Labels

Thursday, May 19, 2011

பாதுகாப்பாகவும் கௌரவமாகவும் வாழ்வதற்கு சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசினை அமைப்பதே ஒரேவழி: விஸ்வநாதன் உருத்திரகுமாரன்



தமிழீழத் தேசிய துக்க நாள் நாம் துயரத்தால் துவண்டு போகும் நாள் அல்ல. மாறாக நமது மக்கள் அடைந்த துயரத்தையும் துன்பத்தையும் அவலத்தையும் நமக்குள் உயிர்ப்பாய் உள் வாங்கி – நாம் ஒரு தேசமாக பாதுகாப்பாகவும் கௌரவமாகவும் வாழ்வதற்கு சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசினை அமைப்பதே ஒரேவழி என்பதனை நமக்குள் நாமே உறுதி படுத்திடும் நாளாக இது அமைய வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் அவர்கள் தமிழீழ தேசிய துக்க நாள் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அதனுடைய முழுமையான விபரம் :

அன்பான தமிழீழ, தமிழக மற்றும் உலகத் தமிழ் மக்களே!

இன்று தமிழீழத் தேசிய துக்கநாள்!

சிறிலங்கா அரசு ஈழத் தமிழர் தேசத்தின் மீது நடத்திய இனஅழிப்புக் கொடூரங்களின் வெளிப்பாடாய், ஈழத் தமிழர்களை மட்டுமன்றி உலகின் அனைத்துத் தமிழர்களையும் ஆழ்ந்த சோகத்தில் உறைய வைத்த நிகழ்வுகளின் குறியீடாய் அமைந்து விட்ட நாள்.
தென் தமிழீழத்தில் ஆரம்பித்து வன்னிப் பெருநிலமெங்கும் படர்ந்து விரிந்த சிங்களத்தின் கொடுங்கரங்கள் முள்ளி வாய்க்கால் மூலைக்குள் வைத்து நமது மக்களைக் கொன்றொழித்து இனப்டுகொலை புரிந்த பெரும் கொடுமையின் இரத்த சாட்சிமாய் அமைந்து விட்ட நாள்.
தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரனின் வழிநடத்தலாலும் மாவீரர்களின் ஈகத்தாலும் வீரத்தாலும் உருவாக்கப்பட்ட நிகழ்வுபூர்வமான தமிழீழம்; தமிழ்மக்களின் அரசியல் அபிலாஷைகளை வெளிப்படுத்துவதற்கான அரசியல் வெளியை உருவாக்கிய நிகழ்வுபூர்வமான தமிழீழம் சிங்கள ஆக்கிரமிப்பிற்கு முழுமையாக உள்ளான கரி நாள்.
சிங்கள இனவாதப்ப+தத்தின் கோரதாண்டவத்தில் 80,000 க்கும் மேற்பட்ட நமது உறவுகள் கொத்துக் கொத்தாக நம் கண்முன்னாலேயே கொல்லப்பட்டு நாகரீக உலகை அதிரச் செய்த பெரும் இனப்படுகொலை நடந்தேறிய நாட்களின் உச்சமாக அமைந்;து விட்ட நாள்.
இந்த நாளில் சிங்களஆக்கிரமிப்பாளர்களால் நரபலி எடுக்கப்பட்டு தமது இன்னுயிர்களை இழந்த அனைத்துத் தமிழர்களுக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது மரியாதை வணக்கத்தைச் செலுத்திக் கொள்கிறது. சிங்களத்தின் ஆக்கிரமிப்பை எதிர்த்து நின்று போராடி வீரச்சாவைத் தழுவிக் கொண்ட அனைத்து மாவீரர்களுக்கும் தனது வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

இத் தினத்தை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஏன் தமிழீழ தேசிய துக்க நாளாகப் பிரகடனப்படுத்தியது?
ஈழத் தமிழர் தேசத்தில் வரலாறு காணாத அளவுக்கு துன்பமும் துயரமும் அவலமும் நிரம்பியதாக நமது மக்களின் வாழ்வு போரின் இறுதிக் கட்ட நாட்களில் சிங்களத்தால் சின்னா பின்னமாக்கப்பட்டிருந்தது.

மக்கள் தம் வாழ்விடங்களெங்கும் – வீதிகளில், வீடுகளில், பள்ளிக்கூடங்களில், வழிபாட்டுத்தலங்களில், மருத்துவமனைகளில், திருமணவீடுகளில், இழவுச் சடங்குகளில் எங்கும் நமது மக்கள் துரத்தித் துரத்திக் கொல்லப்பட்டார்கள்.
நடக்கும்போதும், படிக்கும்போதும், உண்ணும்போதும், உடுக்கும் போதும், உறங்கும்போதும், கூடும்போதும், இயலாது இருக்கும் போதும் எங்குமே எப்போதுமே கலைத்துக் கலைத்து வேட்டையாடப்பட்டார்கள்.

குப்பை கூளங்களைக் கூட்டித் தள்ளி ஒரு மூலைக்குள் வைத்துத் தீயிட்டுக்; கொழுத்துவதைப்போல – மூட்டைப்பச்சிகைள தட்டிக் கொட்டி ஒருங்கு சேர்த்துக் காலால் நசுக்குவதைப்போல – நமது மக்களை அடித்துத் கலைத்து விரட்டிச் சென்று கடற்கரையோரத்தில், ஒரு சிறிய நிலப்பகுதியில் வைத்து நரபலி எடுத்தது சிங்களம்.
தமிழீழ மக்கள் இனப்படுகொலைக்குள்ளாக்கப்பட்ட இந்த நினைவுகள் தமிழ் மக்களின் கூட்டு நினைவுகளாக தலைமுறை தலைமுறையாக உலகில் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் நிலைக்கப் போகின்ற நினைவுகள்.

இந் நினைவுகளைப் பேணுவதற்கும் தலைமுறை தலைமுறையாய் எடுத்துச் செல்வதற்கும், தமிழீழ மக்கள் அடைந்த துயரையும் அவலத்தையும் உலகில் வாழும் அனைத்துத் தமிழர்களும் நினைவு கொள்ளக்கூடிய வகையில் மே 18 ஆம் நாளைத் தமிழீழ தேசிய துக்க நாளாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பிரகனடம் செய்துள்ளது.

இத் தேசிய துக்கநாளையும் ஒவ்வொரு வருடமும் மே 12-18 க்கு இடைப்பட்ட நாட்களினை இனப் படுகொலையின் நினைவேந்தல் வாரமாகவும் துயர் பகிரவும், உணர்வு பெற்று, எழுச்சி கொள்ளவும் உரியவகையில் நடைமுறைப்படுத்துவது எனவும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முடிவு செய்திருக்கிறது. இவ் வருடம் முதற் கொண்டு இந் நடைமுறை ஆரப்பிக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் தமிழர் வரலாற்றில் ஒரு முக்கியமான ஒரு கூட்டு நினைவு ( Collective memory) ஆகும். யூதர்கள்மேல் நாசிகளால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு ( holocaust) எவ்வாறு யூத மக்களிடையே ஒரு வரலாற்றுக் கூட்டு நினைவாக அமைந்ததோ அதேபோல தமிழர்களுக்கு, ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகில் வாழும் அனைத்துத் தமிழர்களுக்கும் முள்ளிவாய்க்கால் ஒரு முக்கியமான கூட்டுநினைவாக அமைகிறது. தமிழருக்கு எதிரான இனப்படுகொலையின் ஓர் இரத்த சாட்சியமாக இருக்கிறது.

