Labels

Thursday, May 19, 2011

இனவெறியன் ராஜபக்சேவைத் தூக்கிலிட வேண்டும்: விடுதலைச் சிறுத்தைகள் முழுக்கம்





முள்ளிவாய்க்காலில் வீரச்சாவடைந்தோர் நினைவாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்கள் நினைவாக மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

சென்னை அசோக்நகர் தமிழ்மண் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், 2009ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி முள்ளிவாய்க்காலில் இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலையைக் கண்டிக்கும் வகையில் மே 18ஆம் தேதியை சர்வதேச இனப்படுகொலை நாளாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

சிங்கள இனவெறியன் ராஜபக்சேவைத் தூக்கிலிட வேண்டும் என்று அனைவரும் முழுக்கமிட்டனர்.

No comments:

Post a Comment