Labels

Wednesday, February 23, 2011

உலக தமிழர்களின் கண்ணீர் அஞ்சலியுடன் வீரத்தாய் பார்வதி அம்மாவின் உடல் தகனம் செய்யப்பட்டது













தமிழீழ தேசிய தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்களின் தாயாரும் ஈழத்தாயுமான பார்வதி அம்மாவின் பூதவுடல் 22.02.2011 அன்று மாலை 4.50க்கு சிதைமூட்டப்பட்டது, அமரர் வேலுப்பிள்ளையின் ஒன்று விட்ட சகோதரர் சங்கரநாரயணன் சிதைக்குத் தீ மூட்டினார். இந் நிகழ்வில் உள்ளுர், தமிழக அரசியல்வாதிகள் இரங்கல் உரையுடன் சிங்கள இனவெறி அரசின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இறுதி நிகழ்வு நடைப்பெற்றது.

ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்ட வீரத்தையின் பூதவுடல் தேசியத் தலைவரின் வல்வெட்டித்துறை வீட்டுக்கு முன்னால் பத்து நிமிடங்கள் வைக்கப்பட்டிருந்ததாகத் செய்திகள் தெரிவிக்கின்றன.

குவித்து வைக்கப்பட்டிருந்த இராணுவத்தினரையும் பொருட்படுத்தாது மக்கள் வீரத்தையின் இறுதி காரியத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

தமிழகத்திலிருந்து பழ. நெடுமாறன், வைகோ, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோரின் இரங்கல் உரைகள் தொலைபேசி ஊடாக ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பப்பட்டன.

மேலும் சுரேஷ் பிரேமச்சந்திரன், விநோ நோகதரலிங்கம்,சிவசக்தி ஆனந்தன், பா. அரியநேத்திரன்,யோகேஸ்வரன்,ஸ்ரீதரன், சரவணபவன்,கஜேந்திரகுமார்,சிவாஜிலிங்கம்,ஸ்ரீகாந்தா உட்படப் பெரும் எண்ணிக்கையிலான உள்ளுர் தமிழ் அரசியல் பிரமுகர்கள் வீரத்தாயின் இறுதிக் காரியத்தில் கலந்து கொண்டதுடன் இரங்கல் உரைகளையும் நிகழ்த்தினர்.

இதேவேளை, இந்த இறுதி நிகழ்வைப் புகைப்படம் பிடித்துக் கொண்டிருந்த புகைப்படப்பிடிப்பாளர்கள் உட்பட பலரையும் இராணுவத்தினர் விசாரணைக்கு உட்படுத்தியதுடன் அவர்களைப் புகைப்படம் பிடித்ததுடன் அவர்களது அடையாள அட்டைகளையும் புகைப்படம் பிடித்தனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

வடமராட்சியின் அனைத்து வீதிகளிலும் செல்வோர் அனைவரும் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர் இந் நடவடிக்கையில் இராணுவத்தினரும் காவல்துறையினரும் ஈடுபட்டிருக்கின்றனர்.

நிகழ்வு நடைபெறும் இடத்திற்குச் செல்வோரை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் சோதனைகளுக்கு உட்படு்த்தியே அனுமதிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment