
ஒளிப்படத்தில் பதிவானது இருண்டிருந்ததைப்
பார்த்தாளோ அவள்?.
தலைப்பு : களம்

பதுங்கி இருப்போமே
தவிர ஒதுங்கி இருக்க மாட்டோம்.
- காசி ஆனந்தன்
தலைப்பு : கடமை

முதுமை
ஒரு தடையல்ல..
- காசி ஆனந்தன்
தலைப்பு : திடம்

கருவி அல்ல
எங்கள் உறுதி காப்பாற்றும்.
- காசி ஆனந்தன்
தலைப்பு : புயல்

வீராங்கனைகள்
நெற்றியில் முத்தமிட்டு
குருதிப்புயலில்
விடுதலையின் கொடி !
- காசி ஆனந்தன்
தலைப்பு : வஞ்சினம்

கொலை செய்கிறவனை
சாகடிப்பது கொலையல்ல
- காசி ஆனந்தன்
தலைப்பு : காலம்

மானுடம் தனது விடுதலை வெளியை
மரண முற்றுகையில் மீட்கிற காலம்.
- காசி ஆனந்தன்
தலைப்பு : சந்திப்பு

சமமாய் நின்றே சந்தித்தோம் –
சமரையும் சாவையும்.
- காசி ஆனந்தன்
தலைப்பு : ஆணை

கீழே போடுவதற்காக
நாங்கள் துப்பாக்கி ஏந்தவில்லை.
- காசி ஆனந்தன்
தலைப்பு : கனல்

தோளில் போராட்டமும்
கண்களில் விடுதலையுமாய்…
- காசிஆனந்தன்
தலைப்பு : பாய்ச்சல்

ஒரே நேரத்தில்
மண் விடுதலையும்
பெண் விடுதலையும்.
- காசி ஆனந்தன்
தலைப்பு : துரோகம்

துல்லியம் காட்டும்
தொலைநோக்கியில்
தெரியாமல் போனவை-
முதுகுக்குப் பின் நின்ற
துரோக முகங்கள் !.
-இன்குலாப்
தலைப்பு : தேவை

போருக்கான தேவை
இருக்கும் வரை
போரும் இருக்கும்.
- காசி ஆனந்தன்
தலைப்பு : மண்

என் தோழர்களின்
பிணங்கள் விழுந்த மண்.
- காசி ஆனந்தன்
தலைப்பு : இயக்கம்

தொடர்பில் இருக்கிறோம்
தொடர்ந்து…
- காசிஆனந்தன்.
தலைப்பு : சிறகு

தாய்க்கோழி விரித்த சிறகாய் இருந்தது
தோளில் சுமந்த எறிகணைகள்!
- இன்குலாப்
தலைப்பு : காவல்

துப்பாக்கி என்னை பாதுகாத்தது.
நான் துப்பாக்கியை பாதுகாத்தேன்..
- காசிஆனந்தன்
தலைப்பு : வேர்

என் கைகளில்
துப்பாக்கி தந்தவன்
எதிரி.
- காசிஆனந்தன்
தலைப்பு : உடைப்பு

ஒரு காலத்தில்
அகப்பை பிடித்த கை
- காசிஆனந்தன்
தலைப்பு: காத்திருப்பு

காத்திருக்கிறோம்
காலத்திற்காகவும்
ஈழத்துக்காகவும்
- காசிஆனந்தன்
தலைப்பு: பதுங்கு குழி

மண் துளைத்து இறங்கும்
மரணத்தின் வெடிமுழக்கத்தை
தாங்குமோ?
தாலாட்டில் இனிததரிந்த
இளஞ்செவிப்பறைகள்!
- கவிஞர் இன்குலாப்
தலைப்பு : உண்மை

நாங்கள் சாகடிக்கப்படுவது
பயங்கரவாதிகள்
என்பதால் அல்ல
தமிழர்கள் என்பதால்.
- கவிஞர் காசிஆனந்தன்
No comments:
Post a Comment