Labels

Thursday, February 18, 2010

இருக்கிறான் தலைவன் நீ நம்படா நம்பு !


இருக்கிறான் தலைவன்
பிரபாகரன்
நீ நம்படா நம்பு!
ஈழத் தமிழினம் வாழப்
போர்க்களம் கிளம்படா கிளம்பு!
தன் மானத் தமிழரின்
தலைமையில் போர் தொடக்கு!
சிங்கள வெறியன்
திமிர் அடக்கு!
ஈழம் தமிழர்கள் தாய்மண்
இல்லையாம் மகிந்தா குதிக்கிறான்!
இறந்து விழுந்த நம் தமிழர்
பிணங்களை காலால் மிதிக்கிறான்!
காலம் அழைக்குது!
ஈழம் அழைக்குது!
கடலைத் தாண்டுவோம்!
களத்திலே ஈழ நிலத்திலே
நாமும் நெருப்பைத் தூண்டுவோம்!
சிறுத்தை படை ஈழப் புலிகள் படை
இரண்டும் ஒன்றுதான் கிளம்பு!
சினந்து புயல் நெஞ்சில் சுமந்து
கிளம்படா!சிதறட்டும் கொழும்பு!
வெறுத்து வாடா உன் உயிரை
நெஞ்சிலே புயலைத் தூக்குவோம்!
வெறியர் சிங்களர் கொடியர்
சூழ்ச்சிகள் சிதறத் தாக்குவோம்!
உலகில் என்றைக்கும் புலிகள்
ஓய்ந்ததாய் வரலாறில்லையே!
உறுமி எழும்கடல்
அலைகள் ஓயுமா?
இல்லை!
இல்லையே!
கலகம் இல்லாமல்
உலகம் திருந்தாது!
களப்போர் ஆடுவோம்!
கயவர் சிங்களர் படையை
வென்று நாம் வாகை சூடுவோம்!

- உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்

No comments:

Post a Comment