Labels

Tuesday, July 12, 2011

இந்தியாவே விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் நிலை வரும்: திருமாவளவன்



இந்தியாவே விடுதலைப்புலிகளை ஆதரிக்கம் நிலை வரும் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

இனப்படுகொலைக் குற்றவாளி ராஜபக்சே கும்பலை அனைத்துலக நீதிமன்றம் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகளின் மாபெரும் கெயொப்ப இயக்கம் தொடங்கும் நிகழ்ச்சி 12.07.2011 அன்று சென்னையில் தொடங்கியது. இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தொடங்கி வைத்தார்.


அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன்,

சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட இலங்கை கொலை களம் என்கிற குறுங்தகடுகளை கிராமம் கிராமமாக மக்களிடம் ஒளிபரப்பி கையெழுத்து இயக்கத்தை நடத்த இருக்கிறோம்.

விடுதலைச் சிறுத்தைகள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை ஆதரிக்கிறது. அது முன்னெடுக்கிற முயற்சிகளுக்கு சர்வதேச அளவில் ஒத்துழைப்பு நல்க முடிவு எடுத்திருக்கிறது. ஈழத்தில் மறுவாழ்வு பணிகள் முறையாக நடப்பது இல்லை. இந்திய அரசு அளித்த உதவித் தொகை முறையாக மக்களுக்கு செலவு செய்யப்படவில்லை.


வன்னிப் பகுதி முழுவதும் சிங்கள மயமாக்கப்பட்டு வருகிறது. நிலையான ராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. திட்டமிட்ட கலாச்சார சீரழிவு நடத்தப்பட்டு வருகிறது. புலிகள் என்கிற பெயரால் 11 ஆயிரம் பேர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். திருமணக்கூடங்களில், தனியார் இடங்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். வதைசெய்யப்படுகிறார்கள்.


சிங்கள ராணுவத்தினால் தமிழ் பெண்கள், பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இதையெல்லாம் சர்வதேச சமூகம் வேடிக்கை பார்த்து வருகிறது. குறிப்பாக இந்திய அரசு இதை அனுமதித்துக்கொண்டிருக்கிறது. இந்திய அரசின் இந்தப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கிறது

மத்திய அரசாங்கத்தை சர்வதேவ சமூகம் மட்டும்தான் பணிய வைக்கமுடியும். இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையே ஈழம் கூடாது என்பதுதான். என்றைக்கு ராஜபக்சேவோடு இந்தியாவுக்கு கடுமையான முரண்பாடு ஏற்படுகிறதோ, அன்றைக்கு இந்தியாவே விடுதலைப்புலிகளை ஆதரிக்கிற நிலை வரும். விடுதலைப்புலிகளை ஆதரித்து தமிழீழம் வாங்கி தருகிறோம் என்ற நிலைப்பாட்டை எடுப்பார்கள்.

இந்திராகாந்தி அம்மையார் அன்றைக்கு ஜெயவர்த்தனே அரசை மிரட்டுவதற்காக போராளிகளை இந்தியாவுக்கு அழைத்து வந்து பயிற்சி கொடுத்தார். போராளிகள் யாரும் அதை கேட்கவில்லை. அன்றைக்கு அவர்களுக்கு பயிற்சி கொடுத்தது இந்திய அரசுதான். ஆயுதங்கள் கொடுத்தது இந்திய அரசுதான். ஐந்து குழுக்களுக்கு பயிற்சி கொடுத்து அவர்களுக்கு ஆயுதங்களை அள்ளி கொடுத்து, ஜெயவர்த்தனேவுக்கு எதிராக கலவரங்களை உண்டுபண்ணுங்கள் என்று சொன்னது இந்திய அரசுதான். ஜெயவர்த்தனே பணிந்த பின்னர், ஆயுதங்களை கீழே போடுமாறு போராளிகளிடம் சொன்னார்கள். அப்போது பிரபாகரன் மட்டும் அதனை மறுத்தார். உங்களுக்காக ஒன்றும் நாங்கள் ஆயுதம் ஏந்தவில்லை. எங்களுக்காகத்தான் ஆயுதம் ஏந்தினோம் என்று அன்று உரைத்தார். இதுதான் அவர்களுக்கிடையே இருக்கும் முரண்பாடு.

சர்வதேச அளவில் இலங்கை அரசோடு முரண்பாடு வரும்போது மட்டும்தான், இந்திய அரசு பணியுமே தவிர, தனிப்பட்ட முறையில் தமிழ்நாட்டில் நடத்துகிற போராட்டங்களால் இந்திய அரசு பணியாது. சர்வதேச சமூகத்தின் அழுத்தம் வரும்போதுதான் ஈழம் கூடாது என்கிற இந்திய அரசின் வெளியுறவுக்கொள்கை மாறும்.

இலங்கை அரசாங்கம் இந்தியாவை சார்ந்து இருக்கிற வரையில் இந்தியா ராஜபக்சேவுக்கு ஆதரவாக இருக்கும். ராஜபக்சே இந்தியாவை எதிர்க்கிற நிலையில், விடுதலைப்புலிகளை இந்தியா ஆதரிக்கும் நிலை வரும். இந்தியாவே விடுதலைப்புலிகளை மறுபடியும் உயிர்பிக்கும். சிங்கள அரசோடு இந்திய அரசாங்கம் முரண்படுகிறபோது இந்த நிலை ஏற்படும்
என்றார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு திருமாவளவன் பதில் அளித்தார்.


கேள்வி: ஈழத்தை ஆதரிக்கிற பல அமைப்புகள் தமிழகத்தில் இருக்கிறது. தனித் தனியாக போராடுவதைவிட கட்சியை மறந்து மற்ற மாநிலங்களைப் போல ஒற்றுமையோடு அனைவரும் போராடுகிற நிலை தமிழத்தில் ஏற்படுமா?


பதில்: அந்த முயற்சிகள் எல்லாம் எடுத்து நான் தோற்றுப்போன நிலையில்தான் இந்த முயற்சி எடுக்கிறோம். தமிழகத்தில் ஈழத்தை வெளிப்படையாக ஆதரிக்கிற கட்சிகள் மூன்றுதான். மதிமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள். இந்த மூன்று கட்சிகளும் சேர்ந்து ஒரு அணியை உருவாக்குவதற்கு என்று 2009 நாடாளுமன்ற தேர்தலில் நான் போராடி பார்த்தேன். நெடுமாறன் அவர்களுடன் நான் இதைப்பற்றி பேசினேன்.


அன்று பாமகவும், மதிமுகவும் அதிமுகவை ஆதரித்து வந்தார்கள். என்னை திமுகவின் ஆதரவாளனாகவே பார்த்தார்கள். நான் அப்படி இருக்கவில்லை. திமுக அணியில் இருந்தபோதும் கூட, அவர்களோடு பயணம் செய்தேன். தமிழ்நாட்டில் திமுக எதிர்ப்பு, கருணாநிதியின் எதிர்ப்பு என்றே தமிழ்நாட்டில் ஈழப் பிரச்சனையை பார்க்கிறார்கள்.


