Labels

Saturday, November 27, 2010

அன்பு அண்ணன் பிரபாகரனுக்கு பிறந்தநாள் வாழ்த்து - வித்யாசாகர்



எவனோ கிள்ளியெறியத் துணிந்த எம் வீரத்தை
விடுதலையை -
எம் உணர்வை -
மீண்டும் மீண்டுமாய் உயிர்பித்துத் தந்தவரே;

வாழ்வின் வெற்றிதனை -
விடுதலை வேட்கையாகக் கொண்டு -
மொழி உணர்வை தமிழ் உணர்வென – என்
கடைசி தமிழனுக்கும் ஈந்தவரே;

வீழும் ஒரு தோல்வியில் கூட -
பாடம் உண்டென மீண்டு -
எமை மெல்ல மெல்ல ஒருங்கிணைத்து
ஒரு தேசமாய் வளர்த்தவரே;

அடங்கிப் போனவள் கையில் ஆயுதம் பிடிக்கவும்
அடிமை என்றெண்ணியவனுக்குத் திருப்பியடிக்கவும்
உயிர் பறித்துப் போனவனிடம் இருந்து – எம்
விடுதலையை மீட்கவும் பாடம் புகட்டியவரே;

ஒழுக்கத்தை ஒவ்வொரு குடிமகனுக்கும் போதித்து
வீரத்தை எம் குழந்தைகளுக்கும் ஊட்டி -
தேசம் என்றால் எது என்றும், அதை தமிழன் ஆண்டால்
எப்படி இருக்குமென்றும் உலகிற்குக் காட்ட உழைத்தவரே;

என் தாய் வயிற்றில் பிறக்காமல் உற்ற
என்னன்பு அண்ணனே,
என்றேனும் ஓர் தினம் எம் தேசம் ஆளப் போகும்
எம் புகழ்மிகு மன்னனே,

உனக்கு செல்வங்கள் பதினாறென்ன -
இருக்கும் எல்லாம் வளமும் நலமும் கிடைத்து
சுதந்திரம் வீசும் மண்ணின் – ஒற்றை தலைவனாய்
எமை காக்கும் உண்மை தலைவனாய்

வாழ்வாங்கு வாழ -
எம் இனத்தின் மொழியின் வழிநின்று
இறையின் அருளுக்கு இறைஞ்சி
மனதார வாழ்த்துகிறோம்!!

- வித்யாசாகர்.

No comments:

Post a Comment