Labels

Monday, May 9, 2011

ஐ.நா. அறிக்கை இனப்படுகொலை நடந்திருக்கிறது என்பதை பல வகைகளிலும் உணர்த்தியுள்ளது : ருத்ரகுமாரன்



ஐ.நா. செயலாளரின் ஆலோசனைக்குழுவின் அறிக்கையானது, இலங்கையில் ஒரு இனப்படுகொலை நடந்திருக்கிறது என்பதை பல வகைகளிலும் உணர்த்துவதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமரான வி. ருத்ரகுமாரன் கூறியுள்ளார்.

புலம்பெயர் தமிழர்களில் ஒரு பகுதியினர் விடுதலைப்புலிகளுக்கு கண்மூடித்தனமாக ஆதரவு வழங்கியதன் மூலம் தமிழ் மக்களுக்கு பாதகத்தை விளைவித்தார்கள் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்த விமர்சனங்கள் பற்றிக் கேட்டதற்குப் பதிலளித்த ருத்ரகுமாரன், புலம்பெயர் தமிழர் இந்த போராட்டத்தை நடத்தவில்லை என்றும், இலங்கையில் இருந்த தமிழர்களே அதனை நடத்தியதாகவும் கூறியுள்ளார்.


இந்தப் போர் குறித்து முழுமையான ஒரு விசாரணை நடத்தப்பட்டாலே முழுமையான உண்மைகள் வெளிவரும் என்று ருத்ரகுமாரன் கூறினார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது, ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவும் அது குறித்து விசாரிக்க ஒரு ஆணைக்குழுவை அமைக்க முடியும் என்றும், அதற்கான வேலைத் திட்டங்களில் தமது அமைப்பு ஈடுபட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.


சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த விஷயம் குறித்து வழக்கு தாக்கல் செய்வதற்குத்தான் பாதுகாப்பு சபையின் அனுமதி தேவை. ஆனால் அங்கு அது குறித்து புலனாய்வு செய்தவற்கு வழக்கறிஞர்களுக்கு பரிந்துரைப்பதை ஐ.நா. செயலாளர்தான் செய்ய முடியும். அதற்காக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒரு கையெழுத்து வேட்டையை ஆரம்பித்துள்ளது என்றும் ருத்ரகுமாரன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment