Labels

Wednesday, July 27, 2011

இலங்கைத்தமிழர் சமஉரிமை அரசியல் தீர்வு சிறப்பு மாநாடு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம்



மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் என். வரதராஜன், டி.கே. ரங்கராஜன் எம்.பி., உ.வாசுகி உள்ளிட்டு மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு;


இலங்கையில் அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்குமிடையிலான ஆயுத மோதல்கள் முடிவுற்று, இரண்டு ஆண்டுகளாகியும் இலங்கைத்தமிழ் மக்களுக்கு சம உரிமை, அரசியல் தீர்வுக்கான நடவடிக்கைகள் இலங்கை அரசால் மேற்கொள்ளப்படவில்லை. இந்திய அரசும், ராஜூய உறவுகளை பயன்படுத்தி இலங்கை அரசை வலியுறுத்துவதில்லை.

எனவே, இலங்கை தமிழ் மக்களுக்கு சம அந்தஸ்து, சம உரிமை உள்ளிட்ட அதிகாரங்களைக் கொண்ட மாநில சுயாட்சி அளித்திடும் வகையில் நிரந்தர அரசியல் தீர்வு காண வலியுறுத்தியும், இன்னும் முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு மறுவாழ்வு அளித்திடக்கோரியும், ஆயுத மோதலின் இறுதிக்கட்டத்தில் நடந்துள்ள மனித உரிமை மீறல்கள் மீது சுயேச்சையான, நேர்மையான விசாரணை நடத்திட வலியுறுத்தியும் “இலங்கைத்தமிழர் சமஉரிமை அரசியல் தீர்வு சிறப்பு மாநாடு நடத்துவதென்று மாநில செயற்குழு தீர்மானித்துள்ளது.

2011, ஜூலை 30 பிற்பகல் 2.30 மணியளவில் சென்னை பெரியார் திடலில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷணன் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத், இலங்கை தமிழ்க்குடியரசுக்கட்சியின் தலைவர் ஆர்.சம்பந்தம் உள்ளிட்ட பல தலைவர்களை பங்கேற்கச் செய்வதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

No comments:

Post a Comment