Labels

Tuesday, August 30, 2011

மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம்



மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று திருப்பூரில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், தேசியக் கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, மாநிலத் துணைச் செயலாளர்கள் சி.மகேந்திரன், கோ.பழனிச்சாமி மற்றும் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் மரண தண்டனையை ரத்து செய்யக் கோரும் தீர்மானம் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானம் வருமாறு,


1991ஆம் ஆண்டு நடந்த வருத்தத்தக்க கொலை சம்பவத்தைத் தொடர்ந்து தூக்கு தண்டனை வழங்கப்பட்டு கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டட நிலையில் உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் மரண தண்டனையை, ரத்த செய்ய வேண்டும்û என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு ஒருமனதாக வலியுறுத்துகிறது.


உலகின் முக்கால் பகுதி நாடுகளில் மரண தண்டனை கைவிடுப்பட்டுள்ள போது பன்னாட்டு பெருமையும், பாரம்பரியமும் கொண்ட இந்திய நாடு மரண தண்டனையை தொடர்வது வளர்ந்து வருகிற பண்பாட்டுச் செழுமைக்கு எதிரானதாக அமைந்து விடக்கூடும்.


எனவே, நமது பண்பாட்டில் மரபின் அடிப்படையிலும், உலக ஜனநாயக சக்திகளின் உணர்வுக்கு இசைவாகவும் மேற்சொன்ன மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்வது அவசியமாகிறது.


20 ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர்களை இனியும் தூக்கிலிடுவது தண்டனைக்கு மேல் தண்டனை வழங்குவதாகும்.


எனவே, மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்துவதோடு, தமிழக முதல் அமைச்சர் நேரடியாக அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு அவர்களை தூக்கிலிருந்து விடுவிக்க வேண்டுமேன
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு கேட்டுக்கொள்கிறது.

No comments:

Post a Comment