Labels

Sunday, July 17, 2011

இலங்கை பிரச்னையை பாராளுமன்றத்தில் எழுப்புவோம்: டி.ராஜா பேட்டி



"இலங்கை பிரச்சினை, ஊழல் குறித்து பாராளுமன்ற கூட்டத்தொடரில் கேள்வி எழுப்புவோம்'' என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா கூறினார்.யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா எம்.பி. திருச்சியில் 17.07.2011 அன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இந்த சம்பவத்தின் மூலம் உள்நாட்டு பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. உள்துறை மந்திரி சிதம்பரத்தின் வாய்ச்சொல்லில் காட்டும் திறமை, அவரது செயல்பாட்டில் இல்லை. உள்துறை பயங்கரவாத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டது. இந்த பிரச்சினையை பாராளுமன்றத்தில் எழுப்புவோம். இன்னும் 2 வாரத்தில் பாராளுமன்றம் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் இந்த பிரச்சினை குறித்து கேள்வியை எழுப்புவோம். ஆனால் இலங்கை பிரச்சினையில் சர்வதேச அளவில் விசாரணை நடத்த வேண்டும் என்பதில் இந்தியா மவுனமாக உள்ளது. இலங்கை பிரச்சினை என்பது தமிழக மக்களின் பிரச்சினை மட்டுமல்லாது தேசிய அளவிலான பிரச்சினை ஆகும். இதனையும் பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது கேள்வி எழுப்புவோம். கறுப்பு பணத்தை மீட்க இந்திய அரசு உறுதிப்பாடு இல்லாமல் உள்ளது. அமெரிக்கா, ஜெர்மனி அரசுகள் கறுப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் இந்திய அரசு தயக்கம் காட்டுகிறது. கறுப்பு பணம் நாட்டு மக்களுடைய பணம். இதனால் அதனை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மும்பையில் மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதியில் குண்டு வெடிப்பு நடந்துள்ள சம்பவம் உளவுத்துறை எச்சரிக்கையாக இல்லாததையும், பாதுகாப்பு துறை தயார் நிலையில் இல்லாததையும் காட்டுகிறது.

ஏற்கனவே சிதம்பரம் நிதி மந்திரியாக இருந்த போது 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அவர் மீது தவறு இருக்கிறது, தற்போது உள்துறை மந்திரியாக பணியாற்றும்போது அவரது செயல்பாடு திருப்தி இல்லை. இதனால் பிரதமர் மன்மோகன்சிங் தலையிட்டு சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கையில் போர் முடிந்து 2 ஆண்டுகள் ஆகியும் அங்கு இலங்கை தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு ஏற்படவில்லை. இலங்கையில் போரின்போது நடைபெற்ற மனித மீறல்களின் சி.டி.க்களை பார்த்து பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் நாடுகளின் வெளியுறவுத்துறை கண்டித்துள்ளது.

லோக்பால் சட்டத்தை விரைவில் கொண்டு வரவேண்டும். அதில் பிரதமரையும் விசாரிக்க வழிவகை செய்ய வேண்டும். நீதித்துறையின் நம்பகத்தன்மையை நிலைநாட்ட தேசிய நீதித்துறை ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும்.


இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment