committee for Natural Resource Development


1. Thavendra Rajah- Convenor

2. Veerakathy Sundaralingam

3. I.A. Selvanathan

4. Balasubramaniam


11. Committee for Internally Displaced Persons (IDP) and Refugees

1. Muthukumarasamy Ratna – Convenor

2. Pon Balarajan

3. Sivasothy Jeyamathy

4. Nagendra Katpana

5. Alvaapillai Thayananth

Friday, June 11, 2010

ஈழம் - ஓவிய சாட்சியம் - ஒவியர் புகழேந்தி

தலைப்பு : பதிவு





ஒளிப்படத்தில் பதிவானது இருண்டிருந்ததைப்
பார்த்தாளோ அவள்?.


தலைப்பு : களம்




பதுங்கி இருப்போமே
தவிர ஒதுங்கி இருக்க மாட்டோம்.
- காசி ஆனந்தன்


தலைப்பு : கடமை





முதுமை
ஒரு தடையல்ல..
- காசி ஆனந்தன்

தலைப்பு : திடம்





கருவி அல்ல
எங்கள் உறுதி காப்பாற்றும்.

- காசி ஆனந்தன்


தலைப்பு : புயல்




வீராங்கனைகள்
நெற்றியில் முத்தமிட்டு
குருதிப்புயலில்
விடுதலையின் கொடி !
- காசி ஆனந்தன்


தலைப்பு : வஞ்சினம்




கொலை செய்கிறவனை
சாகடிப்பது கொலையல்ல
- காசி ஆனந்தன்


தலைப்பு : காலம்




மானுடம் தனது விடுதலை வெளியை
மரண முற்றுகையில் மீட்கிற காலம்.

- காசி ஆனந்தன்


தலைப்பு : சந்திப்பு



சமமாய் நின்றே சந்தித்தோம் –
சமரையும் சாவையும்.


- காசி ஆனந்தன்

தலைப்பு : ஆணை




கீழே போடுவதற்காக
நாங்கள் துப்பாக்கி ஏந்தவில்லை.

- காசி ஆனந்தன்

தலைப்பு : கனல்




தோளில் போராட்டமும்
கண்களில் விடுதலையுமாய்…


- காசிஆனந்தன்

தலைப்பு : பாய்ச்சல்




ஒரே நேரத்தில்
மண் விடுதலையும்
பெண் விடுதலையும்.


- காசி ஆனந்தன்

தலைப்பு : துரோகம்




துல்லியம் காட்டும்
தொலைநோக்கியில்
தெரியாமல் போனவை-
முதுகுக்குப் பின் நின்ற
துரோக முகங்கள் !.


-இன்குலாப்

தலைப்பு : தேவை



போருக்கான தேவை
இருக்கும் வரை
போரும் இருக்கும்.

- காசி ஆனந்தன்

தலைப்பு : மண்




என் தோழர்களின்
பிணங்கள் விழுந்த மண்.

- காசி ஆனந்தன்


தலைப்பு : இயக்கம்




தொடர்பில் இருக்கிறோம்
தொடர்ந்து…

- காசிஆனந்தன்.


தலைப்பு : சிறகு




தாய்க்கோழி விரித்த சிறகாய் இருந்தது
தோளில் சுமந்த எறிகணைகள்!

- இன்குலாப்

தலைப்பு : காவல்




துப்பாக்கி என்னை பாதுகாத்தது.
நான் துப்பாக்கியை பாதுகாத்தேன்..

- காசிஆனந்தன்



தலைப்பு : வேர்




என் கைகளில்
துப்பாக்கி தந்தவன்
எதிரி.

- காசிஆனந்தன்

தலைப்பு : உடைப்பு



ஒரு காலத்தில்
அகப்பை பிடித்த கை

- காசிஆனந்தன்



தலைப்பு: காத்திருப்பு



காத்திருக்கிறோம்
காலத்திற்காகவும்
ஈழத்துக்காகவும்
- காசிஆனந்தன்


தலைப்பு: பதுங்கு குழி



மண் துளைத்து இறங்கும்
மரணத்தின் வெடிமுழக்கத்தை
தாங்குமோ?
தாலாட்டில் இனிததரிந்த
இளஞ்செவிப்பறைகள்!
- கவிஞர் இன்குலாப்

தலைப்பு : உண்மை



நாங்கள் சாகடிக்கப்படுவது
பயங்கரவாதிகள்
என்பதால் அல்ல
தமிழர்கள் என்பதால்.

- கவிஞர் காசிஆனந்தன்

நாடுகடந்த அரசின் இடைக்கால இயக்குனர் திரு.உருத்திரகுமாருடன் ஒரு நேர்காணல்


இலங்கை தமிழ் சங்கம் வெளியிட இருக்கும் சங்கம் வருடாந்த இதழுக்காக தமிழீழ நாடு கடந்த அரசின் இயக்குனர்
திரு. உருத்திரகுமார் வழங்கிய நேர்காணல். சங்கம் வருடாந்த இதழ் வருகின்ற ஜூன் மாதம் 6ம் நாள் New Jerseyயில் வெளியிடப்படுகின்றது. திரு. உருத்திரகுமார் வழங்கிய நேர்காணல்

கேள்வி: பெரும்பாலான தமிழ் ஊடகங்கள் நாடு கடந்த அரசின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயற்பட்டாலும், அண்மைக் காலங்களில் சில ஊடகங்கள் நாடு கடந்த அரசு தொடர்பாக உண்மைக்கு புறம்பான செய்திகளையும், பொய்பரப்புரைகளையும் வெளியிட்டு வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளது. ஆயினும், இவ் ஊடகங்கள் முன்வைக்கும் கடும் விமர்சனங்கள், எழுப்பும் வினாக்கள், கிழப்பும் சந்தேகங்கள் தொடர்பில் உங்கள் கருத்துகளை மக்களிற்கு தெளிவுபடுத்துவது அவசியம் எனக் கருதுகிறோம். இவற்றுள் கோட்பாட்டு ரீதியாக அதிகம் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்ட விடயம் வடகிழக்கு முஸ்லிம் மக்களிற்கான தன்னாதிக்க உரிமை ஆகும். இது மத ரீதியாக தமிழ் தேசியத்தை பிளவுபடுத்தும் முயற்சியென கடுமையாக சாடப்பட்டது. வடகிழக்கு தமிழ் பேசும் முஸ்லிம் மக்கள் தமக்கான தன்னாதிக்க உரிமை கோரிக்கைய ஆணித்தரமாக முன்வைக்காதபோதும், இவர்கள் தம்மைத்தாமே ஆண்டதற்கான வரலாற்று சான்றுகளோ, தொடர்ச்சியான நிலப்பரபோ, தன்னாதிக்க வலுவுள்ள பொருளாதார கட்டமைப்போ இல்லாதபோதும், இவ் உரிமை இவர்களிற்கு உள்ளதாக எதன் அடிப்படையில் நாடுகடந்த அரசின் வழிகாட்டி கோட்பாடுகளில் உள்ளடக்கப்பட்டது என்பதை விளக்குவீர்களா?

பதில்: எமது மதியுரைஞர் குழு இவ் விடயம் தொடர்பாக மிக ஆழமாக ஆராய்ந்த பின்னரே சில முன்மொழிவுகளை வழிகாட்டி கோட்பாடுகளினுள் உள்ளடக்கியது. எமது வழிகாட்டி கோட்பாடுகளில் தமிழ் ஈழத்தை சுதந்திரமும் இறைமையும் உள்ள தேசம் என்று குறிப்பிடும் அதேவேளை முஸ்லிம் மக்கள் தொடர்பாக இச் சொற்பிரயோகங்கள் இடம்பெறவில்லை என்பதை கவனிக்க வேண்டும். எமது மதியுரை குழுவின் அறிக்கையில் separate autonomous state என்ற பதமே பாவிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் மக்களிற்கான சுயநிர்ணய உரிமையை ஏற்றுகொள்வது என்பது, எந்தவித அடக்குமுறைகளிற்கும் அப்பாற்பட்டு தமிழ்தேசியத்துடன் இணைந்திருக்க முடியும் என்ற நம்பிக்கையை அவர்களிற்கு ஏற்படுத்துவதாக இருக்கும். மேலும், இதுபோன்ற சிக்கலான விடயங்களிற்கான நாடுகடந்த அரசின் கொள்கைகளை வகுப்பதில் மக்களால் தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களே முஸ்லிம் பிரதிநிதிகளுடன் பேசி முடிவினை எடுப்பார்கள்.

கேள்வி: நாடுகடந்த அரசின் தேர்தலிற்கு மக்கள் கொடுத்த ஆதரவு உங்களை திருப்திப்படுத்தியுள்ளதா? நாடுகடந்த அரசு தேர்தலை வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு அளித்த வாக்குகளோடு ஒப்பு நோக்கி தமிழரின் பிரபல ஆங்கில செய்தி இணையம் விமர்சனங்களை முன்வைத்துள்ளதே?

பதில்: மக்கள் கொடுத்த ஆதரவு திருப்தியாக உள்ளது. எதிர்பார்த்த அளவை விட சில நாடுகளில் வாக்குகள் எண்ணிக்கை குறைவாக இருந்தபோதிலும், ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது திருப்தியாக உள்ளது. அவை நிற்க, வட்டுக்கோட்டை தீர்மான தேர்தலும் நாடுகடந்த அரசின் தேர்தல்களும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல என்பதால் அவற்றிற்கிடையிலான ஒப்பீடுகள் தேவையற்றவை. இரண்டு கோட்பாடுகளும் ஒன்றுடனொன்று இறுக்கமாக இணைந்து செல்பவை.

