Labels

Friday, February 4, 2011

தினத்தந்தி கக்கும் நஞ்சு!



தமிழ்த் தேசியத் தந்தை, அய்யா ஆதித்தனாரின் பேரால் இயங்கும் "தினத்தந்தி" யின் மீது சிறிது உறவுப்பாசத்துடனே பலரும் இருந்து வருகின்றோம். அதன் தரம் என்ன என்பதில் இவர்கள் பலரும் அக்கறைக் காட்டாமல், பார்ப்பன ஊடகங்களை விமர்சிப்பது போல் இதனை விமர்சிப்பதுமில்லை.

இந்நிலையில், தினத்தந்தி தலையங்கத்தில் மௌனமாக ஒரு விசத்தைக் கலந்துள்ளனர்.

ஈழத் தமிழ் அகதிகள் குறித்தான அந்தக் கட்டுரையை இணைத்துள்ளேன்.
பிரபாகரன் இறந்து விட்டார் என்பதும், இலங்கையில் அமைதி நிலவுவதாகவும் அங்கு செல்லும் தமிழகத்திலிருக்கும் அகதிகள் உரிமையுடன் வாழ்வார் என்பதும்தான் அந்த செய்தி.

கூடவே தற்போது அகதிகள் வரத்து குறைவாக இருக்கின்றது என்பதும் இவர்களின் கவலையாகவும், அவர்கள் வரும் போது வாஞ்சையுடன் அரவாநித்தது போலவும் சித்தரித்துள்ளது.

நமக்கெதிரான கருத்துகளுக்கும் செயல்களுக்கும் உடனடியாக வினையாற்ற வேண்டியது இன்றியமையாக் கடைமையாகும். உடன் நமது கண்டனத்தை தினத்தந்திக்கு தெரிவியுங்கள்.

No comments:

Post a Comment