Labels

Wednesday, April 20, 2011

இலங்கை மீது போர் குற்ற விசாரணை நடத்த வேண்டும்; ஐ.நா.விடம் நாடு கடந்த தமிழ்ஈழ அரசு



இலங்கை இறுதிப் போரில் போர் குற்றங்கள் நடந்ததா? என கண்டறிய அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையில் இலங்கை அரசு போர் குற்றத்தில் ஈடுபட்டதாக கூறியுள்ளது.


இதையடுத்து நாடு கடந்த தமிழ்ஈழ அரசின் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள ருத்திரகுமாரன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில், ‘’ஐ.நா.குழு விசாரணை அறிக்கை மூலம் இலங்கை அரசும், ராணுவமும் போர் அத்துமீறல்களில் ஈடுபட்டு இன ஒழிப்பு செயல்களை செய்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அறிக்கையில் 4 முக்கிய அம்சங்கள் கூறப்பட்டுள்ளன. இலங்கை ராணுவம் விரிவான குண்டு தாக்குதல் மூலம் பொதுமக்களை கொன்று விட்டு ஆஸ்பத்திரி, பள்ளி கூடங்கள், மற்றும் பொதுமக்கள் வாழ் விடங்களில் குண்டு வீச்சுகளை நடத்தி உள்ளது.

மனிதாபிமான உதவிகளை மறுத்துள்ளது. போரில் உயிர் தப்பி உள்ளூரில் இடம் பெயர்ந்தோம். விடுதலைப்புலிகள் என சந்தேகப்பட்ட வர்களும், மனித உரிமை மீறல்களை சந்தித்து உள்ளனர். இந்த 4 அம்சங்களுக்கும் இலங்கையில் சிங்கள அரசு, ராணுவத்தால் இனப்படு கொலைகள் நடந்து இருப்பதை தெளிவாக நிரூபித்துள்ளது.

மேலும் இனரீதியான அரசியல், சமூக பொருளாதார புறக்கணிப்பு கொள்கை போன்றவற்றின் மூலம் தொடர்ந்து தமி ழர்கள் இனப்படுகொலை குற்றங்களுக்கு உட்படுத்தப்படுவதாகவும் அறிக்கை சுட்டிகாட்டி உள்ளது. இதுவரை நாடுகடந்த தமிழ்ஈழ அரசும், மற்றவர்களும் கூறி வந்த போர் குற்றக் காட்சிகளை ஐ.நா. குழு அறிக்கை உறுதிபடுத்தி உள்ளது.

இந்த அறிக்கையில் கற்பழிப்பு, சட்டத்திற்கு முரணான உயிர்ப்பறிப்பு ஆள் கடத்தல், பறந்து வட்ட குண்டு தாக்குதல், உணவு மருந்து மறுப்பு, ஊடகங்களை கட்டுப்படுத்துதல், அரசின் மிட்டல் போன்றவை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இலங்கை அரசு மீது ஆரம்பத்தில் இருந்தே தமிழ் மக்கள் சந்தேகப்பட்டார்கள். அவர்கள் சந் தேகப்பட்ட அனைத்தும் நடந்துள்ளது அறிக்கை மூலம் தெரிகிறது.

தமிழ் மக்கள் மீது இலங்கை அரசு நடத்திய படுகொலை சம்பந்தமான அறிக்கையை ஏற்கனவே நாடு கடந்த தமிழ்ஈழ அரசு ஐ.நா. சபைக்கு அனுப்பி இருந்தது. ஐ.நா. குழு அறிக்கையின் படி இலங்கை அரசு மீது சர்வதேச அமைப்பு மூலம் போர் குற்ற விசாரணை நடத்த வேண்டும் என ஐ.நா. பொதுச் செயலாளர் பான்கீமூனை கேட்டுக் கொள்கிறோம்.

இலங்கை அரசு தலைவர்களையும், ராணுவ தளபதிகளையும் கூண்டிலேற்ற இதுவே சரியான நேரம் என கருத்துகிறோம். இலங்கையில் நடக்கும் இனவெறி தமிழர்களிடமும், சிங்களர்களிடமும் நிரந்தர முரண்பாட்டை உருவாக்கி விட்டது. எனவே இரு தரப்பினரும் ஒன்றாக இருக்க சாத்தியம் இல்லை என்பதையும் சுட்டிகாட்ட விரும்புகிறோம்.

No comments:

Post a Comment