இலங்கையை எதிர்ப்பதைவிட, ராஜபக்சேவை எதிர்ப்பதைவிட, சோனியா காந்தியை எதிர்ப்பதைவிட, ஈழத்துக்கு எதிரான சர்வதேச நாடுகளை அம்பலப்படுத்துவதைவிட தமிழ்நாட்டில் ஈழத்தை ஆதரிக்கக் கூடியவர்கள் வெறும் கலைஞர் கருணாநிதி எதிர்ப்பு என்கிற வகையில் இப்பிரச்சனையை சுருக்கி விட்டார்கள். இது ஒரு வெட்கக்கேடான, சாபக்கேடான நிலை.



கேள்வி: ஈழம் என்கிற ஒரு விஷயத்திற்காக இனி வரும் காலங்களிலாவது தமிழகத்தில் ஈழ ஆதரவாளர்கள் ஒன்று சேர வாய்ப்பு இருக்கிறதா?


பதில்: வைகோவோடு கைகோர்ப்பதற்கும், நெடுமாறன் அவர்களோடு கைகோப்பதற்கும், பாமகவோடு கைகோப்பதற்கு நான் என்றும் தயாராக இருக்கிறேன். எந்த ஒரு நிபந்தனைகளும் இல்லாமல் ஈழத்தை ஆதரிக்கிறவர்களோடு பயணம் செய்ய நான் தயார்.

ஈழத்தில் மிகப் பெரிய இழப்பு, அதுவே முடிவல்ல-ஈழம் மலர்ந்தே தீரும்...! : சேலத்தில் பரபரப்பூட்டிய வழக்காடு மன்றம்



சேலம் மய்யப் பகுதி யான, சின்னக் கடைவீதி, பட்டைக்கோயில் அருகில் 9.7.2011 சனிக் கிழமை சர்வதேச போர்க் குற்றவாளி ராஜபக் சேவுக்கு துணை நிற் போர் குற்றவாளிகளே என்ற தலைப்பில் வழக் காடு மன்றம் நடை பெற்றது. கழக சொற் பொழிவாளர் இரா.பெரி யார்செல்வன் வழக்கை தொடுக்க, வழக்குரை ஞர் பூவை.புலிகேசி வழக்கை மறுக்க, முனைவர் அதிரடி க.அன்பழ கன், நடுவராக பொறுப்பு வகித்து வழக்காடு மன்றத்தை நடத்தினார்.

மாலை 6 மணிக்கு நிகழ்ச்சியை துவக்குவ தாக இருந்த நிலையில், பலத்த மழை பெய்யவே நிகழ்ச்சி தடைப்பட்டது. தொடர்ந்து 8 மணி வரை மழை நீடித்தது. 8.15 மணிக்கு மழை சற்று குறைய மழையின் நெருக்கடி மற்றும் நேரத்தின் நெருக்கடிக்கு இடையே நிகழ்ச்சியைத் துவக்கினார்கள் தோழர்கள்.

மாநகர் தலைவர் வி.வடிவேல் தலைமை வகிக்க, மாவட்ட தலை வர் மு.செல்வராசு, துணைத் தலைவர் சி.பூபதி, செயலாளர் அரங்க.இளவரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவரணி அமைப்பாளர் தமிழர் தலைவர் கடவுள் மறுப்பு கூறினார். மாவட்ட அமைப்பாளர் கவிஞர் எஸ்.முனுசாமி வரவேற் றார். மண்டல தலைவர் பழனி.புள்ளையண்ணன் துவக்கவுரையாற்றி, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

ஈழத்தில் தமிழ் இனத் தையே படுகொலை செய்து அழித்து, ஒழித்து விட்ட நிலையில் இருக் கின்ற மக்களைப் பாது காக்கவும், ராஜபக்சே வுக்கு உரிய தண்டனை பெற்றுத்தரவும், மக்க ளுக்கு எழுச்சி உண்டாக்குகின்ற வகையிலேதான் இந்த வழக்காடு மன்றம் நடத்தப்படுகிறது என்பதையும், சமச்சீர் கல்வி முறையை நிறுத்தி வைத்து பொறுப் பேற்று ஒரு மாத காலத்திற்குள்ளா கவே, உச்சநீதிமன்றத்தி லும், சென்னை உயர் நீதிமன்றத்திலும் கண் டனத்திற்கு ஆளான அரசின் நிலையைக் கண்டித்தும், அதே சமயத்தில் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண் டும், கச்சத் தீவை மீட்க வேண்டும் என்ற அர சின் தீர்மானங்களை பாராட்டியும், திராவி டர் கழகம் நல்லதை பாராட்டும் அல்லதை எதிர்த்தே தீரும் என்ற நிலைப்பாட்டை பொதுமக்களுக்கு உணர்த்தி முனைவர் அதிரடி அன்பழகன் அறிமுக உரையாற்றி னார்.

தொடர்ந்து, இரா. பெரியார்செல்வன் வழக்கைத் தொடுத்து ஈழத்தமிழர்களுக்கு உதவுங்கள் என்று பல் முனையில் தமிழர்கள் போராட்டங்கள் நடத்தியும், நாங்கள் பழி தீர்த்துகொள்வோம் என்று செயல்பட்ட, இலங்கைக்கு துணைநிற்கும் இந்தியா, காங்கிரசு கட்சி மற்றும் சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, கியூபா நாடுகள் பற்றி எடுத்துரைத்தார்.

மேலும் விடுதலைபுலி கள் விரும்பி ஆயுதத்தை தூக்கவில்லை என்பதை யும், இலங்கை இராணுவத் தினர் இங்கே தமிழன் கறி கிடைக்கும், தமிழச்சி உறுப்புகள் கிடைக்கும் என்று மனிதத்தன்மையே இல்லாத வகையில் செய்த கொடுமைகளே அவர் களை ஆயுதம் ஏந்தி போராட வைத்தது, மேலும் ஈழத்தில் இப்போது மிகப் பெரிய இழப்பு ஏற்பட் டுள்ளது. ஆனால், அதுவே முடிவானது அல்ல... ஈழம் மலர்ந்தே தீரும் என்று உரையாற்றி னார்.
வழக்கை மறுத்து வழக் குரைஞர் பூவை.புலிகேசி ஈழத்தில் போரை நடத் தியதே இந்தியாதான் என் றும் இன்று, நேற்றல்ல, காலங்காலமாகவே இந் தியா ஈழத்தமிழர்களுக்கு விரோதமாக நடந்து வந் துள்ளது. இப்படியிருக்க உலகநாடுகளுக்கு ஈழத் தமிழர்கள் மீது பற்று இருக்கும் என்ற எப்படி எதிர்பார்க்க முடியும்? என்றார். ஈழத்தமிழர் போராட் டங்களை கொச்சைப் படுத்தும் பார்ப்பன ஊட கங்கள், அவற்றை வாங் கும் தமிழர்கள் குற்ற வாளி. இனவுணர்வு பிரச் சனையை சொந்த நல னுக்கு பயன்படுத்திக் கொண்ட அரசியல்வாதி கள், குற்றவாளி. ஈழத் தமிழர்களைப் பற்றி பேசுங்கள், விடுதலைப் புலிகளை பற்றி பேசா தீர்கள், என்று சொல்லும் ஈனர்கள் குற்றவாளி என்று தம் பங்குக்கு ஈழப்போராட்ட எதிரி களை தோலுரித்து காட் டினார்.

