Labels

Monday, December 13, 2010

ராஜபக்சே கோழை: இன்னொரு பிரபாகரன் உருவாவது நிச்சயம் : பொன்சேகா



இலங்கை அதிபர் ராஜபக்சேவின் செயல்பாடுகள் மீண்டும் ஒரு பிரபாகரன் உருவாகும் வகையில் அமைந்துள்ளது என, அந்நாட்டின் முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளதாக, இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பொன்சேகா அந்நாட்டு மக்களுக்கு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சரத் பொன்சேகா கூறியுள்ளதாவது,


தனக்கு எதிரான அரசியல்வாதிகள் மற்றும் ஊடகத் துறையினரை அடக்கி ஒடுக்கும் ராஜபக்சேவின் செயல்பாடுகள் நீண்ட காலத்துக்கு நிலைக்காது. என்னையும், என் குடும்பத்தையும் முன்னிறுத்தியதான அவரது அரசியல் செயற்பாடுகள் இலங்கை மக்களுக்கு எந்த நன்மையையும் தராது.


எந்தவொரு அரசியல் தலைவராவது தனது அரசியல் எதிராளிகளுக்கெதிராக சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்வைப்பாரானால் அவர் ஒரு கோழையாவார். அத்துடன் தனது எதிராளிகளை சிறையில் தள்ளும் அரசியல் தலைவர் ஒரு சர்வாதிகாரியாவார்.


ராஜபக்சேவின் இன்றைய செயற்பாடுகள் போர் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த நிவாரணத்தையும் தரப்போவது இல்லை. அதற்குப் பதிலாக அவர்களை மென்மேலும் துன்புறுத்தவே செய்யும். இந்த நிலை தொடரும் பட்சத்தில் இன்னொரு பிரபாகரன் உருவாவது நிச்சயம் என, சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

No comments:

Post a Comment