Labels

Saturday, December 11, 2010

கலைஞரே! தயவு செய்து ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள்: சீமான் பேச்சு





நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து 10.12.2010 அன்று விடுதலை செய்யப்பட்டார்.
விடுதலையான அவர் சிறைக்கு வெளியே அமைக்கப்பட்ட மேடையில் ஏறி உரையாற்றினார்.
அப்போது, ’’தமிழகத்திலேயே ஜெயலலிதாவும், கலைஞரும் ஒரே ஒரு விவகாரத்தில் மட்டுமே ஒற்றுமையாக உள்ளார்கள்.
அந்த ஒற்றுமை கொள்ளை அடிப்பதை பற்றி பேசுவதில்தான்.
வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரசை இல்லாமல் அழிப்பதே எங்கள் நோக்கம். கூட்டணியில் இருந்தாலும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ஞானசேகரன் போன்றவர்கள் எங்கே நின்றாலும் தோற்கடிப்போம்.
கார்த்தி சிதம்பரம் எல்லாம் சவால் விடுகிறார்கள். கார்த்தி சிதம்பரமே! எங்களுடன் போட்டி போட கார்த்தியாக(சிதம்பரம்) வா!! சிதம்பரத்தை சேர்த்துக்கொண்டு வராதே.
காங்கிரஸ் கட்சி என்பது வெள்ளைக்காரன் ஆரம்பித்து வைத்த கட்சி. அந்த கட்சியோடு இணைந்து வராதே.
நானோ,திருமாவளவனோ தமிழர்களுக்காக தனித்து ஒரு கட்சியை உருவாக்கினோம்.
உங்களைப்போல அடுத்தவன் முதுகில் சவாரி செய்யவில்லை. இதோ வருகிறது தேர்தல். உங்கள் உலக தலைவனை ராகுல்காந்தியை அழைத்து வாருங்கள். போட்டி போடட்டும். மண்ணை கவ்வ வைத்து துரத்துவோம்.
கலைஞர் குடும்பமே காங்கிரசை தூக்கிசுமக்காதே. பீகாரிலேயே 4 இடங்களில் மட்டுமே ஜெயிக்க முடிந்தது. தமிழகத்தில் அந்த இடம் கூட கிடைக்காது.
கலைஞரே! உங்கள் குடும்பம் ஆண்டது போதும். உங்களது குடும்பம் தமிழகத்திற்காக எவ்வளவு காலம்தான் உழைத்துக்கொண்டிருப்பது.தயவு செய்து ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள். புதியதாக நாங்கள் வந்து ஆளுகிறோம்’’ என்று பேசினார்.

சிறையில் இருந்து வெளியே வந்த சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், " நான் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைத்தனர்.இரண்டு முறை தேசிய பாதுகாப்பு சட்டம் என் மீது பாய்ந்துள்ளது. இரண்டு முறையும், தமிழக அரசு தவறாக என் மீது சட்டத்தை போட்டுள்ளது என நீதிமன்றம் என்னை விடுதலை செய்துள்ளது. இந்த முறை 5 மாதங்கள் சிறையில் இருந்துள்ளேன். இதனால் எனது தொழில் முடங்கியது. இதற்கெல்லாம் தமிழக அரசுதான் காரணம். அதனால் தமிழக அரசிடம் நஷ்ட ஈடு கேட்க உள்ளோம் என்றார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு சீமான் பதில் அளித்தார்.

கேள்வி: தமிழக அரசு சட்டத்துக்கு புறம்பாக கைது செய்ததாக கூறுகிறீர்களே, அதுகுறித்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?


பதில்: தமிழக அரசு மீது வழக்கு போட முடிவு செய்துள்ளோம்.


கேள்வி: வரும் தேர்தலில் உங்கள் நிலைப்பாடு என்ன?


பதில்: நாங்கள் தேர்தலில் போட்டியிட போகிறோம்.


கேள்வி: நீங்கள் போட்டியிடுவீர்களா?


பதில்: நான் போட்டியிடவில்லை.



கேள்வி: ஆளுங்கட்சியை எதிர்த்து பிரச்சாரம் செய்வீர்களா?


பதில்: நாம் தமிழர் இயக்கத்துக்கு காங்கிரஸ் கட்சி கொள்கை ரீதியான எதிரி. அவர்களோடு கூட்டணி யார் வைத்தாலும் அவர்களை எதிர்த்து பிரச்சாரம் செய்வோம்.



கேள்வி: முதல்வர் கருணாநிதியை எதிர்த்து நீங்கள் பொது வேட்பாளராக நிறுத்தப்பட போவதாக நாம் தமிழர் இயக்கத்தினரால் சொல்லப்படுவது உண்மையா?


பதில்: நடக்கலாம்.


இவ்வாறு சீமான் பதில் அளித்தார்.

No comments:

Post a Comment