கேள்வி: நாடுகடந்த அரசை சில வெளிச்சக்திகளின் ஆலோசனைக்கேற்ப நீங்கள் வழிநடத்துவதாக ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதே?

பதில்: அதில் எந்தவித உண்மையும் இல்லை. அவ்வாறான நம்பிகையீனம் இருந்திருந்தால் இப்பணி என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்காது.

கேள்வி: உங்களிடம் இப்பணியை ஒப்படைத்தவர் மீதும் சந்தேகங்கள் கிளப்பப்படுகிறதே?

பதில்: இப்பணி எனக்கு ஒரு தனிப்பட்ட நபரால் தரப்பட்டதாக நான் கருதவில்லை. மதியுரைக் குழுவின் அறிக்கையும் எமது கடந்த பத்து மாதகால செயற்பாடும், நாடுகடந்த அரசமைக்கும் குழு தமிழ் மக்களின் நலன் ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுவதை மக்களால் அறியக்கூடியதாக உள்ளது. எமது நடவடிக்கைகளில் எந்த ஒரு விடயமாவது வேறு எந்த சக்திகளின் நலன்களிட்கு சாதகமாக அமைந்ததாக நான் கருதவில்லை. உருவாக்கப்பட்டுள்ள நாடுகடந்த அரசாங்கம் எந்தவொரு தனி நபரால் அல்லாமல், தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளால் வெளிப்படை தன்மையுடன் செயல்பட உள்ளது.

கேள்வி:நாடுகடந்த அரசின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி சுருக்கமாக கூறமுடியுமா?

பதில்: நாடுகடந்த அரசின் சட்ட வரைபுகளை எழுதுவதற்காக முதல் அமர்வில் அரசியல் நிர்ணய சபை ஒன்று ஏற்படுத்தப்படும். மேலும், அவசர அவசிய விடயங்களை கையாள்வதற்காக இடைக்கால நிர்வாக குழுக்கள் ஏற்படுத்தப்படும்.

கேள்வி: இத்தேர்தலில் கிடைத்த அனுபவத்தை வைத்து அடுத்த தேர்தலில் எவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்த உத்தேசித்துள்ளீர்கள்?

பதில்: கடந்த முறை தேர்தல் ஆணையம் நாடுவாரியாக இருந்தது. இதனை ஒருமுகப்படுத்தி அனைத்து நாடுகளிற்கும் பொதுவாக தேர்தல் ஆணையத்தை உருவாக்குவது பற்றி உத்தேசித்துள்ளோம். இது தொடர்பாக மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசிக்கப்படும்.

நன்றி

- நேர்காணல்: சசி செல்லத்துரை

Saturday, June 5, 2010

முள்ளிவாய்க்கால் கரையில் அலைந்து கொண்டிருக்கிறது என் தாய்மொழி: கவிஞர் இன்குலாப்


நினைவுப் படலத்தில்
குருதிக் கோடுகளாய்ப் படர்ந்த
கொடிய நாட்கள் அவை

வானம் மறுக்கப்பட்ட
பறவைகளை
நான்கு திசைகளிலிருந்தும்
நச்சு அம்புகள் துரத்திய நாட்கள்

கலைக்கப்பட்ட கூடுகளிலிருந்து
அடைகாக்கப்பட்ட முட்டைகள்
உடைந்து சிதற,
மண்ணெல்லாம்
உதிரக்கொடி படர்ந்த நாட்கள்

பறவைகளின் நெஞ்சப்படபடப்பில்
காற்றும் நெளிந்து
கூகூவெனக் கூக்குரலிட்ட நாட்கள்

வேடுவனின் இறையாண்மையில்
குறுக்கிடமுடியாதென்று
நாக்கைச் சப்புக்கொட்டி
பறவைகளின் பச்சைக் கறிவிற்கக்
கடைதிறந்த
சந்தை வணிகர்களின்
பங்கு நாட்கள்.

கிளிகளுக்கு இரங்குவதாய்
அழுத பூனையொன்று
ஒரு சிட்டுக்குருவியின்
சிறகுரிக்கும் நேரமே
உண்ணாதிருந்த
மாபெரும் போராட்ட நாட்கள்
விட்டுவிடுதலையானவை
சிட்டுக்குருவிகள் என்று
கொண்டாடுவேனோ
இனியும் இங்கே?

ஒரு சிறகில் சுதந்திரமும்
மறு சிறகில் துயரமுமாய்
அலைகின்றனவோ
அனைத்துப் பறவைகளும்?

