Labels

Friday, July 22, 2011

தமிழீழத் தேசியக் கொடியுடன் லண்டன் வீதிகளில் பேரூந்து!





தமிழீழத் தேசியக் கொடி, தமிழீழத் தேசிய மலர், மற்றும் தமிழீழ தேசம் என்பன பொறிக்கப்பட்ட பேரூந்து ஒன்று லண்டன் நகர வீதிகளில் 21.07.2011 முதல் உலா வருகிறது.
பிரித்தானியாவின் வடமேற்கு லண்டன் பகுதியின் கிங்ஸ்பிறி பகுதியூடாக சென்றுகொண்டிருந்த அந்த அதிசய பேரூந்து எமது கண்ணில் படவே அதை பின் தொடர்ந்து சென்று அந்த வாகன ஓட்டுனருடன் உரையாடினோம்.

அப்போது எந்த இளைஞ்ஞனுள் உறைந்து கிடந்த உணர்வுகளின் வெளிப்பாடே இந்த பேரூந்தும், அதனூடான தமிழீழ அடையாளங்களை வேற்றினத்தவர் மத்தியில் வெளிக்கொணரும் முயற்சியும் என்பது தெரிந்தது.

அந்த பேரூந்தின் நாற்புறமும் பிரித்தானியக் கொடியும், அதனோடு பிரித்தானியப் போர்வீரர்களை நினைவுகூரும் நாளில் அணியும் "பொப்பி" மலரும் பொறிக்கப்பட்டிருந்தது.

அதே போல் அதற்கு அருகில் தமிழீழமும் அடுத்து தமிழீழத் தேசியக் கொடியும், தமிழீழ விடுதலைக்காக போராடி வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களை நினைவுகூரும் நாளில் அணியும் கார்த்திகை மலரும் பொறிக்கப்பட்டிருந்தது.

இதன் கீழே "நான் பெரிது நீ பெரிதென்று வாழாமல் நாடு பெரிது, தமிழ் பெரிது, தமிழ் மானம் பெரிதென்று வாழ்" எனும் வாசகமும் எழுதப்பட்டிருந்ததை காணமுடிந்தது.

இவற்றிற்கும் மேலாக "சிறீலங்காவின் கொலைக்களம்" எனும் ஆவணத்திரைப்படத்தை வெளியிட்டு சர்வதேசங்களின் கவனத்தை ஈர்த்து சிறீலங்காவில் இடம்பெறும் தமிழினப் படுகொலையை வெளிக்கொணர்ந்த "சனல் 4" ஊடகத்திற்கு நன்றி தெரிவித்தும் ஆங்கிலத்தில் வாசகம் பொறிக்கப்பட்டிருந்ததாவது வேற்றின மக்களையும் கவர்ந்தது.

அந்த வாகனத்தில் நாமும் சிறுது தூரம் பயனித்து வீதிகளில் செல்லும் மக்களின் பார்வை எவ்வாறு உள்ளதென்பதை அவதானித்த போது தமிழர் மட்டுமன்றி வேற்றினத்தவரும் வியந்து பார்த்ததோடு தமது கைகளை உயர்த்தி தமது ஆதரவையும், ஊக்கத்தையும் அளித்ததை கண்டோம்.

No comments:

Post a Comment