இறுதியாக, ஹிட் லரை விட ஆயிரம் மடங்கு கொடியவன் இராஜபக்சேவுக்கு தண் டனை வழங்காவிட்டால், அய்.நா. சபை தன் மதிப் பிழந்துவிடும் என்று எச் சரித்து, ராஜபக்சேவுக்கு துணைநிற்கும் பார்ப்பன ஊடகங்கள், நாடுகள் இவற்றை விட, தமிழர் களின் தொப்புள்கொடி உறவுகளுக்கு, துரோகம் இழைக்கும் இந்தியாவும், காங்கிரசும்தான் குற்ற வாளி என்று தீர்ப்பு கூறினார் நடுவர் முனை வர் அதிரடி அன்பழ கன். மாநகர செயலா ளர் அ.ச.இளவழகன், நன்றி கூற வழக்காடு மன்றம் இரவு 10.20க்கு முடிவடைந்தது. கழக சொற்பொழிவாளர் களுக்கு நன்கொடை வழங்கியும், கை குலுக் கியும், பொதுமக்கள் தம் நெகிழ்ச்சியையும், எழுச்சியையும், வெளிப்படுத்தினர். சொற்பொழிவாளர் களுக்கும், கழக தோழர் களுக்கும் மாநகர செய லாளர் இல்லத்தில் இரவு அசைவ சிற் றுண்டி வழங்கப்பட் டது.

நிகழ்ச்சியில் தென் சென்னை மாவட்ட செயலாளர் வழக்கு ரைஞர் அருளரசன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பா.வைரம், சேலம் கழக பொறுப்பாளர்கள் சக்திவேல், தமிழர் தலைவர், சுஜாதா, பிர பாகரன், கமலம், பா. வெற்றி, ந.கலையழகன், கே.சிவக்குமார், புரட்சிவேந்தன், மல்லூர் பழனிசாமி, மல்லிகா, தங்கவேல், ஆட்டோ முருகேசன், உள்ளிட்ட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Sunday, July 10, 2011

இலங்கை தமிழர் படுகொலை மத்திய அரசு ஆழ்ந்த மவுனம் சாதிப்பது ஏன்? : இந்திய கம்யூனிஸ்ட் கேள்வி



�ஆயிரக்கணக்கான இலங்கை தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு ஆழ்ந்த மவுனம் சாதிப்பது ஏன்?� என்று இந்திய கம்யூனிஸ்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து டெல்லி ஜந்தர் மந்தரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 08.07.2011 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதில், கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன், தேசிய செயலாளர் டி.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொண்டர்கள் இடையே பரதன் பேசுகையில், “இலங்கை இறுதிக்கட்ட போரின் போது ஆயிரக்கணக்கான தமிழர்களை ராணுவம் கொன்று குவித்தது. இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளும், ஐ.நா.வும் செயல்படுகின்றன. ஆனால், இந்தியா மட்டும் ஆழ்ந்த மவுனம் சாதிக்கிறது. எது ஏன்? இந்த பிரச்னையை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எழுப்பும்” என்றார்.

டி.ராஜா பேசுகையில், “பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்க ராஜபக்சே அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழர்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து அளிக்க வேண்டும். முகாம்களில் தங்கியுள்ள தமிழர்கள், வீடு திரும்ப அனுமதிக்க வேண்டும். இலங்கை சம்பந்தப்பட்ட வெளியுறவு கொள்கையில் மத்திய அரசு இரட்டை வேஷம் போடுகிறது. தமிழர்களின் துயரத்தை துடைக்க, ராஜபக்சேவுக்கு நிர்பந்தம் கொடுத்து இருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் சமீபத்தில் கூறினார். அதற்கு மறுநாளே, இந்தியா எந்த நிர்பந்தமும் செய்யவில்லை என்று ராஜபக்சே அறிவிக்கை விடுகிறார். இதில் யாரை நம்புவது?” என்றார்.

தெற்குசூடான் உதயமானதுபோல் தமிழ்ஈழம் மலரவும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும்: வைகோ



ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உலக வரைபடத்தில் ஒரு புதிய தேசம் இடம் பெற்று விட்டது. பிரபஞ்சப் பூச்செடியில் புதிதாக ஒரு மலர் பூத்து உள்ளது. ஆப்பிரிக்க கண்டத்தின் வடபகுதியில், தெற்குசூடான் சுதந்திரத் தனிநாடு என உலகம் ஏற்றுக் கொண்டு விட்டது. தலைநகர் ஜூபாவில் சுதந்திரக்கொடி பறக்கிறது.

சல்வாஹிர் மியார்டிட், நாட்டின் முதலாவது குடியரசுத் தலைவராக ஆகி விட்டார். இனப்படுகொலைக்கு ஆளாகி, துன்பம் என்னும் நரக இருளில் தத்தளித்த கருப்பர் இன மக்களின் அடிமை நுகத்தடியை முறித்து தங்கள் மண்ணை, சுதந்திர பூமியாக உலகம் ஏற்றுக் கொண்டதை, ஆடிப்பாடி கோலாகலமாக நடத்தும் கொண்டாட்டங்களில், கருப்பர் இனத்து சிறுவர் சிறுமிகள், தங்களின் சுதந்திர தேசக்கொடியுடன் குதித்து கும்மாளம் இடுவதை, ஊடகத்திரைகளில் காணும் போது, ஈழத்தமிழர்களும், அவர்களின் பிள்ளைகளும் இப்படி சுதந்திர ஆனந்தப் பள்ளு பாடும் நாள் விரைவில் மலராதா? என்ற ஏக்கம் நெஞ்சை அடைக்கிறது.

தெற்கு சூடான் விடுதலைத் திருநாள் கொண் டாட்டங்களில் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், அமெரிக்க குடியரசின் முன்னாள் தலைவர் ஜார்ஜ் புஷ் உள்ளிட்ட பன்னாட்டு அதிபர்களும் பங்கு ஏற்கின்றனர். இந்தியாவும், தன் பங்குக்கு குடியரசின் துணைத்தலைவர் ஹமீது அன்சாரியை அனுப்பி வைத்து உள்ளது.

நைல் நதி தீரத்தில் இந்த கருப்பர் நாடு மலர்ந்திட, அம்மக்களின் பொது வாக்குப்பதிவை நடத்தியது. அந்த தீர்வைத்தானே தமிழ் ஈழ மக்கள் இன்று கேட்கிறார்கள். தாய்த் தமிழகத்தின் இளைஞர்கள், கோடிக்கணக்கான மக்கள், அந்த இலக்கை அடைய, உரிமைப்போர், முழக்கம் செய்யும்போது எந்த சக்தி அந்த தீர்வை தடுத்து விட முடியும்? உலகின் மிகப்பழமையான நைல் நதி பாய்ந்தோடும் சூடான் குடியரசு நாடு, முன்னோரு காலத்தில் எகிப்தியப் பேரரசின் ஆதிக்கத்திலும், பின்னர் பிரித்தானியகக் காலனி நாடாகவும் இருந்து, 1956 முதல் சுதந்திர நாடாக ஆயிற்று.

வடக்கு சூடான் பகுதியில் அராபியர்களின் வழித்தோன்றல்களும், நூபியர்களும் வாழ்கின்றனர். தெற்கு சூடான் பகுதியில் கருப்பர் இன மக்களும், இயற்கை வழிப்பாட்டுப் பழங்குடியினரும் வசிக்கின்றனர். வடக்கே இஸ்லாம் மார்க்கமும், தெற்கே கிறிஸ்துவ மார்க்கமும் ஆளுமை கொண்டு உள்ளன. வடக்குக்கும், தெற்குக்கும் இடையே மூண்ட மோதல்களால் 56 முதல் 72 வரை உள்நாட்டுப் போரும், மீண்டும் 83 ல் இரண்டாம் உள்நாட்டுப் போரும் மூண்டன.

1989 ல் திடீர் புரட்சியை நடத்திய ராணுவ தளபதி உமல்அல்பசீர், குடியரசு தலைவராக முடிசூட்டிக் கொண்டார். இன்று வரையிலும், அவரே சர்வாதிகாரியாக இருக்கின்றார். எண்ணெய் வளம் மிக்க தெற்கு சூடானில் தொடர் ராணுவத் தாக்குதல்கள், இனப்படுகொலையாகவே அல்பசீர் அரசால் நடத்தப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் படுகொலைக்கு உள்ளாயினர்.

பாய்ந்தோடும் நைல் நதியில் அவர்களின் செங்குருதி கலந்தது. இனக்கொலை நடத்திய அதிபர் உசேன்அல்பசீருக்கு 87 சதவீத ஆயுதங்களை சீனாதான் வாரி வழங்கியது. ரஷியா தன் பங்குக்கு 8 சதவீத ஆயுதங்களை தந்தது. இதெல்லாம் எதற்காக? சூடானின் எண்ணெய் வளத்தை கொள்ளை அடிப்பதற்காக.

தெற்கு சூடானில் முதலில் ராணுவத்தில் பணி ஆற்றி அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற ஜான்கராங், சூடான் மக்கள் விடுதலைப்படையின் தலைவர் ஆனார். 2005 ம் ஆண்டு விமான விபத்தில் அவர் மாண்டார்.

அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் விதித்த பொருளாதாரத் தடை உள்ளிட்ட அழுத்தங்களால், சூடான் அரசும், தெற்கு சூடான் மக்கள் விடுதலை இயக்கமும் நய்வாசா அமைதி உடன்படிக்கை செய்து கொண்டன. தெற்கு சூடான், தனி நாடாகப் பிரிந்து செல்வதா? அல்லது சூடான் குடியரசிலேயே நீடிப்பதா? என்பதை 2011 ம் ஆண்டு ஜனவரியில் பொது வாக்குப்பதிவு மூலம் தீர்மானிப்பது என்று முடிவு செய்தனர்.

இந்த ஒப்பந்தத்தின்படி பொது வாக்குப்பதிவை வெற்றிகரமாக நடத்துவதற்கு ஒத்துழைப்பு தருமாறு அமெரிக்க குடியரசு தலைவர் ஓபாமா, சாட், லிபியா, கென்யா, உகாண்டா, தென் ஆப்பிரிக்கா, ஏதியோப்பியா, நைஜீரியா, ருவாண்டா ஆகிய நாடுகளின் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். திட்டமிட்டவாறு வாக்குப் பதிவை நடத்தாவிடில் சூடான் நாட்டின் மீது பொருளாதார முற்றுகையை அமெரிக்கா தீவிரப்படுத்தும் என்றும், திட்டமிட்டப்படி வாக்குப்பதிவை நடத்தினால் பயங்கரவாத நாடு என சூடான் மீது விதிக்கப்பட்ட தடைகளை நீக்குவதாகவும் அறிவித்தார்.

தெற்கு சூடானில்தான் 80 சதவீத எண்ணெய் கிணறுகள் உள்ளன. இந்த எண்ணெய், வடக்கு சூடானின் துறைமுகங்கள் வழியாகத்தான் அயல்நாடுகளுக்கு அனுப்ப முடியும். எனவே தங்கள் துணை இல்லாமல் தனிநாடாக, தெற்கு சூடான் இயங்க முடியாது என்று சூடான் அரசும், அதற்கு துணையாக சில அதிபர்களும் கூறி வந்தது உரிமைச் சம்மட்டியின் அடியால் நொறுங்கிப் போய்விட்டது.

சூடான் ராணுவமும், அரசு ஏவிய ஆயுதப் குண்டர் கூட்டமும் நடத்திய படுகொலைகளால் வீடு, வாசல் இழந்து வடக்கு சூடானில் தலைநகர் கர்டோமைச் சுற்றிலும் உள்ள முகாம்களில் மட்டும் ஏறத்தாழ இருபது லட்சம் பேர் அகதிகளாக தஞ்சம் புகுந்து இருந்தனர். துன்பத்தில் துடிதுடித்த அந்த மக்களும், இந்த வாக்குப்பதிவில் பங்கு ஏற்க உரிமை கோரியபோது, முதலில் மறுத்த சூடான் அரசு பின்னர் வேறு வழியின்றி அதற்கு ஒப்புக்கொண்டது.

உகாண்டாவிலும், கென்யாவிலும் அகதிகளாக இருந்தவர்களும் தங்கள் தாயகத்துக்கு திரும்பி வந்து வாக்கு அளித்தனர். 2011 ஜனவரி 9 ந்தேதி முதல் 15 ந்தேதி வரையிலும், ஆறு நாட்கள் பொது வாக்குப்பதிவு நடைபெற்றது. தெற்கு சூடானின் மக்கள் தொகையில் அறுபது விழுக்காட்டினர் அந்த வாக்குப்பதிவில் பங்கு ஏற்க வேண்டும். அதில் 50 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் தருகின்ற தீர்ப்பு எதுவாயினும் ஏற்பது என சூடான் அரசும், விடுதலை இயக்கமும் ஒப்புக்கொண்டு இருந்தன.

ஆனால் வாக்குப் பதிவில் பங்கு ஏற்ற 97 விழுக்காட்டினருள், 99 விழுக்காட்டினர் தெற்கு சூடான் தனி நாடாக அமைவதற்கு ஆதரவு அளித்தனர். வாக்கு அளிக்கப்பதிவு செய்து கொண்டோர் 39,47,676 பேர். வாக்கு அளித்தவர்கள் 38,41,994 பேர். செல்லுபடியான வாக்குகள் 38,37,406 பேர். தனிநாட்டுக்கு ஆதரவு 37,92,518 பேர். எதிர்ப்பு 44,888.

தெற்கு சூடான், சுதந்திர தேசக்கொடி பட்டொளி வீசுகிறது. விடுதலை சங்கநாதம் திசையெங்கும் கேட்கிறது. ஆனாலும், சூடான் நாட்டுக்குள் எந்த நேரமும் குமுறி வெடிக்கும் என்ற நிலையில், டர்புர் பிரதேசப் பிரச்சினை அச்சுறுத்திக் கொண்டு இருக்கின்றது. அங்கு வாழும் பழங்குடி மக்கள், ஆதிக்க இனத்தினரால் லட்சக்கணக்கில் கொல்லப்பட்டு உள்ளனர். மனித இனத்தின் பேரழிவுகளுள் ஒன்று என்றே உலகத் தலைவர்களுள் பலர் அதை குறிப்பிட்டு உள்ளனர். அங்கும் ஒரு வாக்குப்பதிவை 2012 ம் ஆண்டில் நடத்துவது என தீர்மானித்து உள்ளனர்.

