
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 26.08.2011 அன்று சந்தித்துப் பேசினார். தூக்கு தண்டனையில் இருந்து விடுவிக்க எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து அவர்களிடம் வைகோ ஆலோசனை நடத்தினார்.
பின்னர் வெளியே வந்த அவர், ‘’முருகன், பேரறிவாளன், சாந்தன் மூவரும் தூக்குத்தண்டனையை ரத்து செய்யக்கோரி முதல்வர் ஜெயலலிதாவுக்கு கருணை மனு எழுதியுள்ளனர். மூவரும் வேலூர் சிறை கண்காணிப்பாளரிடம் கருணை மனுவை அளித்தனர்’’ என்று வைகோ கூறினார்.
No comments:
Post a Comment