Labels

Wednesday, January 26, 2011

ராஜபக்சே மீது விசாரணையை துவக்கக் கோரி வெள்ளை மாளிகை முன்பு தமிழர்கள் ஆர்ப்பாட்டம்



இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து, அந்நாட்டு அதிபர் ராஜ பக்சே மீதான விசார ணையை, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா துவங்க வேண்டும் என்று கோரி, வாஷிங் டனில் வெள்ளை மாளி கைக்கு எதிரில் நேற்று தமிழர்கள் ஆர்ப்பாட் டம் நடத்தினர்.

கடந்த வாரம் தனிப்பட்ட முறை யில் அமெரிக்காவுக்குச் சென்ற இலங்கை அதி பர் ராஜபக்சேவை போர்க் குற்றங்கள் தொடர்பாக அமெ ரிக்கா விசாரிக்க வேண் டும் என்று, உலக பொது மன்னிப்பு அமைப்பு கோரிக்கை விடுத்திருந் தது. தற்போதும் ராஜ பக்சே, ஹூஸ்டனில் இருப்பதாகக் கூறப்படு கிறது.

இந்நிலையில், அவரி டம் போர்க் குற்றங்கள் தொடர்பான விசார ணையை அமெரிக்க அதிபர் ஒபாமா துவங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, வெள்ளை மாளிகை முன்பு பல் வேறு தமிழ் அமைப்பு களைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி னர்.

அதிபர் ஒபாமாவுக்கு அவர்கள் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

ராஜபக்சே தற்போது அமெரிக்காவில் இருக் கிறார். அவர் மீதான சட்டபூர்வ நடவடிக் கையை இப்போது எடுக்க வேண்டும். அவர் மீதான குற்றச்சாற்றுகள், முப்படைகளுக்கும் அவரே தலைவர் என்ற அடிப்படையில் அமெ ரிக்க ராணுவ வல்லுநர் களாலும் உறுதிப்படுத் தப்பட்டுள் ளன.

கடந்த ஆண்டில் இலங்கை மீது பன்னாட்டு விசாரணை நடத்தக் கோரி, 58 செனட் சபை உறுப்பினர்கள் கையொப் பமிட்ட மனு ஒன்று வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனி டம் கொடுக்கப்பட் டது.

போர்க் குற்றங்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல் குறித்து விசாரிக்கும்படி, கடந்த ஆண்டு டிசம்பரில் மேலும் 17 செனட் சபை உறுப்பினர்கள் கையொப்பமிட்ட மனு வும் அவரிடம் அளிக்கப் பட்டது. பன்னாட்டு சமூகம் குறிப்பாக இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் மனித உரிமை மீறல்களை கண்டிக்க வேண்டும்.

ஆனால், இந் தியா இதுபோன்ற பிரச் சினைகளைத் தவிர்த்து வருகிறது. இதுபற்றி பேசாத நாடுகள் பிற நாடுகளில் மனித உரிமை மீறல் குறித்து தலையிட முடியாது' என்று கடந்த ஆண்டு இந்திய நாடாளுமன்றத் தில் அதிபர் பேசியதை யும் இங்கு குறிப்பிடு கிறோம்.

-இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த மனுவில் 12-க் கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள் கையொப் பமிட்டுள்ளன.

No comments:

Post a Comment