Labels

Tuesday, March 29, 2011

நாயைச் சுட்டுப்போட்ட நாய்களுக்கு சென்னை கடற்கரையில் செருப்படி







தமிழீழ அன்னை பார்வதிப்பிள்ளை வேலுப்பிள்ளை அவர்களின் அஸ்தி சென்னைக் கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான உணர்வாளர் புடைசூழ கரைக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் அஸ்தி 22.03.2011 அன்று சென்னை மெரீனா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் கடலில் கரைக்கப்பட்டது.

சென்னை மெரீனா கடற்கரையில் கண்ணகி சிலையின் பின்புறம் உள்ள கடற்கரையில் பல்லாயிரக்கணக்கில் தமிழர்கள் திரண்டனர். சிலர் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடிகளை பிடித்திருந்தனர். ம.தி.மு.க., நாம் தமிழர் கட்சிக் கொடிகளும் பறந்தன.

மாலை 5.30 மணிக்கு மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலர் வைகோவும், உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறனும் வந்தனர். அவர்களோடு கவிஞர் காசி ஆனந்தன், ஓவியர் வீரசந்தானம் ஆகியோரும் கலந்துக்கொள்ள, பார்வதி அம்மாளின் படத்துடன் பெரும் திரளாய் கடலை நோக்கிச் சென்றனர்.

கடல் நீரில் பார்வதி அம்மாளின் அஸ்தி கரைக்கப்படும்போது, பார்வதி அம்மாள் புகழ் வாழ்க என்று உரத்த குரலில் வைகோ முழக்கமிட, அவரைத் தொடர்ந்து மற்றவர்களும் முழக்கமிட்டனர்.

இந்நிகழ்ச்சி கடற்கரையில் பெரும் எழுச்சியுடன் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அன்று வல்வை ஊறணிச் சுடலையில் அன்னையின் ஈம நெருப்பில் நாயைச் சுட்டுப்போட்ட நாய்களுக்கு மானத் தமிழர்கள் சென்னைக் கடற்கரையில் கூடி செருப்படி போட்டார்கள் என்றார் உணர்வாளர் ஒருவர். ம.தி.மு.க செயலாளர் வை.கோ, பழ. நெடுமாறன், காசி. ஆனந்தன், புகழேந்தி உட்பட ஏராளமான தன்மானம் மிக்க தமிழர்கள் சென்னை மெரீனாவை நிறைத்தனர்.

எல்லாம் இழந்து ஈழத் தமிழினம் நாதியற்று உலகப் பந்தில் நிற்கிறது. வட இந்தியர் மோசம் செய்துவிட்டார்கள், தென்னிந்திய ஆட்சியாளர் பதவிக்கு விலை போய்விட்டார்கள் என்ற கடும் விமர்சனங்கள் ஈழத் தமிழர் மத்தியில் உருவாகியிருக்கும் வேளையில் இந்த நிகழ்வு சிறிய ஆறுதல் தருவதாக இருந்ததாக சென்னையில் இருந்து தமிழ் உணர்வாளர்கள் கூறுகிறார்கள்.

No comments:

Post a Comment