



ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26ம் நாளை உலகெங்கிலும் சித்திரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச ஆதரவு தினமாக ஐநா கடைபிடித்து வருகிறது.
இலங்கை அரசின் சித்திரவதைகளூக்கு ஆளாக்கப்பட்டு இன்னுயிர் துறந்தல் ஈழத்தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மெரினா கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏந்தி 26.6.2011 அன்று மாலை அஞ்சலி செலுத்தப்பட்டது.
பழ.நெடுமாறன், காசி ஆனந்தன், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், பாமக வேல்முருகன், மதிமுக மல்லை சத்யா உட்பட பல்லாயிரக்கணக்காணோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
பழ.நெடுமாறன் எழுச்சி உரை ஆற்றினார். சீமான் எழுச்சி கோஷங்கள் எழுப்பினார். இந்த நிகழ்வு கட்சி சார்பற்ற நிகழ்வாகவே இருந்தது.
பழ.நெடுமாறன் பேசுகையில், “இலங்கையில் முள்ளிவாய்க்காலில் நடந்த படுகொலைகளை உலக நாடுகள் அறியும். ஈழத்தமிழர்களின் விடியலுக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறோம். அவர்களுக்கு நாம் தோள் கொடுப்போம். சாதி மறப்போம்; கட்சி மறப்போம். தமிழர் ஒற்றுமை ஓங்கட்டும். தமிழ் ஈழம் வெல்லட்டும். அதற்கு நாம் அனைவரும் துணை நிற்போம். உலக சமுதாயமே, ஐ.நா. சபையே ஈழத்தமிழர்களுக்கு நீதி வழங்குங்கள். இப்போதும், இலங்கையில் நடைபெறும் சித்ரவதைகளை ஐ.நா. சபை தடுத்து நிறுத்த வேண்டும்” என்றார்.
No comments:
Post a Comment