Labels

Thursday, May 19, 2011

குற்றவாளி ராஜபக்சேவுக்குத் தண்டனை கொடு அய்.நா.முன்பு முழு ஒரு நாள் போராட்டம்





மனிதப் படுகொலைகள் செய்த இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்குத் தண்டனை கொடு என்று அய்.நா. முன்பு முழு நாள் போராட்டம் 18.05.2011 அன்று நடைபெற்றது. திராவிடர் கழகத்தின் சார்பில் தலைமை நிலையச் செயலாளரும், பெரியார் பன்னாட்டு மய்யத்தின் சார்பில் அதன் இயக்குநர் மருத்துவர் சோம. இளங்கோவன் மற்றும் தோழர்கள் பங்கேற்றனர்.

மே 18 அன்று நியூயார்க்கில் அய்க்கிய நாட்டு சபை முன்பு போராட்டம் ஒரு நாள் முழுதும் அமெரிக்க நாட்டிலுள்ள நியூயார்க் நகரில் அய்க்கிய நாட்டுச் சபை முன்னர் மாபெரும் போராட்டம் நடை பெற்றது.

கனடா,அமெரிக்கா வாழ் ஈழத் தமிழர்களும், தமிழ் நாட்டுத் தமிழர்களும், அவர்களுடைய அமெரிக்க நண்பர்களும் குடும்பங்களாக ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர். காலை 10 மணி முதல் "குற்றவாளி ராஜபக்சேவுக்குத் தண்டனை கொடு", "அய்க்கிய நாடே! போர்க்குற்றத்தை விசாரித்து நடவடிக்கையெடு" என்று பேரொலியுடன் போராட்டம் நடத்தினர்.

பல் வேறு செய்தி, தொலைக்காட்சி, வானொலி நிறுவனங்கள் நிகழ்ச்சிகளை ஒலி பரப்பியும், வந்திருந்த முக்கியமானவர்களைப் பேட்டியெடுத்துக் கொண்டு மிருந்தனர்.

கடும் மழையையையும் பொருட்படுத்தாது அனைவரும் நாள் முழுதும் நின்று போராடினர். பேச்சாளர்களும் கொட்டும் மழையிலும் தொடர்ந்து பேசினார்கள். அமெரிக்க நாடாளு மன்ற உறுப்பினர், உலகின் பல்வேறு தமிழினப் பற்றாளர்களின் செய்திகள் படிக்கப்பட்டன.

அன்புராஜ், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் அறிக்கையைப் படித்தார். மிகவும் புகழ் பெற்ற அய்க்கிய நாட்டு செய்தியாளர் மேத்யூ லீ மற்றும் பல செய்தியாளர்களுடன் அளவளாவினார். தமிழ் நாட்டு முயற்சிகளை எடுத்துச் சொன்னார். தாய்த் தமிழ் நாட்டு மக்கள் முயன்றும், எம் உடன் பிறப்புகளைக் காப்பாற்ற முடிய வில்லையே என்ற ஏக்கமும், ஆதங்கமும் அவருடன் உரையாடிய தமிழர்களின் தாங்க முடியாத துயரமாக இருந்தது. அமெரிக்க, கனடிய தமிழ்த் தலைவர்கள் உரையாற்றினர்.

தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமார் உணர்ச்சிபூர்வ மாக உரையாற்றினார். நடக்க இருக்கும் செயல்பாடுகளை அறிவித்தார்.

மாலையில் இறந்த தமிழர்களுக்காக ஒளி அஞ்சலி பிடித்த வண்ணம் மக்கள் இருக்கையில் இசை இசைக்கப்பட்டது.

பெரியார் பன்னாட்டு மய்யத்தின் சார்பில் இயக்குநர் மருத்துவர் சோம. இளங்கோவன் மற்றும் தோழர்கள் பங்கு கொண்டனர்.

இந்த உணர்ச்சிக் கொந்தளிப்பின் வெளிப்பாடு உலகை உலுக்கட்டும் என்று கூறி அனைவரும் விடை பெற்றனர்.

No comments:

Post a Comment