துயர்தோய்ந்த, அவலம் நிரம்பிய கூட்டுநினைவுகள் ஒரு மக்கள் கூட்டத்தின் ஆழ்மனதில் காலம் காலமாக நிலைத்து நிற்கக் கூடியவை. வரலாற்றை மாற்றும் சக்தி கொண்டவை. ய+த மக்களின் தமக்கான தனி அரசு என்ற கனவு நாசி இனப்படுகொலையின்பின் தான் சாத்தியமாகியது. பலஸ்தீன மக்களுக்கென எதிர்காலத்தில் உருவாகவிருக்கும் தனிஅரசும் இம் மக்கள் தாம் அனுபவித்து வரும் ஒடுக்குமுறைகளின் கூட்டுநினைவினை அரசியல் இயக்கமாகத் தொடர்ச்சியாகப்
பேணிவருவதனால்தான் சாத்தியமாகப் போகிறது. ஈழத் தமிழ் மக்களுக்கும் இவ்வுதாரணங்கள் மிகவும் பொருந்தப் போகின்றன.

தமிழீழத் தேசிய துக்க நாள் நாம் துயரத்தால் துவண்டு போகும் நாள் அல்ல. மாறாக நமது மக்கள் அடைந்த துயரத்தையும் துன்பத்தையும் அவலத்தையும் நமக்குள் உயிர்ப்பாய் உள் வாங்கி – நாம்ஒரு தேசமாக பாதுகாப்பாகவும் கௌரவமாகவும் வாழ்வதற்கு சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசினை அமைப்பதே ஒரேவழி என்பதனை நமக்குள் நாமே உறுதி ப+ண்டிடும் நாளாக இது அமைய வேண்டும்.

நமது மக்களை இனஅழிப்பு செய்தவர்களை, நமது மக்களுக்கெதிராக குற்றங்கள் புரிந்தவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கு நாம் உத்வேகத்துடன் செயற்படுவதற்கு திடசங்கற்பம் ப+ணும் நாளாக இது அமைய வேண்டும்.
சிங்களத்தால் சீரழிக்கப்பட்ட நமது மக்களின் வாழ்வினை மீளக் கட்டியெழுப்புவதற்கு நாம் உறுதுணையாக நின்று செயலாற்ற வேண்டிய அவசியத்தை நமக்குள் நன்கு உள்ளிருத்திக் கொள்ளும் நாளாக இது அமைய வேண்டும்.

இவை குறித்த செயற்பாடுகளை நாம் இன்னும் துணிவுடன் முடுக்கி விட இந்த நாள் உத்வேகம் கொடுக்கும் நாளாக அமைய வேண்டும்.
தமிழீழத் தாயகத்தில் தமிழருக்கான முதல் அரசாகத் தமிழீழத் தனியரசு அமைக்கப்படுவதற்கான தேவையினை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையும் அதனைத் தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் நிகழ்வுகளும் நமக்கு மேலும் தெளிவாக உணர்த்தி வருகின்றன.

இனப்படுகொலைக்கு உள்ளாகியுள்ள ஒரு தேசம், தமது பாதுகாப்பான வாழ்வுக்கு தனி அரசினை அமைப்பதன் ஊடாக நியாயமும் நீதியும் தேடுவதென்பது அனைத்துலக சட்டங்களினிடையே ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. தேசங்கள் தமக்கான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தனிஅரசினை அமைப்பதற்கும் அனைத்துலக சட்டங்கள் வழிவகை செய்கின்றன.

ஆனால் இச் சட்டங்கள் எல்லாம் உலகின் பலம் வாய்ந்த அரசுகள் விரும்பும்போது மட்டும்தான் செயல் வடிவம் பெறுகின்றன. நீதியின்பாற்பட்டு அன்றி தமது சுயநலன் சார்ந்தே இந்த அரசுகள் தமது முடிவுகளை மேற்கொள்கின்றன. இத்தகையதொரு உலக ஒழுங்கில்தான் நாம் நமது இலட்சியப்பயணத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இது இன்று நாம் எதிர் நோக்கும் முக்கியமான ஒரு சவால். இத்தகையதொரு சவால் மிக்க ஒரு சூழலில் நமக்குக் கிடைக்கக்கூடிய சாதகமான வாய்ப்புக்களையெல்லாம் தவற விடாமல் பயன்படுத்துவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இந்த வகையில், தற்போது வெளிவந்துள்ள ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கையினை நாம் சாதகதாகப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ் அறிக்கை சிறிலங்கா அரசு புரிந்துள்ள போர்க்குற்றங்களை மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்களை தெளிவாகக் கோடிட்டுக் காட்டியுள்ளது. சிறிலங்கா அரசின் இராணுவ நடவடிக்கைகள் முடிவுக்கு வந்த பின்னர் 140,000 வரையிலான தமிழ் மக்களுக்கு என்ன நடந்தது என கணக்கிட முடியாததாய் உள்ளது என்பதனையும் இவ் அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. அதே வேளை இவற்றை சிறிலங்கா அரசின் தமிழர்கள் மீதான இன ஒழிப்பின் (பநழெஉனைந) ஒரு அங்கமாக இவ் அறிக்கை வகைப்படுத்தவில்லை.
இருந்து போதும் ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கை சுட்டிக்காட்டிய சிறிலங்கா படையினர் புரிந்திருக்கக் கூடியதான மோசமான ஐந்து வகை போர்க்குற்ற நடடிக்கைகைளில் நான்கு இனஅழிப்பின் பாற்பட்டவையென தெளிவாக ஆவணப்;படுத்தப்பட்டுள்ளது.
மக்களை வகைதொகையின்றி எறிகணை வீச்சுக்களால் கொலை செய்தமை, மருத்துவமனைகள் மீதும் மனிதாபிமான இலக்குகள் மீதும் எறிகணை மற்றும் குண்டு வீச்சுக்களை நிகழ்த்தியமை, மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை வழங்க மறுத்தமை, சிறிலங்கா அரசு புரிந்த மனித உரிமை மீறல்கள் – இவையெல்லாம் அனைத்துலகச் சட்டங்களின்படி இனஅழிப்பின் பாற்பட்டதாக அமையக்கூடியதான குற்றங்கள்தான்.
இவை தமிழ் மக்களுக்கு எதிராக பெரும்பாலும் சிங்களவர்களையே கொண்ட சிறி லங்கா அரசின் அரசியல், இராணுவத்தலைமைகளினால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை, மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், போர்க் குற்றங்களாக அமைந்துள்ளன. இச் சர்வதேச குற்றங்களை திட்டமிட்ட முறையில் அரசியல் ராணுவத்தலைமைகள் நிறைவேற்றியுள்ளதனால் அவர்கள் இதற்கான கூட்டுப் பொறுப்பினை ஏற்றுக் கொள்ளவேணடு; ம். மேலும், நிபுணர் குழுவால் கவனமாக ஆராயப்பட்டு பெறப்பட்ட மேலதிக சான்றுகளின் படி யுத்தம் முடிவடைந்த பின்பும் கூட தமிழ் மக்கள் இன அடிப்படையில் சித்திரவதை, பலவந்தமான சிறைப்படுத்தல,; ஏனைய வகையில் அமைந்த மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றிற்கு உட்படுத்தப் படுகிறார்கள் என்பதும் இவை இலங்கை அரசின் நடைமுறைக் கொள்கையின் பால் அமைந்தவையே என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நிபுணர் குழுவின் அறிக்கையின்படி தமிழ் மக்களுக்கு ஏதிரான இனப்படுகொலை இங்கு நிகழ்த்தப் பட்டுள்ளது என்பது இதன் மூலம் மிகவும் தெளிவாக நிருபிக்கப்பட்டுள்ளது.

இருந்து போதும் அரசுகள் தமது அரசியல் நலன்களின் அடிப்படையிலும்; இனப்படுகொலைக் குற்றச்சாட்டு ஏற்படுத்தக்கூடிய அரசியல் விளைவுகளின் அடிப்படையிலும் சிறிலங்கா அரசு புரிந்த குற்றங்களை இனஅழிப்பாக வகைப்படுத்துவதில் தயக்கம் காட்டுகின்றன. இதன் எதிரொலியாகவே ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கையும் இவற்றை இனஅழிப்பின் அங்கமாக குறிப்பிடாமையினை நாம் நோக்க வேண்டும்.

இதனால் இன்று நம்முன்னால் உள்ள ஒரு முக்கியமான பணி ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கையினைத் துணையாகக் கொண்டு சிறிலங்கா அரசு புரிந்தது இனப்படுகொலைதான் என்பதனை அனைத்துலக அரங்கில் நிலை நிறுத்துவதற்காகச் செயற்படவேண்டியதே. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இதற்கான செயற்பாடுகளை முனைப்புடன் முன்னெடுக்க ஆரம்பித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கையினை எவரும் குப்பைத்தொட்டிக்குள் வீசி விட முடியாத அளவுக்கு வலுவான அனைத்துலக சமூகத்தின் உணர்வலைகளைத் தட்டியெழுப்பி, இவ் அறிக்கையின் அடிப்படையில் மேலதிக நடடிக்கைகள் எடுக்கப்படவேண்டுமென்ற அனைத்துலக கருத்தைக் காத்திரமாக உருவாக்குவது முக்கியமானது உன உணர்ந்து செயற்படுகிறோம்.

அன்பான மக்களே!

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒரு கருத்துருவாக அறிவிக்கப்பட்டபோது ஒரு புதிய எண்ணக்கருவாக இருந்த இதன் சாத்தியப்பாடு குறித்துப் பலதரப்பிலும் பல்வேறுவகையான சந்தேகங்கள் இருந்தன. சிறிலங்கா அரசாங்கத்திடமிருந்தும் அச்சுறுத்தல்கள் இருந்தன. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பான கூட்டங்களை நடாத்தவதிலும் கூட இடையறுகள் இருந்துன. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை உருவாக்குவதற்கான நாடு தழுவிய செயற்குழுக்களை அமைப்பதலும் தடங்கல்கள் வந்தன. தேர்தல்களை நடாத்துவதிலும் சவால்கள் எழுந்தன. இருந்த போதும் இச் சவால்கள் எல்லாவற்றையும் தாண்டி நாம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற குழந்தையை ஆரோக்கியமான குழந்தையாக ஈன்றெடுத்துள்ளோம்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற இக் குழந்தை தவழ்ந்து, தற்போது ஒரு வயதை நிறைவு செய்த நிலையில் நிமிர்ந்து நடைபயிலத் தொடங்குகிறது. எந்த ஒரு புதிய அமைப்பும் உருவாகும்போது அவ்வமைப்பு தனது நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தி முன்னெடுக்கச் சிறிது காலம் தேவைப்படும். இது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கும் பொருந்தும்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நிதானமாக அதேவேளை திடமாகத் தனது காலடிகளை முன்னெடுத்து வைக்கத் தொடங்கியுள்ளது. எமது கருத்தக்களை அனைத்துலக கொள்கைவகுப்பாளர்கள் உன்னிப்பாக அவதானிக்கத் தொடங்கியுள்ளனர். ஊடகங்கள், குறிப்பாக இந்தியாவிலும் மேற்கு நாடுகளிலும் உள்ள பிரதான ஊடகங்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கருத்தக்களையும் வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளன.

இதேவேளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உருவாக்கமே ஈழத் தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் வெற்றிதான் என்பதனை நாம் கவனத்திற் கொள்ள வேண்டும். ஈழத் தமிழ் மக்களின் சுதந்திரவேட்கையினை எவராலும் நசுக்கி விட முடியாது என்ற செய்தியினை சிங்களப் பேரினவாதிகளுக்கும் அனைத்துலக சமூகத்துக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உருவாக்கம் தெளிவாக எடுத்துக் கூறியிருக்கிறது.

சுதந்திரத் தமிழீழ அரசினை அமைப்பதற்குரிய அரசியல் இராஜதந்திர நகர்வுகளுக்கு ஒரு பலமான அடித்தளத்தை இடும் செயற்பாடுகளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மேற் கொண்டு வருகிறது. உலகில் பலமிக்க அரசுகளின் நலன்கள், ஒரு பிரச்சினையில் இந்த அரசுகள் எடுக்கும் நிலைப்பாடுகள் காத்திரமான பங்கினை வகிக்கும் என்பதனை நாம் கவனத்திற் கொண்டு இம் முயற்சியினை மேற் கொண்டுள்ளோம். இதவேளை ஒவ்வொரு நாட்டின் உள்நாட்டு நிலைமைகளுக்கும் உள்நாட்டுக் கொள்கைகைளுக்கும் வெளியுறவுக் கொள்கைக்கும் இடையே நெருக்கமான தொடர்புகள் இருக்கும் நிலைமைகளையும் உள்வாங்கியே எமது விய+கங்களை வகுத்து வருகிறோம்.

அன்பான மக்களே!

இன்றைய நாளில் அனைத்துலக அரசியல் தளத்தில் ஆதரவிiயுனம் அங்கீகாரத்தினையும் வென்றெடுப்பதற்கு நாம் முன்னெடுக்கும் செயற்பாடுகளையும், கடைப்படிக்கும், கடைப்பிடிக்கவிருக்கும் அணுகுமுறையினைக் வெளிப்படுத்துவது பொருத்தமுடையது எனக் கருதுகிறோம்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஆதரவினையும் அங்கீகாரத்தையும் வென்றெடுப்பதற்கு நாம் நமது அரசாங்கத்தை ஒரு வலுமையமாக ஆக்கிக் கொள்ள வேண்டும்;. பலத்தினதும் நலன்களதும்; அச்சில் சுழலும் இவ் உலக ஒழுங்கில் உலகின் கவனத்தை நாம் நமது பக்கம் ஈர்க்க வேண்டுமானால் நாம் பலமிக்கவர்களாக மிளிர வேண்டும்.

ஈழத் தாயகத்தின் புவியியல் அமைவிடம், தாயக மக்களின் தளராத விடுதலை உணர்வு, புலம் பெயர் மக்களின் தியாகப்பற்றும் செயற்பாடுகளும், உலகம் முழுவதும் பரந்துள்ள 80 மில்லியன் தமிழர்களும் ஒருங்கு சேரந்து எழுப்பக்கூடிய தோழமை உணர்வு – இவையெல்லாம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒரு வலுமையமாக உருவாகுவதற்குத் தேவையான வலுவினைத் தரக்கூடியவை.

இத்தகைய ஒரு வலுமையத்தை நாம் உருவாக்கிக் கொள்வது தொடர்பாக நம்பிக்கை தரும் வகையில் முன்னேறத் தொடங்கியுள்ளோம். தமிழகத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தக்கான ஆதரவுத் தளத்தை விரிவாக்கம் செய்வதில் தமிழின உணர்வாளர்கள் பேராசிரியர் சரஸ்வதி அவர்களின் ஒருங்கிணைப்பில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தோழமை மையத்தை அமைத்து முனைப்பாக ஈடுபட்டு வருவது நமது நம்பிக்கைகைகளை மேலும் வலுவடையச் செய்கிறது.

இன்றைய உலக ஒழுங்கு இயங்கும் விதத்தை புரிந்து கொண்டு இயங்கும் நாம் உலக அரசகளுடன் முதற்கண் குறி வைப்பது அவர்களின் வெளிப்படையான அங்கீகாரத்தை அல்ல. நாம் இயங்குவதற்கும், நமது நாடு கடந்த அரசாங்கத்தை செயற்படுத்துவதற்கும் வாய்ப்பும் வசதியும் கிடைக்கும் வகையிலான ஒரு மறைமுகமாக அங்கீகாரத்தில் இருந்துதான் நாம் நமது இராஜதந்திர உறவுகளை ஆரம்பிக்கிறோம். ஒவ்வொரு நாட்டின் சட்டங்களும் ஜனநாய விழுமியங்களும் எமது செயற்பாடுகளுக்கு உறுதுணையாயிருக்கின்றன. இதன் அடுத்த கட்டம் வெளிப்படையான அங்கீகாரத்தை நோக்கியதாக இருக்கும். இத்தகைய மறைமுகமான மற்றும் வெளிப்படையான அங்கீகாரம் நாம் நமது இலக்கு குறித்து முன்னேறுவதற்குத் துணைபுரியக்கூடியவை.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், அனைத்துலக அரங்கில் சிறிலங்கா அரசை எதிர் கொள்ளக்கூடிய ஒரு வலுமையமாக உருவெடுப்பதற்கான அடிப்படைகளை நிலைநிறுத்தி, தென்னாசியாவினதும் இந்து சமுத்திரப்;பிராந்தியத்தினதும் புவிசார் அரசியலில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் தவிர்க்கமுடியாத அங்கமாக நிலைபெறுவதற்கான சூழலை உருவாக்கும் வகையில் நமது செயற்பாடுகளை முன்னெடுக்க முனைகிறோம்;.

