Labels

Monday, July 12, 2010

சென்னையில் சீமான் கைது


ஈழத் தமிழர்கள் படுகொலையைக் கண்டித்தும், தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் கொல்லப்படுவதைக் கண்டித்தும் நாம் தமிழர் இயக்கம் சார்பில் சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய சீமான், இதற்குமேல் தமிழக மீனவர்கள் சிறிலங்க கடற்படையினரால் தாக்கப்பட்டால், இங்குள்ள சீங்களவர்களை விடமாட்டோம் என்று பேசியதாகக் கூறப்படுகிறது.


இதையடுத்து வன்முறை மற்றும் பிரிவினையை தூண்டும் விதத்தில் பேசியதாக சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்தவுடன் சீமான் தலைமறைவானார்.

இந்நிலையில் இன்று சென்னை பத்தியாளர்கள் மன்றத்தில் செய்தியாளர்களை சந்திப்பதாக தகவல் அனுப்பிய சீமானை கைது செய்ய போலீசார் காத்திருந்தனர்.பிரஸ் கிளப்பில் பேட்டி தரும் முன்னரே சீமானை பிடிக்க போலீசார் திட்டமிட்டிருந்தனர். இதையொட்டி சிவானந்தா சாலை, வாலஜா சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர். அப்போது போலீசாருக்கும் நாம் தமிழர் இயக்கத்தினருக்கும் மோதல் மூண்டது.

சுமார் 15 நிமிடத்துக்குப் பின்னர் போலீசார் சீமானை கைது செய்தனர். பின்னர் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சீமானை ஜூலை 23ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

நீதிமன்ற உத்தரவின் பேரில் சென்னை புழல் சிறைக்கு அழைத்துச்செல்லப்பட்ட சீமான், அங்கிருந்து வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். நிர்வாக வசதிக்காக சீமானை வேலூர் சிறைக்கு மாற்றியதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment