Labels

Wednesday, November 10, 2010

பாசத்துக்காக ஏங்கும் பிரபாகரன் தாயார்: உடல்நிலை ஓரளவு தேறியது



விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம் மாளுக்கு தற்போது 82 வயதாகிறது. பக்கவாத நோயால் பாதிக்கப் பட்ட நிலையில் கடந்த ஜனவரி மாதம் அவர் தன் கணவர் வேலுப் பிள்ளையை இழந்தார். கணவர், மகன்கள், மகள் கள் யாரும் அருகில் இல் லாத நிலையில் தவித்த அவருக்கு சில மாதங் களுக்கு முன்பு உடல் நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதையடுத்து கன டாவில் உள்ள தன் மகள் வினோதினியுடன் சென்று வாழ விரும்பினார். ஆனால் முடியவில்லை. தமிழ்நாட்டிலும் அவர் சிகிச்சை பெற இயலாத சூழ்நிலை ஏற்பட்டதால் ஈழத்தில் உள்ள தன் சொந்த ஊரான வல் வெட்டித் துறைக்கு திரும்பினார்.

தற்போது அங்குள்ள அரசு மருத்துவமனை யில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். அவர் முன்பு படுத்த படுக்கை யாக இருந்தார். சமீப காலமாக எழுந்து உட் கார்ந்து பேசும் அள வுக்கு அவர் உடல்நிலை தேறி உள்ளது. பார்வதி அம்மாளை அவரது நெருங்கிய உறவினரும், முன்னாள் எம்.பி.யுமான சிவாஜிலிங்கம் அரசு அனுமதி பெற்று பரா மரித்து வருகிறார். வல் வெட்டித்துறை அரசு மருத்துவமனை யில் அவருக்கு எல்லா வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. என்றாலும் அவரது மனம் மகன் கள், மகள்களை பார்க்க ஏங்குகிறது. இதை அவர் பல தடவை கண்ணீர் மல்க சிவாஜிலிங்கத் திடம் கூறி உள்ளார்.

இதையடுத்து பார் வதி அம்மாளின் மகன், மகள்களை ஈழத்துக்கு வர வைக்க சிவாஜி லிங்கம் முயன்றார். ஆனால் அதற்கு வெற்றி கிடைக்கவில்லை. வேலுப்பிள்ளை-பார் வதி அம்மாள் தம்ப தியருக்கு மனோகரன், பிரபாகரன் என்ற 2 மகன்களும், ஜெகதீஸ் வரி, வினோதினி என்ற 2 மகள்களும் உள்ளனர். இவர்களில் 63 வயதாகும் மனோகரன் டென் மார்க் நாட்டில் வசித்து வருகிறார். மூத்த மகள் ஜெகதீஸ்வரி தனது கண வர் மதியாபரனுடன் சென்னையில் வசித்து வருகிறார். இளைய மகள் வினோதினி தனது கணவர் ராஜேந்திர னுடன் கனடா நாட்டில் வசித்து வருகிறார்.

ஈழத்துக்கு சென்றால் சிங்கள அரசு கைது செய்து சித்திரவதை செய்யும் என்ற எண் ணத்தில் இவர்கள் செல்லவில்லை. பார்வதி அம்மாளுக்கும் தனது மகன், மகள்களின் நிலை நன்கு புரிந்துள்ளது. எனவே பேரன், பேத்தி களையாவது பார்த்து விட முடியுமா என்று ஏங்குகிறார். ஆனால் அதற்கும் வாய்ப்பு மிக, மிக குறைவாகவே உள் ளது.
வல்வெட்டித்துறை அரசு மருத்துவமனை மருத்துவ அதிகாரி மயிலேறும் பெருமாள் கூறுகையில், பார்வதி அம்மாள் நன்கு தேறி வருகிறார். உறவினர்கள் யாரையாவது பார்த்தால் அவருக்கு மகிழ்ச்சி அதி கமாகும். முகம் பிர காசமாகி விடும் உறவு களின் பாசத்துக்காக அவர் ஏங்குகிறார் என் றார்.

சுற்றுலா வரும் சிங் களர்கள் வல்வெட்டித் துறையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று பார்வதி அம் மாளை பார்க்க தவறு வதில்லை. வாரத்துக்கு குறைந்தபட்சம் 10 ஆயிரம் பேர் அந்த மருத்துவமனைக்கு வந்து செல்கிறார்கள். அவர்களில் பெரும் பாலானவர்கள் பார்வதி அம்மாளுக்கு பழங்கள் மற்றும் பரிசுப் பொருள் கள் கொடுத்து செல்கின் றனர். சிலர் பார்வதி அம்மாள் காலைத் தொட்டு வணங்குகிறார் களாம். உலகத் தமிழர் களின் ஒரே அடை யாளமாக திகழ்ந்த பிரபாகரனை பெற்ற வீரப்பெண்மணி என்று சிங்களர்களே பார்வதி அம்மாளை புகழ்ந்து சொல்வது குறிப்பிடத் தக்கது.

No comments:

Post a Comment