Labels

Monday, February 21, 2011

பொதுமக்கள் அஞ்சலிக்காக தீருவில் மைதானத்தில் பார்வதி அம்மாள் உடல்



பார்வதி அம்மாளுக்கு அஞ்சலிகள் செலுத்துவதற்கு சிறீலங்கா இராணுவம் அச்சுறுத்தல்
விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள் யாழ்பாணம் வல்வெட்டித்துறையில் நேற்று (20.02.2011) காலை காலமானார்.


பார்வதி அம்மாளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளில் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. அஞ்சலிகள் செலுத்துவதை கூட சிங்கள இராணுவம் தடுத்து வருகிறது. ஆனால் அதனையும் மீறி தமிழ் மக்கள் தமது இறுதி வணக்கத்தை தெரிவித்து வருகின்றனர்.

யாழில் பல பகுதிகளில் கறுப்புக்கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. குறிப்பாக வடமராட்சி பகுதியில் பல வீடுகளிலும், பொது அமைப்புக்களின் அலுவலகங்களிலும் கறுப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.


தற்போது வல்வெட்டித்துறை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள பார்வதி அம்மாளின் உடல் தீருவில் மைதானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.


அங்கு தான் கேணல் கிட்டு, லெப். கேணல் புலேந்திரன், லெப். கேணல் குமரப்பா ஆகியோரின் நினைவு மண்டபம் கட்டப்பட்டிருந்தது. ஆனால் அது பின்னர் சிறீலங்கா இராணுவத்தினரால் அழிக்கப்பட்டுவிட்டது.


கடந்த வருடம் காலம்சென்ற தேசத்தின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் உடலும் அங்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

சோகத்தில் மூழ்கியுள்ளது யாழ்.குடாநாடு :

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளின் மறைவையடுத்து யாழ்.குடாநாடு சோகத்தில் மூழ்கியுள்ளது.

யாழ். குடாநாட்டில் போக்குவரத்து சேவைகள், மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது. யாழ்.நகரப் பகுதியில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்ட நிலையில் காணப்படுகிறது.


பார்வதி அம்மாளுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக வெளிநாடுகளில் இருந்தும், தமிழ் நாட்டிலிருந்தும் பல தமிழ் பிரமுகர்கள் வருகை தரவுள்ளதாக தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment