
இலங்கை தமிழர் படுகொலை பற்றிய சி.டி.க்களை பொதுமக்களிடம் இலவசமாக ம.தி.மு.க.வினர் வழங்கினர்.
இலங்கையில் நடந்த இறுதி கட்ட போரில் சிங்கள ராணுவ தாக்குதலில் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். போரின் போது சரண் அடைந்த விடுதலை புலிகளை நிர்வாணமாக்கி சித்ரவதை செய்து படுகொலை செய்தனர். இலங்கை ராணுவத்தின் இத்தகைய செயல்களை சேனல் 4 என்ற தொலைக்காட்சி ஒளிபரப்பியது. அதேபோல் இலங்கையில் போர் குற்றம் நடைபெற்று உள்ளது என்று ஐ.நா.அறிக்கை வெளியிட்டது.
இதன் அடிப்படையில் ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ இலங்கை தமிழர் படுகொலை குறித்த சி.டி.யை தயாரித்து வெளியிட்டார்.
இந்த சி.டி.க்களை தமிழகம் முழுவதும் ம.தி.மு.க. வினர் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார்கள். திருச்சியில் கோர்ட்டு வளாகம் முன்பு பொதுமக்களுக்கு சி.டி.க்கள் வழங்கும் நிகழ்ச்சி 27.07.2011 அன்று நடைபெற்றது. ம.தி.மு.க. மாநில சட்டத்துறை செயலாளர் வீரபாண்டியன் தலைமை தாங்கினார்.
முதல் கட்டமாக 1,000 சி.டி.க்கள் விநியோகிக்கப்பட்டன. இதையடுத்து 27.07.2011 அன்று மாலை காந்திமார்க்கெட் பகுதியில் சி.டி.க்கள் வழங்கப்பட்டன. இன்று கல்லூரிகளில் மாணவர்களுக்கு இந்த சி.டி.க்கள் வழங்கப்பட இருக்கின்றன.
No comments:
Post a Comment