Labels

Thursday, May 19, 2011

முள்ளி வாய்க்கால் நினைவு நாளையொட்டி மதுரையில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம்















மதுரையில் மே 17 மாலை முள்ளி வாய்க்கால் நினைவு நாள் மற்றும் தமிழீழ இனப் படுகொலைக்கு காரணமான ராஜபட்சே, சோனியா மன்மோகன் ஆகியோர் மீது போர்க் குற்ற நடவடிக்கை எடுக்க ஐ.நாவை வலியுறுத்தி மனிதச் சங்கிலி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை தமுக்கம் தமிழன்னை சிலை சந்திப்பு அருகே நடைபெற்ற இந்நிகழ்வில் மதுரையில் உள்ள அனைத்து தமிழ் அமைப்பினர், இடது சாரி மக்கள் விடுதலை அமைப்பினர், பெரியாரிய, தலித்திய அமைப்பினர், முத்துக்குமார் நண்பர்கள் இயக்கம், முத்துக்குமார் எழுச்சிப் பாசறை ,ஈழ, இன உணர்வாளர்கள், மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி உணர்வு பூர்வமாக எழுச்சியாக நடைபெற்றது.

No comments:

Post a Comment