வடக்கு, தெற்கு, மேற்கு டர்புர் பகுதிகளை உள்ளடக்கி, சுயாட்சி அதிகாரம் கொண்ட, ஒருங்கிணைந்த டர்புர் மாநிலம் அமைப்பதா? அல்லது தற்போது உள்ளவாறு மூன்று மாநிலங்கள் என்ற நிலையே நீடிப்பதா? என்பதை அந்த வாக்குப் பதிவு முடிவு செய்யும்.

மேலும் வடக்கு சூடானுக்கும், தெற்கு சூடானுக்கும் நடுவே அமைந்து உள்ள அபெய் மாநிலம், யாருக்கு சொந்தம் என்பதுவும் தீர்க்கப்படாத பிரச்சினையாக உள்ளது. மோதலுக்கு இது வழிவகுக்கக்கூடும் என்பதால், அதற்கும் ஒரு தனி வாக்குப்பதிவுதான் தீர்வாக அமையக்கூடும். சூடான் அதிபர் அல்பசீர் நடத்திய இனப்படுகொலைக் குற்றங்களுக்காக அனைத்து உலகக் குற்றவியல் நீதிமன்றக் கூண்டில் நிறுத்த வேண்டும் என்று 2004 ம் ஆண்டு ஐ.நா.வின் பாதுகாப்பு மன்றம், 1564 ஆவது தீர்மானத்தின்படி முடிவு செய்தது.

2005 ம் ஆண்டு மார்ச் மாதம், அதே மன்றம் அறிவித்ததற்கு இணங்க, 2008 ம் ஆண்டு ஜூலை 14 ம் நாள் அனைத்து உலக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 2009 ம் ஆண்டு மார்ச் மாதம் அல்பீசீரை கைது செய்யும்படி ஆணை பிறப்பித்தது. 2010 ம் ஆண்டு ஜூலை மாதம் திஹேக் நகரில் உள்ள நீதிமன்றம், அல்பசீரை இனக்கொலை நடத்திய குற்றவாளி என அறிவித்து விட்டது.

லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை துடிக்க துடிக்க கொடூரமாக கொலை செய்த இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவும் அவனது கூட்டாளிகளும் அனைத்து உலகக் குற்ற இயல் நீதிமன்றத்தின் கூண்டில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படவும், அதற்கு உரிய நடவடிக்கைகளை ஐ.நா.மன்றமும், உலக நாடுகளும் மேற்கொள்ளவும், சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான பொது வாக்குப்பதிவு, பன்னாட்டுப் பார்வையாளர்களின் மேற்பார்வையில் நடத்தப்படவும், தெற்கு சூடான் உதயமான திருநாளான இந்த ஜூலை 9 ம் நாள் அன்று தாய் தமிழகத்து மக்கள் சூளுரைப்போம்.

சுதந்திர தெற்கு சூடானின் உதயம், சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கு பன்னாட்டு அரங்கில் நுழைவாயில் ஆகட்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.

Friday, July 8, 2011

கார்த்திகேசு சிவதம்பி மாரடைப்பால் காலமானார் :



இலங்கையைச் சேர்ந்த மூத்தத் தமிழறிஞரும், இலக்கிய விமர்சகருமான கார்த்திகேசு சிவதம்பி கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் மாரடைப்பால் 06.07.2011 அன்று காலமானார். அவருக்கு வயது 79.

1932ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உள்ள கரவெட்டி என்னும் ஊரில் பிறந்த அவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். அவருக்கு மனைவி ரூபாவதியும், மூன்று மகள்களும் உள்ளனர்.


இவர் சங்க இலக்கியம் முதல் இப்போதைய தமிழ் சினிமா வரை பல்வேறு துறைகளில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். தமிழின் மிகச்சிறந்த இலக்கிய விமர்சகர்களில் ஒருவராகப் போற்றப்பட்டவர்.


இங்கிலாந்தில் பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் "பண்டைத் தமிழகத்தில் நாடகம்' என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டார். "தமிழ்ச் சமூகம் ஒரு புரிதலை நோக்கி', "பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் நாடகம்', "மதமும் மானுடமும்' "தமிழ்ச் சிறுகதைகள் தோற்றமும் வளர்ச்சியும்', "இலங்கைத் தமிழர் யார், எவர்', "தொல்காப்பியமும், கவிதையும்' "தமிழ்ப் பண்பாட்டில் சினிமா' உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட புத்தகங்களை அவர் எழுதியுள்ளார்.


உலகத் தமிழ் மாநாடு உள்பட பல்வேறு மாநாடுகளில் 200 க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார். தஞ்சை உலகத் தமிழ் மாநாட்டில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் என்று திருப்பி அனுப்பப்பட்டார். கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஆய்வரங்கத்தின் தலைவராக இருந்தார். இந்த மாநாட்டின் மிகப்பெரிய விளம்பரமாக அவரது பங்கேற்பை அப்போதைய தமிழக அரசு செய்தது.

கார்த்திகேசு சிவதம்பியின் மறைவு செய்தி அதிர்ச்சியை தந்தது: கலைஞர்

தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

பேராசிரியர் கார்த்திகேசு சிவதம்பியின் மறைவு செய்தி அதிர்ச்சியை தந்தது. 79 வயதான பேராசிரியர் சிவதம்பி கடந்த சில நாட்களாகவே உடல் நலிவுற்றிருந்து நேற்றிரவு மறைந்திருக்கிறார்.

பேராசிரியர் கா.சிவதம்பி தமிழ்மொழி, இலக்கியத்தில் ஆழ்ந்த புலமை கொண்டவர். திறனாய்வாளர், சமூக வியலாளர், அரசியல் சிந்தனையாளர், பல்துறை புலமை கொண்டவர்.

இங்கிலாந்து, பின்லாந்து, ஜெர்மனி என்று பல நாடுகளிலும் பணியாற்றி பெருமை சேர்த்தவர். எட்டாவது தஞ்சை உலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொள்ள வந்த பேராசிரியர் சிவதம்பி திருப்பி அனுப்பப்பட்டார் என்ற அநீதிக்கு பரிகாரமாக 2000 ம் ஆண்டில் தி.மு.க. அரசு அவருக்கு திரு.வி.க. விருது வழங்கியது.

அண்மையில் கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஆய்வரங்க குழுவிற்கு தலைமை பொறுப்பு வழங்கி தி.மு.க. அரசு அவரை சிறப்பித்தது. செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ள தனது உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் இலங்கையில் இருந்து பெங்களூர் வரை விமானத்தில் வந்து அங்கிருந்து கோவைக்கு காரிலேயே வந்து சென்றார்.

மாநாடு முடிந்து அவர் விடைபெறும் முன் என் அறைக்கு தேடி வந்து கைகளைப் பிடித்து கண்ணீர் மல்க நன்றி சொன்னார். 70க்கும் மேற்பட்ட நூல்களையும், 200க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதி உலக அறிஞர்களால் போற்றப்பட்ட பேராசிரியர் சிவதம்பியின் மறைவு தமிழ் உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரை பிரிந்து வருந்தும் அவரது துணைவியார் ரூபாவதி சிவதம்பிக்கும், அவரது மகள்களுக்கும் குடும்பத்தாருக்கும் எனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


இவ்வாறு கலைஞர் கூறியுள்ளார்.


சிவத்தம்பியின் மறைவு, தமிழ் இலக்கிய உலகுக்குப் பேரிழப்பு: வைகோ


ஈழத்தமிழ் அறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி மறைவுக்கு மதிமுக பொதுசெயலர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:


ஈழத்தமிழ் அறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பியின் மறைவுச் செய்தி அறிந்து அதிர்ச்சியும், மிக்க துயரமும் அடைந்தேன்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில், பேராசிரியர் சு. வித்தியானந்தத்தின் மாணவராகிய சிவத்தம்பி, பின்னர் அதே பல்கலைக்கழகத்திலும் பணியாற்றினார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்புலத் தலைவராகவும், கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் பணிபுரிந்துள்ளார்.


சிவத்தம்பி, சிறந்த விமர்சகர். மேலை நாட்டு விமர்சன முறையை தமிழ் இலக்கியத்தில் அறிமுகம் செய்தவர். தொல்காப்பியத்தைப் படித்து, தமிழ் இலக்கணத்தில் கரை கண்டவர். ‘தொல்காப்பியத்தை ஒருவர் எழுதவில்லை; பலர் எழுதி இருக்கிறார்கள்’ என்ற கருத்தை முன்வைத்தவர். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் அருள்சோதியில் கலந்தார் என்பதற்கு, வரலாற்று ரீதியாக பகுத்தறிவு விளக்கத்தைக் கொடுத்தவர். சிறந்த பொது உடைமைவாதி, பகுத்தறிவாளர்.

அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தில், உலக அமைப்பின் பொதுச் செயலாளராக, தஞ்சாவூர் உலகத் தமிழ் மாநாட்டில் தெரிவு செய்யப்பட்டவர். விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் என்று கூறி தமிழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.


இலங்கை சுதந்திராக் கட்சித் தவைர்களுடன் நெருக்கமாக இருந்த சிவத்தம்பி, நாடாளுமன்றத்தில் சமகால மொழிபெயர்ப்பாளராகப் பணி ஆற்றினார்.


சிவத்தம்பியின் தந்தையார் கார்த்திகேசு, சைவப்புலவராகத் தமிழகத்தில் படித்துப் பட்டம் பெற்றவர். இலங்கையின் வடமராட்சி பகுதி ஈன்ற சிறந்த புலமையாளர்களுள் ஒருவர் சிவத்தம்பி. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்த வடமராட்சி தமிழ் இலக்கியவாதிகள் நிறைந்த பகுதி என்பதால், இலங்கை அரசு வடமராட்சி பகுதியைக் குறிவைத்துத் தாக்கியது. பிரபாகரனுக்கும், கவிஞர் காசி ஆனந்தனுக்கும் உறவினரான பேராசிரியர் சிவத்தம்பியின் மறைவு, தமிழ் இலக்கிய உலகுக்குப் பேரிழப்பாகும்.

அவரது மறைவுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


இவ்வாறு தனது இரங்கல் செய்தியில் வைகோ குறிப்பிட்டுள்ளார்.

உடலால் மறைந்தாலும், தமிழ் மொழிப் பணிகளால் மக்கள் உள்ளங்களில் வாழுபவர் சிவதம்பி: வீரமணி

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள செய்தியில்,

முதுபெரும் தமிழர் அறிஞர் இலங்கையைச் சார்ந்த ஈழத் தமிழ்ப் பெரும் பேராசிரியர் முனைவர் கார்த்திகேசு சிவதம்பி அவர்கள் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் துன்பமும், துயரமும் அடைந்தோம்.


பேராசிரியர் கார்த்திகேசு சிவதம்பி அவர்களது நுண்மான் நுழைபுல ஆற்றல், அவர் எழுதிய பற்பல நூல்கள் மூலம் தமிழ் கூரும் நல்லுலகத்திற்கு காணிக்கையாக்கப்பட்ட அரும் பெரும் இலக்கியச் செல்வங்களாகும்.


விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு, எதையும் ஆராய்ந்து கூறும் ஆய்வுப் புலமை பெற்ற ஆற்றலாளர், முற்போக்குச் சிந்தனை உடையவர்.


சில கருத்துகளில், அணுகுமுறைகளில் நாம் மாறுபடக் கூடியவர்கள் என்றாலும், அவர் ஆற்றல்மிகு ஒரு நிறைகுடம்; பல்கலைக் கொள்கலன் ஆவார்.


கோவையில் மேநாள் முதல்வர் கலைஞர் அவர்கள் கூட்டிய உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டைத் துவக்கி வைத்து அவர் ஆற்றிய பொழிவு, இன்னமும் நம் செவிகளைக் குளிர வைக்கின்றன.


தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை என்றார் புரட்சிக்கவிஞர். ஆம், பேராசிரியர் கார்த்திகேசு சிவதம்பி உடலால் மறைந்தாலும் அவரது இலக்கியத் தொண்டாலும், தமிழ் மொழிப் பணிகளாலும் என்றும் மக்கள் உள்ளங்களில் வாழுபவர் ஆவார்கள்.


அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு, தமிழ் கூரும் நல்லுலகத்துக்கு திராவிடர் கழகம் சார்பில் நமது ஆழ்ந்த இரங்கல்!


கார்த்திகேசு சிவத்தம்பி மறைவு உலகத் தமிழ் சமுதாயத்திற்கும், தமிழுக்கம் ஏற்பட்ட பேரிழப்பு: ராமதாஸ்

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்தியில்,

ஈழத் தமிழறிஞரும், தமிழ்ப் பேராசிரியருமான கார்த்திகேசு சிவத்தம்பி மாரடைப்பால் காலமான செய்து கேட்டு அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன்.


வீரம் விளையும் இலங்கை வல்வெட்டித்துறையில் பிறந்த சிவத்தம்பி, பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். தமது வாழ்நாளின் கடைசி நிமிடம் வரை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மதிப்புறு பேராசிரியராக பணியாற்றி வந்த சிவத்தம்பி, சென்னை பல்கலைக்கழகம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், தில்லி சவர்லால்நேரு பல்கலைக்கழகம் மற்றும் ஐரோப்பாவின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் மதிப்புறு பேராசிரியராக பணியாற்றி தமிழ் வளர்த்தவர்.


இலங்கை தமிழ் வரலாறு மற்றும் இலக்கியம் குறித்து 200க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் 70க்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியவர். தமிழில் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர். தமிழுக்கு இவர் ஆற்றிய தொண்டுக்காக தமிழக அரசின் திரு.வி.க. விருது பெற்றவர். கோவையில் கடந்த ஆண்டு நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் சிறப்பிக்கப்பட்டவர்.


ஒட்டுமொத்தத்தில் தமிழ்மொழி மற்றும் இலக்கியத்தின் முன்னோடியாகவும், மார்க்சிய சித்தாந்தவாதியாகவும் திகழ்ந்தவர். அவரது மறைவு உலகத் தமிழ் சமுதாயத்திற்கும், தமிழுக்கம் ஏற்பட்ட பேரிழப்பாகும். அவரை இழந்துவாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.


இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.


சிவதம்பி மறைவு: இ.கம்யூனிஸ்ட் இரங்கல்


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் வெளியிட்ட இரங்கல் அறிக்கை:

உலகின் சிறந்த தமிழ் அறிஞரும், மார்க்சீய அறிஞரும், சமூகப்போராளியுமான பேராசிரியர் சிவதம்பிக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநிலக் குழுவின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். வெல்வெட்டி துறைக்கு அருகில் அமைந்த கரவெட்டி என்னும் உரில் த.பி. கார்த்திகேசு, வள்ளிமை தம்பதியினருக்கு இவர் மகனாக பிறந்தார்.


