Sunday, February 6, 2011
நாடு கடந்த தமிழீழ அரசு புலிகளுக்கு எதிரானதா…? – பேராசிரியர் சரஸ்வதி பரபரப்பு பேட்டி

இலங்கைத் தமிழர் பிரச்னையில் ‘நாடு கடந்த தமிழீழ அரசு’ என்ற ஓர் அறிவிப்பை வெளியிட்டு இருந்தார் ருத்ரகுமாரன். இந்த அரசின் பிரதமரும் அவர்தான். இதில் ஏற்பட்ட குழப்பங்கள் இன்னும் குறையாமல் இருக்க, தங்கள் அரசின் இந்தியாவின் எம்.பி.க்களாக நாடு கடந்த தமிழீழ அரசு 5 பேரைத் தேர்ந்தெடுக்க உள்ளது. அதில் முதல் எம்.பி.யாக அறிவிக்கப்பட இருப்பவர் பேராசிரியை சரஸ்வதி. இவர் ஏற்கெனவே தமிழீழப் பிரச்னைக்காக, 14 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து பரபரப்பை ஏற்படு த்தியவர்.
ஜெயலலிதா நேரடியாக அறிக்கை விட்ட பிறகுதான் அந்த உண்ணாவிரத போராட்டத்தைக் கைவிட்டார் சரஸ்வதி. எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட சரஸ்வதியை நேரில் சந்தித்துப் பேசினோம்.
‘‘ஒரு மிகப் பெரிய இனம் இன்று முற்றிலும் அழிக்கப்பட்டிருக்கிறது. ராணுவ ரீதியாக ஒடுக்கப்பட்டதன் மூலம் தமிழீழத்தின் கோரிக்கையை விட்டுவிடுவார்கள் என்று இலங்கை அரசு நினைத்திருக்கலாம்
ராணுவ ரீதியான போராட்டத்தில் பின்னடைவுதான் ஏற்பட்டிருக்கிறது. ஆகவே தான் நாடு கடந்த தமிழீழ அரசு என்ற அமைப்பின் மூலம் தமிழீழத்திற்கான முக்கியத்து வத்தை உலக நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் மூலம் கொண்டு செல்ல முடிவெடுத்து இருக்கிறோம்.
85 நாடுகளில் தேர்தல் மூலமாக நாடு கடந்த தமிழீழ அரசின் எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தியாவில் தேர்தல் நடத்த முடியாத சூழல் இருப்பதால் நேரடியாக என்னை எம்.பி.யாக தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.
அதேபோல், பலரும் இந்த அமைப்பை விடுதலைப் புலிகளுக்கு எதிரான அமைப்பு என்று கூறி வருகின்றனர். உலக அளவில் அரசியல் ரீதியான ஒரு கட்டமைப்பு தமிழீழத்திற்குத் தேவை என்று சொன்ன தலைவர் பிரபாகரனின் கருத்திற்கேற்பவே இந்த அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.
வருகிற 4-ம் தேதி இலங்கையின் சுதந்திர தினம் என்பதால் நாடு கடந்த தமிழீழ அரசின் எம்.பி.க்களின் அறிவிப்பை அந்தந்த நாடுகளில் வெளியிட்டு தமிழீழத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் கருத்தரங்கம் மற்றும் மாநாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது.
சென்னையிலும் நாடு கடந்த தமிழீழ அரசு தோழமை மையம் சார்பாக கருத்தரங்கு நடைபெற இருக்கிறது.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நாடு கடந்த தமிழீழ அரசின் அரசியல் ரீதியான கருத்துகளை தமிழீழத்தின் முக்கியத்துவத்தை மக்களிடத்தில் பிரசாரமாக செய்ய இருக்கிறோம். தமிழகம்மட்டுமில்லாமல் இந்தியாவில்உள்ள மற்ற மாநிலங்களிலும் இந்தக் கருத்தைப் பரப்ப முடிவு செய்துள்ளோம்.
தமிழீழத்தின் அவசியத்தை இதுவரையில் உலக நாடுகள் பெரிதும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. நாடு கடந்த தமிழீழ அரசின் அரசியல் கருத்தை அனைத்து நாடுகளிலும் பரப்பி தமிழீழத்தின் முக்கியத்துவத்தை அந்த நாடுகள் ஏற்கும் வகையில் எங்களின் செயல்பாடுகள் இருக்கும்’’ என்று முடித்துக்கொண்டார் பேராசிரியை சரஸ்வதி.
படம்: ஞானமணி
ப.ரஜினிகாந்த்
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்
இந்தியாவில் நாடு கடந்த தமிழ் ஈழ அரசு! நியமன எம்.பி. பேராசிரியர் சரசுவதி!

இலங்கை மண்ணில் விடுதலைப் புலிகள் ராணுவரீதியில் முற்றிலுமாகத்தோற்கடிக்கப்பட்ட பின்னரும், ‘புலிகள் ஆபத்து’ என அலறுகிறது சிங்கள அரசு. அதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று, ‘நாடு கடந்த தமிழ் ஈழ அரசு’!
அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய, ஆஸ்திரேலிய நாடுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டுள்ள இந்த அமைப்பு, இந்தியாவிலும் செயல்படும் என கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கான இந்தியாவின் முதல் எம்.பி-யாக மனித உரிமை ஆர்வலரான பேராசிரியர் சரசுவதி நியமிக்கப்பட இருப்பதாகத் தகவல்.
மனித உரிமைகளுக்கான அமைப்புகளில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தீவிரமாகச் செயல்படும் இவர், ஈழத் தமிழர் படுகொலை உச்சகட்டத்தில் நிகழ்ந்த நேரத்தில், அதைத் தடுக்கக் கோரி 13 நாள்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தார். உயிருக்குப் போராடும் அளவுக்கு உடல்நிலை மோசமாகி, கட்டாய சிகிச்சையில் உயிர் மீண்டவர். இவருடன் பல்வேறு தமிழின அமைப்புகளும் இணைந்து, ‘நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் தோழமை மையம்’ என்ற புதிய இயக்கத்தைத் தொடங்கி உள்ளனர்.
சரசுவதியைச் சந்தித்துப் பேசினோம்.
”நாடு கடந்த தமிழ் ஈழ அரசில் உங்களுடைய செயல்பாடு என்னவாக இருக்கும்?”
”ஈழ விடுதலைக்கான ராணுவப் போராட்டம், தற்காலிகப் பின்னடைவு அடைந்த நிலையில்… தமிழீழ லட்சியத்துக்காக, உலக அளவில் அரசியல் ரீதியில் செயல்பட ‘நாடு கடந்த தமிழ் ஈழ அரசு’ உருவாக்கப்பட்டது. ஈழத் தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் பல நாடுகளில் பகிரங்கமாகத் தேர்தல் நடத்தி, இதன் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர். அந்தந்த நாடுகளின் அரசுகள் ஒப்புதல் இல்லாமல் இது சாத்தியம் இல்லையே! நாங்களும், தமிழ் ஈழம் அமைவதற்கு ஆதரவாக ஜனநாயகரீதியில் குரல் கொடுப்பதற்காகவே, நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கான தோழமை மையத்தைத் தொடங்கி உள்ளோம். இதில், பெரியார் தி.க., தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், சேவ் தமிழ், மே 17 இயக்கம் உள்பட 20 அமைப்புகள் இடம்பெற்றுள்ளன. கவிஞர் இன்குலாப், டி.எஸ்.எஸ்.மணி போன்ற செயற்பாட்டாளர்களும் இணைந்து செயல்பட முன்வந்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு ஆதரவு சக்திகளுடன் இணைந்து கருத்துப் பரப்பல் செய்வதுதான் எங்களின் வேலை.”
”இந்தியாவில் விடுதலைப் புலிகளுக்குத் தடை இருக்கும் நிலையில் உங்களின் ஈழ ஆதரவு செயல்பாடுகளுக்குப் பிரச்னை வராதா?”
”ஈழத்தில் இனப் படுகொலையால், உறவுகளை இழந்து நொறுங்கிக்கிடக்கும் மக்கள் அன்றாட வாழ்க்கை நடத்துவதே பெரும்பாடாக இருக்கிறது. மூன்று வேளை உணவு கிடைக்காமல், வசிப்பதற்கு வீடு இல்லாமல், ஊனமடைந்து, சிகிச்சை பெற முடியாமல் நம் சகோதரர்கள் பெரும் துயரத்தில் இருக்கிறார்கள். இந்த நிலையில் ஈழத்தை அடைவதற்கான முயற்சியில் புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்குத்தான் கடமை இருக்கிறது.
நாடே இல்லாமல் இருந்த யூதர்கள், பல நாடுகளில் பரவியிருந்தும் தங்களுக்காக இஸ்ரேல் என்ற தனி நாட்டை எப்படி உருவாக்கினார்களோ, அந்த வழியில்தான் நாடு கடந்த தமிழ் ஈழ அரசும் செயல்படுகிறது. சூடான் நாட்டில் இருந்து அண்மையில் வாக்கெடுப்பு நடத்திப் பிரிந்துள்ள தெற்கு சூடான் அரசு, நாடு கடந்த தமிழ் ஈழ அரசை அங்கீகாரம் செய்துள்ளது. இது உலக அளவில் கிடைத்த முதல் வெற்றி. படிப்படியாக ஈழத்துக்கான நியாயத்தை உலகம் ஏற்றுக்கொள்ளச் செய்வதுதான் எங்கள் பணி.
