Labels

Monday, April 4, 2011

ஜெயலலிதாவுக்கும் ராஜபக்சேவுக்கும் வேறுபாடில்லை: நாஞ்சில் சம்பத்



அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கும், இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கும் இடையே வேறுபாடு ஏதுமில்லை என, மதிமுகவின் கொள்ளை அணி விளக்கச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசினார்.


கோவில்பட்டியில் நடந்த மதிமுக கூட்டத்தில் பேசிய அவர்,

19 மாத காலம் பொடா சட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளரை சிறையில் வைத்தவர் ஜெயலலிதா. பொடா சட்டத்தில் கைது செய்திருந்த போதிலும், ஜெயலலிதாவை வைகோ ஆதரித்தார். அதிமுகவை அரியணைக்கு ஏற்ற நினைத்திருந்தபோது கூட்டணியில் இருந்து திட்டமிட்டு மதிமுக வெளியேற்றப்பட்டது. மதிமுகவினருக்கு ஜெயலலிதா செய்துள்ள துரோகத்தை தொண்டர்கள் என்றும் மறக்க மாட்டார்கள். தேர்தலில் பங்கேற்க வேண்டாம் என்று வைகோ எடுத்த முடிவை மதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் வைகோவின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க கூடாது என்பதற்காக, பல கோடி ரூபாய் கொடுத்திருக்கிறது. தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கும், ஜெயலலிதாவுக்கும் வேறுபாடில்லை.


இவ்வாறு நாஞ்சில் சம்பத் பேசினார்.

No comments:

Post a Comment