Labels

Sunday, December 19, 2010

தமிழ் ஈழத் துரோகிகளின் செயல் அம்பலம் விபீடணர்களின் தமிழர் விரோத ஒழுக்கக் கேடுகள் விக்கி லீக் வெளியிட்டுள்ள கருணா, டக்ளஸ் தேவானந்தா பற்றிய உண்மைகள்



இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், கருணாவும் ராணுவத்தினருக்காக பெண்களை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக விக்கி லீக் இணையதளத்தில் பரபரப்பான தகவல் வெளி யாகி உள்ளது.

கருணாமீது குற்றச்சாற்று!

அமெரிக்க ராணுவ நடவ டிக்கை, தூதரக செயல்பாடு கள் குறித்து பல்வேறு ரகசிய தகவல்களை வெளியிட்டு உள்ள விக்கி லீக் இணைய தளம், இலங்கையில் நடந்த அட்டூழியங்கள் பற்றிய தகவல்களையும் வெளியிட்டு இருக்கிறது. இது தொடர்பாக இலங்கையில் உள்ள அமெ ரிக்க தூதர் 2007ஆம் ஆண்டு மே 17-ஆம் தேதி அமெரிக்க அரசுக்கு அனுப்பி வைத்த ரகசிய ஆவணங்களில் இந்த விவரங்கள் இடம்பெற்று இருப்பதாக அந்த இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விக்கி லீக் வெளியிட்ட அமெரிக்க தூதரகத்தின் ரக சிய ஆவணத்தில் கருணா குற்றவாளியாக சித்திரிக்கப் பட்டுள்ளார். அதில் வெளி யாகி இருக்கும் தகவல்களை வருமாறு:-

பெண்கள் கடத்தல்

கிழக்கு மாகாணத்தில் நிலை கொண்டிருந்த ராணு வத்தினருக்காக பாலியல் தொழிலில் ஈடுபடுமாறு பல் வேறு பெண்களை அனுப்பி வைத்தார் கருணா. இதற்காக அவர் பாலியல் தொழில் குழுவை வைத்து இருந்தார். கருணாவின் நிர்ப்பந்தம் மற்றும் உயிர்ப்பயம் காரண மாக அந்த பெண்கள் அவரது உத்தரவுக்குக் கட்டுப்பட நேரிட்டது.

யாழ்ப்பாணத்தில் இருந்த ராணுவ தளபதிகளை அழைத்த கோத்தபய ராஜபக்சே, அங்கு தமிழ் எம்.பி.க் கருணாவும், டக்ளஸ் தேவானந்தாவும் செய்து வரும் சில வேலை களில் தலையிட வேண்டாம் என்று அறிவுறுத்தினார். ராணு வத்தின் செயல்களை சர்வதேச நாடுகள் கண்காணிப்பதால் நம்மால் செய்ய முடியாத வேலைகளை இவர்கள் செய் வார்கள். எனவே இதில் யாரும் தலையிட வேண்டாம் என் றும் கேட்டுக்கொண்டார். வேலைகள் என்று அதில் அவர் குறிப்பிட்டு இருப்பது கடத்தல், பணம் பறித்தல், படுகொலைகள், பாலியல் தொழில் ஆகியவை ஆகும்.

ராணுவத்தினருக்கு எப்போதெல்லாம் பெண்கள் தேவைப்படுகிறதோ, அப்போ தெல்லாம் அனுப்பி வைத்தவர் கருணா.

மிரட்டி பணம் பறிப்பு

2006ஆம் ஆண்டில் இலங்கை அரசின் ஆதரவு காரணமாக கருணா, டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இயங்கி வந்த குழுக்கள் மிகப்பெரிய அளவில் குற்றச் செயல்களில் ஈடுபட்டன. கருணா, டக்ளஸ் தேவானந்தா கும்பல்கள் குழந்தைகள் கடத் தலிலும் ஈடுபட்டன.

விடுதலைப்புலிகள் என்று சந்தேகப்படுவோரை கடத்தி வரும் பொறுப்பையும் கருணா, டக்ளஸ் தேவானந் தாவிடம் இலங்கை அரசு ஒப் படைத்து இருந்தது. இந்தக் குழுக்களுக்கும், ராணுவத்தின ருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாண வர்த்தகர் களை மிரட்டி பணம் பறிக் கும் வேலையையும் அவர்களி டம் கோத்தபய ராஜபக்சே ஒப்படைத்து இருந்தார்.

இவ்வாறு அதில் செய்தி வெளியாகி உள்ளது.

No comments:

Post a Comment