Labels

Saturday, April 2, 2011

ராஜபக்சேக்கு கறுப்பு கொடி: நாம் தமிழர் இயக்கம் அறிவிப்பு



இலங்கை அதிபர் ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மும்பை விமான நிலையத்தில் கறுப்பு கொடி காட்டப்படும் என்று நாம் தமிழர் இயக்கத்தினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து நாம் தமிழர் இயக்கத்தின் மாநில செயலாளர் ராஜேந்திரன் கூறியதாவது:


பிரிட்டன் நாட்டில் நடைபெற்ற விழாவில் ராஜபக்சே கலந்து கொள்வதற்கு அங்குள்ள தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தினர். இதனையடுத்து அந்த விழாவில் அவர் கலந்து கொள்ளவில்லை.


இதேப்போன்று மும்பையில் நடைபெறும் கிரிக்கெட் நிகழ்ச்சியிலும் அவரை கலந்து கொள்ளாமல் தடுப்பதற்காக பாகுபாடு இன்றி கலந்து கொள்ளவேண்டும். இன்று விமான நிலையத்தில் ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு கொடி காட்டப்படும். மேலும் அவருடைய உருவப்படம் தீயிட்டு கொளுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment