Labels

Tuesday, April 26, 2011

போர்க்குற்றம் குறித்து சர்வதேச குழு விசாரிக்க ஒப்புதல் அளிக்க வேண்டும்: இலங்கைக்கு ஐ.நா. வலியுறுத்தல்



உள்நாட்டில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச குழு விசாரிக்க ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று இலங்கை அரசை ஐ.நா. சபை வலியுறுத்தியுள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழர்களுக்கு எதிரான தாக்குதலில் இலங்கை ராணுவம் போர்க்குற்றத்தில் ஈடுபட்டுள்ளதை ஐ.நா. குழு ஆய்வு செய்து கண்டறிந்துள்ளது.

இதுதொடர்பாக இக்குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அமெரிக்காவின் வாஷிங்டனிடல் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா.சபை பொதுச்செயலாளர் பான் கி மூன்,


இலங்கை அரசு செய்துள்ள போர் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும். பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்துள்ளதன் மூலம், சர்வதேச மனித உரிமை சட்டத்தை இலங்கை ராணுவம் மீறியுள்ளது. இதுகுறித்து இலங்கை அரசு பொது மன்னிப்பு கோர வேண்டும். போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேசக் குழு விசாரிக்க இலங்கை அரசு ஒப்புக்கொள்ள வேண்டும் என்றார்.

மேலும் பேசிய அவர், இலங்கையில் உள்ள ஐ.நா. ஊழியர்களின் பாதுகாப்புக்கு அந்நாட்டு அரசு உத்தரவாதம் வழங்க வேண்டும்
என்றார்.


இறுதிப்போர் குறித்து இலங்கை அரசு கூறிவந்த தகவல்கள் முற்றிலும் பொய் - ஐ.நா. அறிக்கை :



இலங்கை உள்நாட்டு போரில் அந்நாட்டு ராஜபக்சே அரசு நடத்திய இன படுகொலை குறித்து ஐ.நா. மூவர் குழு விசாரணை நடத்தியது. ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் உத்தரவின்படி நடந்த முடிந்த இந்த விசாரணை அறிக்கை ஐ.நா. சபையிடம் கடந்த சில தினங்களுக்கு முன் சமர்பிக்கப்பட்டது.

பாதுகாப்பு வளையத்திற்குள் வரவழைக்கப்பட்ட அப்பாவி தமிழ் மக்களை இலங்கை ராணுவம் படுகொலை செய்தது, மருத்துவமனைகள், முகாம்கள், உணவு பொருள் சேமிப்பு கிடங்குகள் ஆகியவற்றை குண்டு வீசித் தகர்த்தது ஆகியவை உண்மைதான் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு செய்தி வெளியானது.


இந்நிலையில் இலங்கை அரசின் போர்க்குற்றம் தொடர்பான ஐ.நா. அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.


அதில், போரின் போது தமிழர்களுக்கு மனிதாபிமான சேவைகளை இலங்கை அரசு திட்டமிட்டு தடுத்தது. இலங்கை போரின்போது 40,000 தமிழர்களை இலங்கை அரசு குண்டு வீசி அழித்தது. போரன் போது சர்சதேச மனித உரிமை சட்டங்களை இலங்கை அரசு கடுமையாக மீறி உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இறுதிப்போர் குறித்து இலங்கை அரசு இதுவரை கூறிவந்த தகவல்கள் முற்றிலும் பொய் என்றும் கூறியுள்ளது.


பொதுமக்கள் தங்கி இருந்த இடங்களில் இலங்கை ராணுவம் குண்டுகளை வீசியது - ஐ.நா. அறிக்கை :


இலங்கை உள்நாட்டு போரில் அந்நாட்டு ராஜபக்சே அரசு நடத்திய இன படுகொலை குறித்து ஐ.நா. மூவர் குழு விசாரணை நடத்தியது. ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் உத்தரவின்படி நடந்த முடிந்த இந்த விசாரணை அறிக்கை ஐ.நா. சபையிடம் கடந்த சில தினங்களுக்கு முன் சமர்பிக்கப்பட்டது.

பாதுகாப்பு வளையத்திற்குள் வரவழைக்கப்பட்ட அப்பாவி தமிழ் மக்களை இலங்கை ராணுவம் படுகொலை செய்தது, மருத்துவமனைகள், முகாம்கள், உணவு பொருள் சேமிப்பு கிடங்குகள் ஆகியவற்றை குண்டு வீசித் தகர்த்தது ஆகியவை உண்மைதான் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு செய்தி வெளியானது.


இந்நிலையில் இலங்கை அரசின் போர்க்குற்றம் தொடர்பான ஐ.நா. அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

இறுதிக்கட்ட போர் நடந்த நேரத்தில் 3 லட்சத்து 30 ஆயிரம் தமிழர்கள் ஒரே இடத்தில் முடக்கப்பட்டனர். அவர்கள் மனித கேடயமாகவும் பயன்படுத்தப்பட்டனர். அதில் இருந்து தப்பி ஓட முயன்றவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.


பொதுமக்கள் தங்கி இருந்த இடங்களில் ராணுவம் குண்டுகளை வீசியது. மருத்துவமனை மற்றும் மனிதாபிமான முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலும் குண்டுவீசி தாக்கினார்கள். இதன் மூலம் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.

போரில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட குண்டுகளையும் வீசினார்கள். இரு தரப்பினரும் பொதுமக்கள் அருகில் இருந்தபடியே ஆயுதங்களை பயன்படுத்தினார்கள். போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவி செய்யவில்லை. அடிப்படை உரிமைகள் மீறப்பட்டன. போர் பகுதிக்குள் ஊடக அடக்குமுறை கையாளப்பட்டது. பெண்கள் கற்பழிக்கப்பட்டனர்.

அங்கு நடந்த படுகொலைகள் போர் குற்றமாகும். எனவே இலங்கை அரசு மீது போர் குற்ற விசாரணை நடத்தலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இலங்கை போர்க்குற்றம் தொடர்பான அய். நா. சபை அறிக்கை முழு விவரம்

No comments:

Post a Comment