இந்தியாவில் தமிழ் ஈழ அரசை ஆதரித்துப் பேசுவதும் அதற்கான நியாயங்களை மக்களிடம் எடுத்துச்செல்வதும் முழுக்கவும் ஜனநாயகச் செயல்பாடுதான். இது எந்த வகையிலும் இந்தியாவின் இறையாண்மைக்கோ, சட்ட திட்டங்களுக்கோ எதிரானது அல்ல. சொல்லப்போனால், அரசியல் அமைப்பு வழங்கியுள்ள அடிப்படையான பேச்சுரிமை, கருத்துரிமை, அரசியல் உரிமைப்படி இது சரியானதே.”
”ஈழம் பெறுவது ஒரு புறம்… இலங்கை ராணுவத் தாக்குதலால் கண், கை, கால் இழந்து கதறும் ஈழத் தமிழர்களுக்கு, இப்போது நாடு கடந்த தமிழ் ஈழ அரசால் எப்படி உதவ முடியும் என நினைக்கிறீர்கள்?”
”இதைக் கவனத்தில்கொண்டுதான் புலம் பெயர் தமிழ் மக்கள், அரசியல் உரிமைகளுக்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர் செயல்பாடுகள் மூலம் சர்வதேச அளவில் நெருக்கடி தருவதன் மூலம், அடிப்படை மனிதாபிமான உதவிகளைச் செய்யவைக்க இலங்கை அரசை நிர்பந்தம் செய்ய முடியும். மேலும், உடனடியாக, அகதிகளுக்கான பொருளாதார, கல்வி மேம்பாடு போன்ற உதவிகளைச் செய்யவும் நாடு கடந்த அரசு திட்டமிட்டுள்ளது.”
”இலங்கை அரசுடன் சேர்ந்துவிட்டதாகக் கருதப்படும் கே.பி-யின் நீர்டோ அமைப்பினரும் நாடு கடந்த தமிழ் ஈழ அரசில் பிரதிநிதிகளாக இருப்பது முரண்பாடாக இருக்கிறதே?”
”நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் உருவாக்கத்தில் கே.பி-யின் பங்கு இருந்தது உண்மைதான். அவர் கைது செய்யப்பட்ட பிறகு, அவருடன் எந்தத் தொடர்பும் இல்லை என நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் சார்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. எனவே, அரசின் பிடிக்குள் போய்விட்ட கே.பி. போன்ற தனி மனிதர்களைப்பற்றிப் பெரிதாகப் பேசவேண்டியது இல்லை. மற்றபடி யாராக இருந்தாலும் செயல்பாட்டைவைத்தே அவர்களைப்பற்றி தீர்மானிக்க முடியும். என்னைப் பொறுத்த வரை, தமிழீழத்தை நோக்கிய அரசியல் முயற்சிகளை வெற்றி பெறவைப்பதில் கவனம் செலுத்துவதுதான் உணர்வாளர்களின் இப்போதைய கடமையாக இருக்க முடியும் என நினைக்கிறேன்!”
- இரா. தமிழ்க்கனல்
படம்: வி.செந்தில்குமார்
நன்றி: ஜூனியர் விகடன்
Friday, February 4, 2011
அடித்தவன் தூங்குவான் அடிப்பட்டவன் தூங்கமாட்டான் - சீறும் இயக்குநர்.கௌதமன்

தமிழ்: ஈழத்தின் மீது உங்களுக்கு தாக்கம் ஏற்பட்டது எப்போது?
கௌ : அப்பா ஒரு கம்யூனிசவாதி என்பதால் நான் சிறுவயதாக இருந்தபோதே எங்கள் வீட்டு திண்ணையில் ஈழத்தை பற்றி பலதரப்பட்ட விவாதங்கள் நடைபெறும்.அதனால் பள்ளி பருவங்களில் இருந்தே ஈழத்தின் மீது எனக்கு தாக்கமிருந்தது.
