Labels

Monday, August 16, 2010

ஈழத்தமிழர்கள் பற்றி இலங்கை ஜெயராஜ் பேச்சு: கண்கலங்கிய ரஜினி


சென்னை கம்பன் விழாவில், இலங்கை தமிழர் பற்றிய பேச்சை கேட்டு நடிகர் ரஜினி கண்கலங்கினார்.


கம்பன் கழகம் சார்பில், 36வது ஆண்டு கம்பன் விழா சென்னை மைலாப்பூரில் உள்ள ஏ.வி.எம்.ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் 3 நாட்கள் நடைபெற்றது.


இறுதி நாளன்று, கம்பன் புலமை, திருவள்ளுவர் வழியில் பெரிதும் வெளிப்படுவது அறத்திலா, பொருளிலா, இன்பத்திலா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.


பட்டிமன்றத்தில் பேசிய இலங்கை ஜெயராஜ்,


நான் தமிழன் ஆனால் அயல்நாட்டுக்காரன். நான் சுதந்திரமானவனா?. ஒருவன், மற்றொருவரை சுதந்திரமாக நடமாடவிடும்போதுதான், சுதந்திரமாக பேச, செயல்பட விடுவதுதான் உண்மையான சுதந்திரம். அந்த சுதந்திரமில்லாத நாட்டின் குடிமகன் நான். ஆனாலும், என் எல்லையை உணர்ந்து, உங்கள் சுதந்திரத்தை வாழ்த்துகிறேன்.

ஒருவன் கோடிக் கோடியாக சம்பாதிக்கலாம், வெற்றி பெறலாம். ஆனால் அறமில்லாத வெற்றி தூக்கத்தை தராது. அறமாக வாழ்ந்தால் சொர்க்கத்துக்கு போகலாம். ஆனால், சொர்க்கத்துக்கு போனவர்கள் யார் யார் என்று யாருக்கு தெரியும். காந்தி, அண்ணா, காமராஜர், எம்.ஜி.ஆர். என்று நாமாக சொல்லலாம். ஆனால் பார்த்தவர்கள் யார்? என்று இலங்கை ஜெயராஜ் பேசினார்.

இதை மேடையின் முன்வரிசையில் இருந்து இலங்கை தமிழர்களின் நிலை பற்றிய பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த நடிகர் ரஜினி கண்கலங்கினார்.

No comments:

Post a Comment