Labels

Tuesday, August 30, 2011

மகனை மீட்பேன் : அற்புதம்மாள் உருக்கம்



ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன் எழுதிய நூலின் இந்தி பதிப்பு டெல்லியில் வெளியிடப்பட்டது.


மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏ.பி.பரதன் கலந்துகொண்டு நூலை வெளியிட்டார்.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஏற்கனவே வெளிவந்துள்ள ராஜீவ்காந்தி கொலை வழக்கு உண்மை கடிதங்கள் என்ற இந்தி மொழி பெயர்ப்பின் பணியை எழுத்தாளர் சரவணா ராஜேந்திரன் செய்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


இந்த நிலையில் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.


கேள்வி: டெல்லியில் ஜனாதிபதியை சந்திக்க ஏதாவது முயற்சி செய்தீர்களா?


பதில்: இல்லை. எந்த வித முயற்சியும் செய்யவில்லை.


கேள்வி: டெல்லியில் எந்த தலைவர்களை சந்தித்து பேசினீர்கள்?


பதில்: டெல்லியில், கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களான பரதன், ராஜா மற்றும் வைகோ ஆகியோரை சந்தித்து பேசினேன். அவர்கள் எனக்கு ஆறுதல் கூறினார்கள். ஒரு வழக்கில் 20 ஆண்டுகளாக தண்டனை பெற்றபின் மேலும் ஒரு தண்டனையாக தூக்கில் போடுவது சரியா என கேட்டனர். 3 பேரும் தூக்கு தண்டனையில் இருந்து தப்பிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.


கேள்வி: 3 பேரையும் தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்ற கோரி தமிழக முதல்வரிடம் மனு தந்து உள்ளீர்களா?


பதில்: ஏற்கனவே தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனு தந்து உள்ளோம். அவரை சந்திக்க அனுமதி கிடைத்தால் நேரில் கோரிக்கை வைப்பேன். தமிழக முதல்வர் சகல அதிகாரம் படைத்தவர். அவர் மனது வைத்தால் 3 பேரையும் தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்ற உதவிட முடியும். அவர் உதவி செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment