Labels

Monday, May 9, 2011

இலங்கை அரசை குற்றவாளிக்கூண்டில் நிறுத்த கோரி கனடாவில் கையெழுத்து போராட்டம்





போர்க்குற்றம், இனஅழிப்பு, மனித குலத்திற்கு எதிரான குற்றம் புரிந்து வரும் சிறிலங்கா அரசை குற்றவாளிக்கூண்டில் நிறுத்த சர்வதேச சமூகத்தின் ஆதரவை திரட்டும் கையெழுத்துப் போராட்டம் 27.04.2011 மாலை கனடாவின் மொன்றியல் மாநகரில் தொடங்கியது.

நகரின் முக்கிய பேருந்து நிலையங்களில் ஆரம்பமாகிய இப்போராட்டம் தொடர்ந்து தினமும் நகரின் மக்கள் அதிகமாக சென்றுவரும் இடங்களிலும், வர்த்தக பகுதிகளிலும், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை நோக்கியும் விரிவடைய இருக்கின்றது.


போராட்டத்தின்போது இலங்கை அரசு அறுபது வருடமாக திட்டமிட்டு மேற்கொண்டுவரும் தமிழ் இனப்படுகொலையை தடுத்து நிறுத்தி தமிழர்கள் சுதந்திரமாக வாழ பல்வேறு இன மக்களும், சர்வதேச மனிதநேய அமைப்புகளும் தங்கள் ஆதரவை வழங்கவேண்டும் என பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.


கையெழுத்து போராட்ட ஆரம்ப நிகழ்வில் பெரும்பாலான இளைஞர்கள் கலந்துகொண்டு தமது பங்களிப்பை வழங்கினர். தொடர்ந்து நடைபெற இருக்கும் போராட்டங்களில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் 514 400 5331 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு தொடர் போராட்டம் நடைபெற இருக்கும் இடங்கள் பற்றிய விபரங்களை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment