Labels

Thursday, May 19, 2011

இந்தியச்சிறையில் முள்ளிவாய்க்கால் துக்க தினம் கடைபிடிப்பு



முள்ளிவாய்க்காலில் இறுதியுத்தித்தில் உயிரிழந்த மக்களை நினைவு கோரும் வகையில் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், பேரறிவாளன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் வேலூர் மத்திய சிறையில் 18.05.2011 அன்று உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

இலங்கையின் வடக்கு பகுதியில் இலங்கை இராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே முள்ளிவாய்க்காலில் கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் 18-ந்தேதி இறுதிக்கட்ட யுத்தம் நடந்தது. இதில், பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர் என ஐ.நா அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.

இந்த தினத்தை அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் பல்வேறு வெளிநாடுகளில் வாழும் இலங்கை தமிழர்கள் தேசிய துக்கதினமாக கடைபிடித்து வருகிறார்கள்.

No comments:

Post a Comment