இனப்படுகொலைக்குள்ளாகியுள்ள நமது மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு சுதந்திரத் தமிழீழ அரசினை உருவாக்குவதனைத்தவிர வேறுவழியில்லை என்ற கருத்துக்கு கூடுதலான அனைத்துலக ஆதரவினைத் தேடுவதில் நாம் தீவிர கவனம் செலுத்தி வருகிறோம். சிறிலங்கா அரசின் இனவாதப் போக்கும் தமிழ் மக்களை ஒரு தேசமாக அங்கீகரிக்காது – சமத்துவத்துடன் நடாத்தாது சிங்கள மேலாதிக்கத்தினை நிலைநிறுத்தும் முயற்சிகளும் எமது தனியரசு நிலைப்பாட்டை மேலும் வலும்படுத்த துணைநிற்பவையாக நாம் உணர்கிறோம்..
தமிழீழத்தனியரசு அமைவது பிராந்திய மற்றும் அனைத்துலக சக்திகளின் நன்மைகளோடும் ஒத்துப்போகக்கூடியது என்பதனையும் தென்னாசியாவினதும் இந்து சமுத்திரப்பிராந்தியத்தினதும் அமைதிக்கும் உறுதிப்பாட்டுக்கும் துணைபுரியக்கூடியது என்பதனையும் கருத்துநிiயில் உறுதியாக முன்வைத்து வருகிறோம்.