தமிழகத்திலுள்ள தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தஞ்சை தமிழ் பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக் கழகம், போன்றவற்றில் இவருடைய ஆய்வு பங்களிப்பு முக்கியமானதாகும். இங்கு வருகை பேராசியராகவும் வருகை தந்து சிறப்பித்துள்ளார். இங்கிலாந்து ஜெர்மனி முதலான நாடுகளின் புகழ் மிக்க பல்கலைக் கழகங்கள் பலவற்றில் வருகைப் பேராசியராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.


சிவதம்பியின் மரணம் உலக அளவில் தமிழுக்கான ஆய்வு அரங்கில் ஒருவித வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. புதிய தலைமுறையினர், அந்த இடத்தை இட்டு நிரப்புவதற்கான தங்கள் பணியை உடன் தொடங்குவது தான் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும். இலங்கை தமிழ் மக்களுக்கு பெரும் துயர் நிகழ்ந்துள்ள இந்த நேரத்தில் பேராசிரியரின் இழப்பு, நமக்கு மேலும் வேதனையைத் தருகிறது. பேராசிரியருக்கு அஞ்சலி செலுத்துவதோடு அவரது இழப்பால் துயருற்ற குடும்பத்தினர் அனைவருக்கும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.


கார்த்திகேசு சிவத்தம்பி மரணம்: மார்க்சிஸ்ட் இரங்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தியில்,

இடதுசாரி சிந்தனையாளரும், முற்போக்கு தமிழறிஞரும், தலைசிறந்த இலக்கிய விமர்சகருமான கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி (79) இலங்கை யாழ்ப்பாணத்தில் ஜூலை 6 ஆம் தேதி காலமானார். கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அஞ்சலி செலுத்துகிறது.


கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் தமிழ் இலக்கிய வெளியில் மார்க்சிய நோக்கில் ஆய்வுகளை மேற்கொண்டவர். தனது ஆய்வுக் கட்டுரைகளின் மூலமாக பழந்தமிழ் இலக்கிய உருவாக்கத்தில் உழைப்பாளி வர்க்கத்தின் பங்களிப்பை வெளிக் கொணர்ந்தவர். உலகப் புகழ்பெற்ற மார்க்சிய அறிஞர் ஜார்ஜ் தாம்சனின் மாணவராவார். உலக அளவிலான தமிழியல் ஆய்வுகளின் முன்னோடியாகத் திகழ்ந்தவர். நவீன தமிழ் இலக்கியமும், தமிழ் சினிமாவும் பயணிப்பதற்கான முற்போக்கு திசைவழியை அமைத்துக் கொடுத்தவர். 70க்கும் மேற்பட்ட புத்தகங்களும், 200க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளும் தமிழ் இலக்கியத்திற்கும், இடதுசாரி இயக்கத்திற்கும் அருங்கொடைகளாகும். அவரின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு பேரிழப்பாகும்.


தமிழ் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்கு தமிழ்நாடு அரசு திரு.வி.க.விருது வழங்கி கவுரவித்தது. சென்னைப்பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களுக்கு பேராசிரியராக சென்று வந்துள்ளார்.


அவரது மறைவால் துயருற்றுள்ள அவரது துணைவியார் மற்றும் குடும்பத்தினருக்கும், தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.


இவ்வாறு ஜி. ராமகிருஷ்ணன் தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

Sunday, July 3, 2011

நெஞ்சில் கொஞ்சம் நெருப்பு! - ப.திருமாவேலன்





ஒற்றைக் கொலைக்காக ஊரையே எரித்து, நீதிக்காக உயிர்விட்ட கண்ணகி சிலைக்கு முன்னால்... ஒரு லட்சம் பேரின் கொலைகளுக்காக மெழுகுத் தீ ஏந்தி மெரினா கடற்கரையில் கூடி நின்றார்கள் தமிழர்கள்!

ஒரே முழக்கம், ''இந்தியாவே... ஐ.நா-வில் ராஜபக்ஷேவின் போர்க் குற்றத்தை மறைக்காதே!'' என்பதுதான்!

''கடல் நீர் ஏன் உப்பாக இருக்கிறது தெரியுமா தம்பி! கடல் கடந்து வாழும் தமிழர்களின் கண்ணீரால்!'' என்று சொன்ன அண்ணா சமாதி அருகில் இருக்க... ''விடுதலைப் புலிகள் அமைப்பை ஆரம்பித்ததே எம்ஜி.ஆர்-தான்'' என்று ஜெயவர்த்தனாவால் 'பெருமிதம்’ செய்யப்பட்ட எம்.ஜி.ஆர். நினைவகம் பக்கத்தில் இருக்க... உலகத்துக்கு அறம் பாடிய திருவள்ளுவன் முதல் ஏகாதிபத்தியங்களை நோக்கிப் படை நடத்திய நேதாஜி வரைக்கும் சிலைகளாக நிற்க... கடந்த 26-ம் தேதி மாலை மெரினாவில் ஏந்திய மெழுகுவத்தி நினைவேந்தல் நிகழ்ச்சி, தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் வித்தியாசமானது.

கட்சிக்காகவோ, சாதிக்காகவோ, மதத்தின் பேராலோ கூடுவதுதான் தமிழகத்தின் வேதனையான வாடிக்கையாக இருந்தது. ஆனால், தலைவர்கள் அறிவிக்காமல்... தமிழர்கள் வந்தார்கள். கட்சிகள் சார்பில் அறிவிப்பு இல்லாமல்... கனத்த இதயங்களுடன் கூடினார்கள். ''சாதி, மத, கட்சி வேறுபாடு இல்லாமல் இந்த நினைவேந்தல் நிகழ்வதால், கட்சி, சங்கக் கொடிகளுடன் வருவதைத் தவிர்க்கவும். தனி நபர் முழக்கங்களைத் தவிர்க்கவும்'' என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த வரையறையை மீறாமல், 'தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வு தமிழ் ஈழத் தாயகம் மட்டுமே’ என்று ஒரே கோஷம் உயர்ந்தது.

'மே 17 இயக்கம்’ என்ற அமைப்பை திருமுருகன் என்ற இளைஞர் தனது நண்பர்களோடு சேர்ந்து ஆரம்பித்தார். ஈழத்தில் நடந்த கொடுமைகளை, தமிழர்கள் அனைவர் மனதிலும் விதைப்பதன் மூலமாக உலக சமுதாயத்தின் கவனத்தை ஈர்க்க முடியும் என்பதுதான் நோக்கம். இந்த சிறு அமைப்பினர்தான் மெரினா கடற்கரையில் கூடி நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்கள். எஸ்.எம்.எஸ், இ-மெயில், ஃபேஸ்புக், ட்விட்டர் என்று தகவல் அலைகளைப் பரப்பினார்கள்.

கண்ணகி சிலைக்கு முன்னால் இப்படி ஒரு நிகழ்வை நடத்தப்போகிறோம் என்றதுமே போலீஸ் முதலில் தலையை ஆட்டி மறுத்தது. ''மும்பையில், டெல்லியில், இதுமாதிரியான இரங்கல் நிகழ்ச்சிக்கு அனுமதி தருகிறார்களே?'' என்று இந்த அமைப்பினர் கேட்டதும், ''தமிழ்நாட்டில் அனுமதி கிடையாது'' என்று போலீஸ் பதில் தந்தது. 'ஜூன் 26 ஐ.நா. அமைப்பு அறிவித்துள்ள, சித்ரவதைகளுக்கு எதிரான தினம். அதை அனுசரிக்க அனுமதி இல்லையா? சம்மதம் இல்லை என்றால், அதை எழுத்துபூர்வமாகக் கொடுங்கள்’ என்று இந்த அமைப்பினர் சொல்ல... அப்போதுதான் இறங்கி வந்தது போலீஸ். ஐ.நா. சபையின் தீர்மானத்தின்படி சித்ரவதைகளால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச ஆதரவு தினம் ஆண்டு தோறும் ஜூன் 26-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அந்த நாளை 'மே 17’ இயக்கத்தினர் ஈழத்துக்கானதாக மாற்றிக்கொண்டனர்.

ஈழத்தில் நடந்ததை வெறும் சித்ரவதை என்றா சொல்ல முடியும்? ஓர் இனத்தையே சிதைத்த வதை அது!

''ஈழத்தில் நடந்ததைப் போர்க் குற்றம், மனித உரிமை மீறல் என்ற வார்த்தைகளோடு அடக்க விரும்பவில்லை. அங்கு நடந்தது விடுதலைப் போராட்டம் என்பதை உலகம் ஒப்புக்கொள்ள வேண்டும். நாம் ஈழத்தில் நடந்ததை போர்க் குற்றம் என்பதோடு குறுக்கிவிடக் கூடாது'' என்று சொல்லும் திருமுருகன், ''இந்த நிகழ்வு குறித்து ஐ.நா. அமைப்புக்கும் சென்னையில் உள்ள அனைத்து நாடுகளின் தூதரகங்களுக்கும் செய்தி கொடுத்தோம். 'இலங்கை சம்பந்தமாக நடக்கும் எந்த நிகழ்வுக்கும் நீங்கள் செல்லக் கூடாது’ என்று மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளதாக ஐ.நா. அலுவலர் ஒருவர் எங்களிடம் சொன்னார். அஞ்சலி செலுத்துவதற்குக்கூட தமிழன் அருகதை இல்லாமல் போய்விட்டானா?'' என்று கேட்கிறார்.

தமிழ் மண்ணில் ஈரம் பட்டுப்போய்விடவில்லை என்பதையும், உண்மையான முழக்கமாக இருக்குமானால் அடையாளம் தெரியாதவர் அழைத்தால்கூட வருவோம் என்பதையும் ஜூன் 26 சொல்கிறது. அதைவிட முக்கியமானது, ஞாயிற்றுக் கிழமை மாலை வேளையில் காற்று வாங்க வந்த மற்றவர்களும்கூட, தத்தம் நெஞ்சில் கொஞ்சம் நெருப்பு வாங்கிப் போனதுதான்!

இந்த நாட்டை வழிநடாத்துவதற்கு தேசியத் தலைவர் பிரபாகரன்தான் வரவேண்டும் - யாழ்.நீதிபதி கருத்து!



இந்த நாட்டை வழிநடாத்தி கொண்டு செல்வதற்கு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்தான் வரவேண்டும் என யாழ்பாணத்தில் கடமையாற்றும் நீதிபதி ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார். இன்றை யாழ்பாணத்தின் சீர்கெட்ட நிலவரங்கள் தொடர்பாக குறித்த நீதிபதியுடன் கதைத்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்...

தமிழீழ நிழல் அரசினை நிறுவி எவ்வாறு கட்டுக் கோப்புடன் நடாத்திவந்தார் என்பது தற்போது கட்டுப்பாட்டை இழந்து மிகவேகமாக சிதைந்துவரும் தமிழர் பகுதிகள் சுட்டிக்காட்டி நிற்கின்றன.

வன்னியில் சிங்களப்படைகள் முன்னெடுத்த இராணுவ பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் தமிழீழ நடைமுறை அரசினை சிறப்புடன் முன்னெடுத்த விதமும் காவல்துறை நீதித்துறையினை கையாண்ட திறணும் வியக்க வைப்பதாக தெரிவித்த அவர் தற்போதைய யாழ்பாணத்தை எம்மால் எதுவும் செய்யமுடியவில்லை எனும் போதுதான் வன்னியில் போர் சூழல் இறுக்கமாக நிலவிவந்த காலகட்டங்களில் எல்லாம் காவல் மற்றும் நீதித் துறைகளை சிறப்பாக கையாண்டு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி அரசாண்டவிதம் பிரமிப்பூட்டுவதாக இருப்பதாக தெரிவித்தார்.

தற்போதைய கலாச்சார சீர்கேடுகள் சமூகச்சிதைவுகள் கொலைக் கலாச்சாரங்கள் என்பன மிக வேகமாக யாழ்பாணம் உள்ளிட்ட தமிழர் தாயகப்பகுதியில் அதிகரித்து வருகின்ற நிலையில் அதனை தற்போது நடைமுறையில் உள்ள சட்டதிட்டங்களாலோ சிறிலங்கா அரச நிர்வாகத்தினாலோ தடுத்துநிறுத்த முடியாது எனவும் மீண்டும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் வந்தால்தான் சீர்படுத்த முடியும் என்று உறுதிபடத் தெரிவித்தார்.

வன்னியில் இருந்து கொண்டு தமிழீழ நடைமுறை அரசை முன்னெடுத்து வந்திருந்தாலும் யாழ்பாணம் உள்ளிட்ட தமிழர் தாயகப்பகுதிகள் அனைத்திலும் தலைவர் பிரபாகரன் அவர்களுடைய ஆளுகையின் வீச்சு இருந்தது. ஆனால் முன்னர் அது யாராலும் இனம்காணப்படாது இருந்துவந்தது. தற்போதுதான் தெரிகிறது தலைவர் பிரபாகரன் அவர்களது ஆற்றலின் வலிமை.



இவ்வாறு நீதியினை வழங்கும் உயர்பீடத்தில் இருப்பவர்கள் முதல் சாதாரண குடிசைவாசிகள் வரை தலைவர் பிரபாகரன் அவர்களது வரவினை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டுள்ளனர். அடிபட்டு நொந்துபோய் எல்லாவற்றையும் இழந்த பின்பும் தேசத்தின் இன்றைய இழிநிலை கண்டு மனம்பொறுக்காத மாணம் உணர்வுள்ளவர்களது புலம்பல் இதுவாகத்தான் இருக்கின்றது...

"...என்னதான் இருந்தாலும் பெடியள்(புலிகள்) இருக்கேக்கை உந்தச் சேட்டையள் எல்லாம் இல்லாமல் தான் இருந்தது... செல்லடிச்சாலும் கிபிரடிச்சாலும் எங்கட மண்ணிலை சுதந்திரமா நாங்கள் இருந்த வாழ்க்கை சொர்க்கம் தான்.. திரும்பவும் பெடியள்(புலிகள்) வந்தால்தான் எல்லாத்திற்கும் ஒரு முடிவுகிடைக்கும்.. இந்த அக்கரமங்களை எல்லாம் போக்கி தமிழனை தலைநிமிர வைக்க தலைவர் ஒருவராலதான் முடியும்."