தமிழ்: ஈழத்தின் கடந்த கால நிகழ்வுகள் ஓர் உணர்வாளனாகஇபடைப்பாளியாக உங்களுக்குள்
என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
கௌ : எல்லாம் சிதைந்து உலகமே நின்று வேடிக்கை பார்த்து உலக வல்லரசுகள் பல ஒன்று சேர்ந்து மொத்தமும் அழித்து முடித்து சொல்ல முடியாத துயரை தந்துள்ளது. ஈழ மக்களின் சிதைவை மீண்டும் நினைத்தாலும்இஎங்காவது பேசினாலும் என் மனநிலையை பாதிக்கிறது ஆனாலும் ஒரு நொடி சுதாரித்து வந்துவிட்டால் மனதளவில் என்னுள் பெரும் நம்பிக்கையுண்டு.தமிழன் என்கிறவன் ஆதிகாலம் தொட்டு இந்த மண்ணில் ஆளுமை செலுத்திய இனம்இமனிதனாக இருந்துள்ளான்.வட இந்தியரான அம்பேத்கரே சொல்லியுள்ளார் தமிழன் தான் இந்தியா முழுதும் இருந்துள்ளதாகஇஇன்னும் பல ஆராய்ச்சிகளில் பார்ப்போமேயானால் ஈழம் தான் ஆதித்தமிழன் தோன்றிய இடமாக சொல்லப்படுகிறது.மண்ணையும்இமானத்தையும் காப்பதற்கு குடும்பம் குடும்பமாக சென்று போரிட்டு வீரமரணம் அடைந்தயிடம் ஈழம்."அடித்தவன் தூங்குவான்இஅடிபட்டவன் தூங்கமாட்டான்"அந்த வகையில் மனதளவில் உடைந்திருந்தாலும் என் படைப்பின் மூலம் இனவிடுதலைக்காக ஏதேனும் செய்தே தீருவேன்.
தமிழ் : திரைப்பட படைப்பு துறை கலைஞர் குடும்பத்திடம் மட்டும் உள்ளது உண்மையா?
கௌ : உண்மையாக சொல்லப்போனால் அப்படியான ஆளுமையே நடந்து கொண்டுயிருக்கிறது.எல்லோரும் வாழணும்இஇதுவே ஒரு மன்னன் மக்களை பார்த்து வழிநடத்தி செல்லக்கூடிய செயல். அதுபோன்று கலைஞர்
குடும்பத்தை மட்டுமில்லாமல்
பொதுபடையாக சிந்தித்து எல்லோரும் சமம் என்று நினைக்க வேண்டும்.
தமிழ் : இந்திய அரசு சாமன்ய மக்களுக்குரியதாக உள்ளதா?
கௌ : சாமன்ய மக்களுக்கு உரியதா என்பதை விட என் மொழிக்கும் இனத்திற்கும் சாதகமாகயில்லை என்பது உண்மையான விசயம்.இந்தியா என் தாய்நாடுஇஇந்தியர் யாவரும் என் உடன்பிறப்புக்கள் என் தாய்திருநாட்டை உளமாற நேசிக்கிறேன் என்று பள்ளி பருவங்களில் உறுதிமொழி எடுத்துக் கொண்ட தமிழன் நான்.ஆகா தற்போது ஆள்கின்ற காங்கிரசு அரசு என் இனத்தை காப்பாற்றுவதற்கு மாறா அழிப்பதற்கு துணை நின்றிருக்கிறது.
தமிழ் : ஈழத்தை போலவே இந்தியாவின் பிற பகுதிகளிலும் இதுபோன்ற
கொடுமைகள் நடந்து கொண்டுள்ளது அதைபற்றி பேசுவீர்களா?
கௌ : மனிதர்கள் எங்கு சிதைந்தாலும் குரல்கொடுக்க வேண்டியது மனிதனின் கடமை.அந்த வகையில் இந்துஇமுசுலீம்இசீக்கியர் யாரை கொடுமை படுத்தினாலும் மனிதனாக வேடிக்கை பார்க்ககூடாது.என்னை பொறுத்தவரை அடிப்பவனை விட அடிக்கிறவனை வேடிக்கை பார்ப்பதே மிகப்பெரிய வன்முறையாகும்.அதன் அடிப்படையில் ஓர் அரசு தன் மக்களை பிள்ளையாக பார்க்க வேண்டும்இஅதைவிட்டு விட்டு தொல்லையாக நினைத்து மக்களை அழிக்க கூடாது.
தமிழ் : கடந்த நாடாளமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு எதிராக அ.தி.மு.க. வுக்கு ஆதரவாக நீங்கள் சீமான் போன்றோர் பேசினீர்கள். அதன்படி கடந்தயாண்டு சீமான் அவர்கள் தமிழர் உரிமைகளை தாங்கி நாம் தமிழர் கட்சியினை தொடங்கியுள்ளார்இஅதைபற்றிய கருத்து.
