Labels

Friday, November 26, 2010

மாவீரர் நாள் கார்த்திகை 27 எம் தியாக தீபங்களுக்கான தினம் — கலாநிதி ராம் சிவலிஙகம், பிரதிப் பிரதமர் – நாடு கடந்த தமிழீழ அரசு



மாவீரர் நாள், தன் உயிரை எம் இனத்திற்ககுத் தருவதை ஓர் வரமாக எண்ணி செயற்பட்ட அந்த தியாக தீபங்களை நாம் நினைவுகூறும் நாள். இந்தக் கார்த்திகை மாதம் 27ம் திகதி எமது வரலாற்றுப் பயணத்தில் பல திருப்பு முனைகளிற்குக் காரணமான எம் அன்புத் தெய்வங்களை நாம் தரிசிக்கும் தினம்.

காலத்தின் தேவையை உணர்ந்து தேசியத்தலைவரின் கைவண்ணத்தில் உருவான வீரத்தின் சின்னங்களை நினைவுகூறும் காலம். ஏழு ஜென்மம் எடுத்தாலும் பெறமுடியாத் புண்ணியத்தை இந்த ஜென்மத்தில் பெற்ற எம் காவிய நாயகர்களைக் கௌரவிக்கும் வாரம், துதி பாடும் வேளை.

அரச பயங்கரவத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்துவதும் ஓர் அறவழிப் போராட்டம்தான் என்பதை உலகுக்கு உணர்த்திய உன்னதப் பிறப்புகள். மனித ரூபத்தில் தோண்றி மாயங்கள் பல படைத்த மந்திரவாதிகள். இதன் விளைவுதானே “ஆயுதம் தாங்கிப் போரட விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு உரிமையுண்டு” என்ற சுவிஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பு.

அப்பாவித் தமிழகளை அந்தக் கொடியவர்கள் தீயிட்டுக் கொளுத்தியதைப் பார்த்தபின்பும், மாதர்கள் மார்பினில் அந்தக் காடையர்கள் மைகொண்டெழுதிய காட்சியைக் கண்டபின்பும் , கோவில் குருக்களை அந்தக் கோழையர்கள் அழித்தபின்பும் எப்படி எம்மால் பொறுமையுடன் வாழமுடியும். அப்படி வாழவது ஒரு வாழ்வா? எனக்கூறி ஆயுதம் ஏந்திவர்கள்தானே இந்தக் கருணை நதியில் குளித்த எம் காவலர்கள். கார்த்திகைப் பூவிற்கு உரித்தானவர்கள். இன்று நாம் பூஜிக்கும் எம் இதய தெய்வங்கள்.

தாய்மொழி பெரிதா, தாய்நாடு பெரிதா? என்ற வினாவுக்கு விடைதந்த வித்துவான்கள். வீர வம்சத்தின் வித்துக்கள். எம் தேவையை அறிந்து எம்மைத் தேடிவந்த தேவர்கள். எம் தானைத் தலைவர் தத்தெடுத தம்பி, தங்கையர்கள்.

எமது சுமையை தமது தோழில் சுமந்த சரித்திர நாயகர்களை, சாவிலும் வாழும் சந்ததி நாம் எனற பெருமையை எமக்குத் தந்த இந்த ஞானிகளை நாம் ஒவ்வொருவரும் தவறாமல் தரிசிக்கவேண்டும். இது எம் கடமை, வரலாற்றுக் கடன். இதை, நாமும் எமது வருங்காலச் சந்ததியினரும் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.

எம் அனபான உறவுகளே! பாசத்துக்கு வரவிலக்கணம் வைத்தவர்களே!
உங்கள் வீட்டில் எம் தியாக தீபங்களுக்கு தீபமேற்றி வழிபடுங்கள், சமயத் தலங்களுக்குச் சென்று அவர்களுக்காகத் தியானியுங்கள், மாவீரர் தினம் நடக்கும் இடங்க்ளுக்குச் சென்று உங்கள் நன்றிக்கடனைச் செலுத்துங்கள்.

அதே வேளை, இறைமையும், சுதந்திரமும் கொண்ட ஓர் தனிநாட்டை விரைவில் அமைப்போம் என மாவீரர்களை மதிக்கும் அத்தனை உறவுகளும் இன்றே சபதம் எடுத்து செயற்பட வேண்டும். ஒற்றுமை கலந்த கடமையுணர்வுடன் நாம் ஒருங்கிணைந்து எமது மூன்றாம்கட்டப் போரான அரசியல்ப் போரை தாமதமின்றி முன்னெடுக்க வேண்டும்.

உண்மையுடனும், உறுதியுடனும் உழைத்து கார்த்திகைப் பூவுக்கு உரித்தானவர்களின் கனவை நனவாக்க ஒவ்வொரு தமிழரும் உறுதிபூண்டு செயற்பட வேண்டும். இதுகண்டு, மானமொன்றே வாழ்வென வாழ்ந்த எம் மாவீரர் மனம் சாந்தியடைய வேண்டும். இதுவே என் ஆசை, அவா. நன்றி.

Dr. Ram Sivalingham
email: r.sivalingam@tgte.org

No comments:

Post a Comment