Labels

Sunday, December 26, 2010

இலங்கையில் விசாரணை நடத்த அய்.நா. குழுவுக்கு விசாரணை வரம்பு நீட்டிப்பு



போர் குற்றம் குறித்து இலங்கையில் விசாரணை நடத்துவதற்கு வசதியாக அய்.நா. குழுவின் விசாரணைக் கால வரம்பு இந்த மாத இறுதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் விசாரணை நடத்துவதற்கு அய்.நா. குழுவுக்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியதை அடுத்து அய்.நா. பொதுச் செயலாளர் பான்கி மூன் இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இலங்கையில் கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற போரில் விடுதலைப் புலிகள் முற்றிலுமாக நிர்மூலமாக்கப் பட்டனர். அப்போது இலங்கை ராணுவம் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்ததாக குற்றம்சாற்றப் பட்டது. நியூயார்க்கைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பு, லண்டனைச் சேர்ந்த ஆம்நெஸ்டி இண்டர்நேஷனல் உள்பட பல்வேறு அமைப்புகள் இலங்கை அரசின் மனித உரிமை மீறல் நடவடிக் கைகளை படம் பிடித்துக் காட்டின.

இதையடுத்த இறுதிக் கட்ட போரில் நடந்த மனித உரிமை மீறல், ஒட்டு மொத்த படுகொலைகள் உள்பட பல்வேறு போர் குற்றங்களை விசாரிக்க ஒரு உயர் குழுவை அய்.நா. பொதுச் செயலாளர் பான்கி மூன் அமைத்தார்.

இந்த விசாரணைக் குழு, மனித உரிமை அமைப்புகள் உள்பட பல்வேறு தரப்பினருடன் விசாரணை நடத்தியது. இலங்கையில் விசாரணை நடத்த அனு மதிக்க வேண்டும் என்று கோரப்பட்டது. ஆனால் அதை இலங்கை அரசு ஏற்க மறுத்துவிட்டது.

இதனால் இலங்கையில் விசாரணை நடத்தாத நிலையில் டிசம்பர் 15ஆம் தேதியுடன் இந்த குழுவின் விசா ரணைக் கால வரம்பு நிறைவு பெறுவதாக இருந்தது. இந்த நிலையில், அய்.நா. குழு இலங்கையில் விசாரணை நடத்த அந்த நாட்டு அரசு இப்போது அனுமதி வழங்கி உள்ளது.

இதையடுத்து விசாரணை கால வரம்பை மேலும் 15 நாள்களுக்குள் நீட்டிக்க அய்.நா. பொதுச் செயலாளர் பான்கி மூன் உத்தரவிட்டுள்ளார். இந்தக் குழு டிசம்பர் 30ஆம் தேதி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்

No comments:

Post a Comment