எத்தனை கூட்டமாய்
எவ்வளவு தூரமாய்
எந்த உயரத்தில் பறந்தாலும்
கடந்த வெளிகளில்
அவற்றின்
சிதைந்த சிறகுகளின்றி
இல்லை
சின்னதொரு தடமும்
என்று நிமிரும் முகத்தில்
கரும்புள்ளியாய்க்கடப்பது
எதன் நிழல்?

கூடும் குஞ்சும்
கொள்ளைபோனபின்பும்
வீழாதமட்டும்
ஓய்வறிவதில்லை
எந்த ஒரு சிறகும்!

உயரமோ தாழ்வோ
துல்லியம் தப்பாத தொலைவோ
மகிழ்ச்சி, காதல்,
அச்சம், துணிச்சல்
சுதந்திரம்,
ஆறாத்துயரம்
இவற்றுடன்
போராட்ட ஞானத்தையும்
போதிக்கின்றனவோ
அசையும் சிறகுகள்
தம்
மௌன மொழிகளில்!;

- – - – -

அறைகூவல்களாலும்
ஆரவாரங்களாலும்
பொருள் தொலைந்து
பழங்காட்சியகத்தில்
பாராட்டப்படும்
ஒலிக்கூடுகளில்
எதில்
இந்த நினைவைப் பதிவேன்?

இவை
விடை வேண்டும் கேள்விகள்

தன்னை வைத்து விளையாடும்
வித்தகர்களின்
சதுரங்கப்பலகையிலிருந்தும்

விரைந்து விற்றுக்கொண்ட
கலாநிதிகளின்
ஆய்வாழங்களிலிருந்தும்

அதிகாரத்தின் கடைக்கண் பார்வைக்கு
அடிபெயர்ந்த நெடுமரமாய்ச்
சாய்ந்து கிடக்கின்ற
கவிஞர் பெருமக்களின்
பேனா முனைகளிலிருந்தும்

விலகி,
வெகு தொலைவில்
முள்ளிவாய்க்கால் கரையில்
அலைந்து கொண்டிருக்கிறது
என் உண்மையான தாய்மொழி
குருதி கொட்டும்
செம்மொழியாய்….

- கவிஞர் இன்குலாப்

Tuesday, June 1, 2010

போர்க்குற்றம் புரிந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதற்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை அவசியம் – ஹொபி அண்ணான்


சிறீலங்காவின் இறுதிப் போரின்போது இடம்பெற்ற பாரிய குற்றச்செயல்கள் குறித்து அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற விசாரணை அவசியம் என்று ஐக்கியநாடுகள் சபையின் முன்நாள் செயலாளர் நாயகம் ஹொபி அண்ணான் வலியுறுத்தியுள்ளார்.

போர்க்குர்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குர்றங்கள், இன சுத்திகரிப்பு போன்ற குர்றங்களை விசாரிப்பதற்காகவே அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் அமைக்கப்பட்டது என்றும் ஹொபி அண்ணான் மேலும் குறிப்பிட்டார்.

இவ்வாறான குர்றம் புரிந்தவர்கள் கட்டாயமாக கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்றும், எந்த வகையிலும் அவர்கள் தப்பிக்க அனுமதிக்கப்படக் கூடாது என்றும் கூறினார். அமெரிக்காவின் நியூயோர்க் ரைம்ஸ் இதழுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா மற்றும் பலஸ்தீனம் ஆகிய நாடுகளில் கடந்த வருடம் இடம்பெற்ற மோதல்கள் தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

ராஜபக்செ ஒரு சிங்கள பயங்கரவாதி: சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் சாடல்!


'ராஜபக்செ ஒரு சிங்கள பயங்கரவாதி" என்றும், 'இலங்கையில் தமிழர்கள் சுதந்திரமாக வாழ தமிழீழம் ஒன்றே தீர்வு" என்று சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ பியாங் யூ தெரிவித்தார்.

சிங்கப்பூரின் பிரதமராக பதவி வகித்த அவர் பதவி ஓய்வு பெற்ற பின்னர் இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். அவர் மேலும் கூறியது...'இலங்கையில் தமிழர்கள் மீது சிங்கள ராணுவம் பயங்கரவாத தாக்குதல் தொடங்கியதால் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

இலங்கை அரசு செய்தது மிகப்பெரிய யுத்தக் குற்றம். இதற்கு ராஜபக்செ தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும். சிங்கள பயங்கரவாதியாக ராஜபக்செ செயல்பட்டுள்ளார். அவரை சர்வதேச நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும். இலங்கையில் இன்றைக்கும் தமிழர்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள்.

இலங்கையில் தமிழர்கள் சுதந்திரமாக வாழ ஒரே வழி தமிழீழம் அமைவதுதான்" என்று தெரிவித்தார். சிங்கப்பூரின் முன்னாள் பிரதமரின் இந்த வெளிப்படையான கருத்து இலங்கை அரசை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.