இலங்கைத்தீவில் புவிசார் அரசியல் அடிப்படையில் அக்கறை செலுத்தும் பலமிக்க அரசுகளில் எவற்றின் நலன்கள் ஈழத் தமிழ் நலன்களோடு ஒரேதளத்தில் சந்திக்கக்கூடியவை என்பதனை ஆராய்ந்து, அவற்றை அரசியல் இராஜதந்திர அறிவியல் மட்டத்தில் முன்வைத்து, இவ் விடயம் தொடர்பாக கொள்கைவகுப்பாளர்கள் மத்தியில் ஒரு சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் நாம் தற்போது ஈடுபட்டு வருகிறோம். இம் முயற்சியினை வலுப்படுத்துவதற்காக நாம் ஒரு ஆய்வுநிறுவனத்தையும் உருவாக்கம் செய்து வருகிறோம்.
என்றும் தணியாத ஈழத் தமிழரின் சுதந்திரத் தாகத்தினை ஒரு இம்மி கூட உங்களால் அடக்கி நசுக்க முடியவில்லை என்ற செய்தியினை சிங்கள தேசத்துக்கு தெளிவான செய்தியாக நாம் இன்று மீண்டும் ஒருமுறை தெரிவிக்க விரும்புகிறோம். ஐ நா முன்பும்இ ஜெனீவாவிலும் இன்னும் பல்வேறு நகரங்களிலும் வீதிகளிலும் ஈழத் தமிழர் ஒன்று கூடி ஒத்த குரலில் இன்று முறையிடுவது எல்லாம் அவர்கள் தமக்கான சுய நிர்ணய உரிமை மீது கொண்டுள்ள அசையாத நம்பிக்கையையும் பற்றுறுதியையும் மிகத் தெளிவாகவே குறியிட்டு நிற்கிறது.
ஈழத் தமிழரது சுதந்திர வேட்கைத் தணல் என்றும் இல்லாதவாறு தீவிரமாகவே வெந்து கொண்டிருக்கிறது. தமது முழுமையான விடுதலை மேல் அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கை அவர்களது அயராத உழைப்புக்கும் போராட்டத்துக்கும் உந்து சக்தியாக அவர்களை இயக்கிக் கொண்டே இருக்கிறது. நசுக்கப் பட்டோம் என்று நலிந்து போகாமல்இ அடக்க வந்தார்கள் என்பதால் அடங்கிப் போகாமல் இழப்புக்கள் எல்லாவற்றின் மத்தியிலும் எமது பொறுப்புக்கள் என்ன என்பதை தெரிந்து கொண்டு எமது தோள்களில் சுமத்தப் பட்ட பாரங்களை தெளிவாகப் புரிந்து கொண்டு போராட்டப் பாதையில் நாம் உழைத்துக் கொண்டு தான் இருக்கிறோம்.
இரண்டு ஆண்டுகளாக நாம் எல்லாம் சேர்ந்து மேற்கொண்ட உழைப்பு வீண் போகவில்லை. எமது தொடர்ச்சியான போராட்டத்தின் பலாபலன்கள் இப்போது வெளிவரத் தொடங்கி உள்ளன. சிங்கள அரச இராணுவ தலைவர்கள் விரும்பிய படியெல்லாம் வெளிப்படையாக பயணம் பண்ண முடியாத ஒரு சூழ்நிலை உருவாகி உள்ளதை நாம் இன்று காண்கின்றோம். அவர்கள் இன்னும் கொஞ்ச காலத்துக்கு ஓடலாமே ஒழிய பதவியுடனான சட்ட விலக்களிப்பு ( Immunity) என்ற முகத்திரையின் பின்னால் என்றைக்கும் ஒழித்திருக்க முடியாது என்ற உண்மையை இன்று நாம் சிங்கள தேசத்துக்கு சொல்லி வைக்க விரும்புகிறோம். சர்வதேசக் குற்றச் சாட்டுக்களின் பெயரால் அம்முகத்திரை ஏற்கெனவே சிதைக்கப் பட்டு வருவதனை நாம் எல்லோரும் நன்கு அறிவோம். நாங்கள் அனைவரும் இன்னும் துணிவுடனும் விவேகத்துடனும் பயணிக்க வேண்டிய தூரம் நிறையவே உண்டு.

அனைத்துலகச் சமூகத்தினை நம்மை நோக்கித் திரும்பச் செய்ய நாம் ஒன்றுடனொன்று தொடர்புபட்ட, பல்வேறு அரசியல் இராஜதந்திர நகர்வுகளைத் தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டியுள்ளது. தமிழீழத்தின் நலனையும் உலகின் பலம் மிக்க அரசுகளின் நலன்களையும் எவ்வாறு இணைய வைக்க முடியும் என்பது குறித்து கூடுதல் கவனம் கொடுக்க வேண்டியள்ளது. உலகில் நியாயம் மறுக்கப்பட்ட மக்களாக நம்மை உலக சமூகத்தின் மனச்சாட்சியின் முன்னிறுத்தி அனைத்துலக சட்டங்களுக்கும் நடைமுறைகளுக்கும் உட்பட்டு நீதி கோரும் மக்களாக நம்மை வீச்சாக வெளிப்படுத்த வேண்டியுள்ளது. நாம் தனித்து நிற்காது உலகில் நியாயத்துக்காக, நீதிக்காகக் குரல் எழுப்புக்கூடிய அனைத்துச் சக்திகளுடனும் நமது கரங்களை நாம் இறுகக் கோர்க்க வேண்டியுள்ளது. இவற்றுக்கெல்லாம் தமிழர் அனைவரும் ஒருங்குபட்டுச் செயற்பட வேண்டியுள்ளது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் கூட்டுநினைவு இதற்கான சக்தியை நம்மெல்லோருக்கும் வழங்கும் என நம்புவோம்.

நன்றி

விஸ்வநாதன் உருத்திரகுமாரன்
பிரதமர்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

No comments:

Post a Comment