Labels

Thursday, February 24, 2011

சிங்கள வெறியின் உச்ச கட்டம் - பார்வதி அம்மையாரின் அஸ்தியை நாசப்படுத்திய கேவலம்



தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மா ளின் அஸ்தி நேற்று முன் தினம் (22.02.2011)இரவு அடையா ளம் தெரியாத சிலரால் மிகவும் கேவலமான முறையில் நாசமாக்கப் பட்டுள்ளது. அவரை எரியூட்டிய இடத்தில் மூன்று நாய்களை சுட்டுப் போட்டதுடன், அவரது அஸ்தியையும் தாறுமாறாக அள்ளி வீசியுள்ளனர்.

இது குறித்து இலங்கை தமிழ் இணையதளங்கள் வெளியிட்டுள்ளதாவது:
நேற்று முன் தினம் (22.02.2011)மாலை பார்வ தியம்மாளின் உடல் இறுதிமரியாதை நிகழ் வுக்குப் பின்னர் ஊரணி மயானத்தில் எரியூட்டப் பட்டது. இரவு 7 மணிக்குப் பின்னர் அங்கு கூடியிருந்த மக் கள் கலைந்து சென்றனர்.

நேற்று (23.02.2011)காலை மயானத்துக்குச் சென்று அஸ்தியை சேகரிக்க முயன்ற போது அங்கு அஸ்திகள் தாறுமாறாக வீசப்பட்டிருந்தது தெரிந்தது. மேலும் பார்வதியம்மாள் உடல் எரிக்கப்பட்ட இடத்தில் மூன்று நாய்கள் சுடப் பட்டு அரைகுறையாக எரிக்கப்பட்ட நிலையில் அவரது அஸ்தியுடன் போடப்பட்டு இருந்தது.

சிங்களப் படைகளே இந்த கேவலமான செய லில் ஈடுபட்டிருக்கலாம் என அந்தப் பகுதியினர் அச்சத்துடன் தெரிவித் தனர். நேற்று மாலை மயானத்திற்கு வந்த சிலர் பார்வதியம்மாளின் இறுதிநிகழ்வுகளை நடத்தியவர்கள் யார்? என சிங்களத்தில் மிரட் டும் தொனியில் விசாரித் ததாகவும் கூறினர்.

No comments:

Post a Comment