
பார்வதி அம்மாளின் உடலுக்கு அஞ்சலி செலுத்த திருமாவளவனுக்கு இலங்கையில் அனுமதி அளிக்காததற்கு நடிகர் சத்யராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நடிகர் சத்யராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் மரணம் அடைந்ததற்காக, உலக தமிழர்களுடன் சேர்ந்து நானும் வருத்தப்பட்டேன். பார்வதி அம்மாளின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிப்பதற்காக, சென்னை தியாகராயநகரில் உள்ள ஒரு பள்ளியில் பழ.நெடுமாறன், வைகோ ஆகிய இருவரின் தலைமையில் இரங்கல் கூட்டம் நடந்தது. அங்கு சென்று நான் அஞ்சலி செலுத்தினேன்.
பார்வதி அம்மாளின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்துவதற்காக, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இலங்கைக்கு செல்ல இருந்தார். அதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி மறுத்து இருக்கிறது.
இதற்காக, என் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
இதில் இருந்து இலங்கையில் தமிழர்களுக்கு சுதந்திரம் வழங்கப்படவில்லை என்று தெரிகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் நடிகர் சத்யராஜ் கூறியிருக்கிறார்.
No comments:
Post a Comment