Labels

Tuesday, February 22, 2011

சிங்களப்படையினரின் போர்க்குற்றம் குறித்த அய்.நா. அறிக்கை : ஓரிரு நாளில் தாக்கல்



இலங்கை போரின் போது சிங்களப்படை யினர் நிகழ்த்திய போர்க் குற்றங்கள் தொடர்பான அய்.நா. குழுவினரின் விசாரணை அறிக்கை ஓரிரு நாள்களில் அய்.நா. தலைமைச் செயலாளர் பான் கி மூனிடம் தாக் கல் செய்யப்பட உள் ளது. இந்த அறிக்கையின் நகல் ஒன்று இலங்கை அரசிடம் வழங்கப் பட்டு, அதன் அடிப் படையில் மேற்கொள் ளும் படி கேட்டுக் கொள்ளப்படும் என்று அய்.நா. தலைமைச் செயலாளர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித் தன.

அய்.நா. போர்க்குற்ற விசாரணைக் குழுவின் பதவிக் காலம் டிசம்பர் மாதமே முடிவடைய இருந்த நிலையில், இலங்கைக்குச் சென்று போர்க்குற்றம் குறித்து விசாரிப்பதற்காக அதன் பதவியின் காலம் மேலும் 2 மாதங்களுக்கு நீட் டிக்கப்பட்டது.

எனி னும், பல்வேறு காரணங் களால் அய்.நா. போர்க் குற்ற விசாரணை நடத்த வில்லை. மாறாக இலங்கை அரசால் அமைக்கப்பட்ட விசா ரணைக் குழுவிடமும், இலங்கை அரசிடமும் பல்வேறு வினாக்கள் அடங்கிய பட்டியலை அளித்த அய்.நா. குழு வினர், அவற்றுக்கு விடையளிக்கும்படி கேட்டுக்கொண்டனர். அதை ஏற்றுக் கொண்ட இலங்கை அரசு, அய்.நா. குழு எழுப்பிய வினாக் களுக்கு அண்மையில் விடை அளித்திருந்தது.

அதன் அடிப்படை யில் போர்க்குற்ற விசா ரணை அறிக்கையை மார்சுகி தரூஸ் மென் தலைமையிலான அய்.நா. குழு தயாரித்து விட்டதாகவும், அடுத்த ஓரிரு நாள்களில் இக் குழுவினர் அய்.நா. பொதுச்செயலாளர் பான் கி மூனை சந்தித்து இந்த அறிக்கையை வழங்குவார்கள் என்றும் அய்.நா. வட்டாரங்கள் தெரிவித்தன.

போர்க் குற்ற விசாரணைக் குழு வின் பதவிக்காலம் வரும் 28ஆம் தேதியுடன் முடி வடைய இருப்பதால் அதற்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய் யப்பட்டுவிடும் என்று அந்த வட்டாரங்கள் கூறின.

விசாரணை அறிக்கையின் நகல் ஒன்று இலங்கை அர சுக்கு அனுப்பி வைக்கப் படும் என்றும், அதன் அடிப்படையில் போர்க் குற்றங்களில் ஈடுபட்ட வர்கள; மீது நடவ டிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்ளப் படும் என்றும் அய்.நா. வட்டாரங்கள் தெரிவித்தன. இலங் கைப் போரின்போது சிங்களப்படையினர் பல்வேறு போர்க்குற்றங் களை இழைத்தனர்.

அப்பாவி தமிழ் மக் களைக் கடத்தியும், பாலியல் வன்கொடுமை செய்தும் அவர்கள் கொடுமைப்படுத்தினர். பாதுகாப்பு வளையப் பகுதிகளில் தஞ்சம் புகுந்த தமிழ் மக்கள் மீதும், மருத்துவமனை களில் மருத்துவம் பெற்று வந்த தமிழ் மக்கள்மீதும் சிங்களப் படையினர் ஏவுகணை களை வீசிக் கொன்ற னர்.

இதற்கெல்லாம் மேலாக போரின் இறு திக்கட்டத்தில் சரண டைவதற்காக வெள்ளைக்கொடி ஏந்தி வந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் நடேசன், சமாதானப் பிரிவு செய லகத்தின் பொறுப்பாளர் புலித்தேவன் ஆகியோ ரையும் அவர்கள் இரக் கமின்றி படுகொலை செய்தனர்.

சிங்களப்படை யினரின் இத்தகைய போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்று அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்திய தையடுத்து மூன்று உறுப் பினர்கள் கொண்ட போர்க்குற்ற விசாரணைக் குழுவை அய்.நா.பொதுச் செயலாளர் பான் கி மூன் கடந்த ஆண்டு சூன் மாதம் அமைத்திருந்தார்.

இந்தோனேசிய நாட்டின் முன்னாள் தலைமை வழக்குரைஞர் மார்சுகி தரூஸ்மென், தென்னாப் பிரிக்க மனித உரிமைப் போராளி யாஸ்மின் சூகா, அமெரிக்காவைச் சேர்ந்த சட்டப்பேரா சிரியர் ஸ்டீவன் ரட்னர் ஆகியோர் இக்குழுவில் இடம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக் கது.

No comments:

Post a Comment