கௌ : அ.தி.மு.க. வுக்கு ஆதரவாக நான் பேசவில்லை என் இனத்தை அழித்த எதிரியை அடையாளம் காட்டுவதற்கே நான் போனது.ஈழத்திற்காக என் இனத்திற்காக என் மொழிக்காக யார் குரல் கொடுத்தாலும் அவர் பக்கம் நிற்பேன்இஅதற்காக அந்தக் கட்சியில் இணைந்து கொள்ளமாட்டேன்இமற்றபடி சீமான் அண்ணன் எனக்கோர் உயிர் நண்பர்இபிடித்தமான தமிழர்.
தமிழ் : அப்பொழுது உங்கள் வாழ்வில் ஏற்றுக்கொண்ட தலைவன் யார்?
கௌ : நான் தலைவனாக ஏற்றுகொண்டது என் அண்ணன் பிரபாகரனை மட்டுமேஇதலைவன் என்பதற்கான ஒழுக்கமும்இநேர்மையும் கொண்டு வழிய வழிய வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருக்கிற ஒரே மனிதர் பிரபாகரன் மட்டும் தான்.
தமிழ்: வரும் சட்டமன்ற தேர்தலில் உங்களின் ஆதரவு யார் பக்கமிருக்கும்.
கௌ : என்னுடைய ஆதரவு யார் பக்கமும் இல்லை.நான் அரசியல்வாதியுமில்லஇஎன் பின்னாடி ஒரு கூட்டமுமில்ல என்னை உணர்வாளனாக காட்டியது சந்தனக்காடுஇமகிழ்ச்சி.அந்த படைப்புகளால் தான் தமிழ் நெஞ்சங்களில் இடம்பிடித்தேன்.ஈழத்திற்கு உண்மையாக யார் குரல் கொடுக்கிறார்களோஇபேசுகிறார்களோ அவர்களுக்கு உறுதுணையாகயிருப்பேன்.அது எந்தக்கட்சியாக இருந்தாலும் சரிஇஓர் படைப்பாளியாகஇதமிழனாக குரல் கொடுப்பேன்.
தமிழ்: பாசிசவாதிகள் சிங்களராகயிருந்தாலும் தமிழர்களையே சொல்கிறார்கள் அது ஏன்?
கௌ : விடுதலை புலிகள் இது வரை ஒரு பொது மக்களையோஇசிங்கள பத்திரிக்கையாளர்களையோ கொன்றதாக பதிவில்லை.ஆனால் இதற்கு நேர்மறையாக இருந்தவர்கள் சிங்களர்கள்.இந்த பழிச் சொற்களுக்கெல்லாம்
துரோகிகளே காரணம்.ஈழத்தில் கருணா போன்றே உலகெங்கும் பல கருணாக்கள் பணத்திற்காக இனத்தை விலைபேசியதே தமிழன் பாசிசவாதி என்று முத்திரை குத்தப்படக் காரணம்.
தமிழ்: “சந்தனக்காடு" என்ற வரலாற்று தொடரின்
வெற்றியாக எதை கருதுகிறீர்கள்.
கௌ : தொடரின் முழு ஒளிபரப்பு முடிந்த பின்னர் ஒரு நாள் சீமான் அண்ணன் அந்த முழுத்தொடரின் இறுவெட்டையும் தயார் செய்ய சொன்னார்.பின்னர்இ
மொத்த தொடரையும் மூன்றே நாளில் என் அண்ணன் பிரபாகரன் பார்த்துவிட்டு வீரப்பன் பற்றிய தகவல்களை துல்லியமாகஇஅற்புதமாக பதிவு செய்துள்ளார் கௌதமன் என்று என் தாய்க்கு நிகராக உள்ள அண்ணன் பிரபாகரன் பாராட்டிஇஈழத்தை பற்றிய வரலாற்று நிகழ்வை பதிவு செய்ய தம்பியை கூப்பிடணும் என்று சொல்லியதே ஆசுகார் விருதை விட மிகப்பெரிய விருதாக எண்ணுகிறேன்.
தமிழ்: வீரப்பன் அவர்களின் மனைவிஇகுழந்தைகளின் நிலையென்ன?
கௌ : வீரப்பனின் மனைவி தற்போது கர்நாடக சிறையில் உள்ளார்.அவர் ஒரு பாவப்பட்ட பெண்னென்று தான் சொல்லணும்.இது கர்நாடகாவின் பழி வாங்கும் செயல்இஎல்லை காத்த வீரனின் மனைவியை காப்பாற்ற தமிழர்கள் நாம் முயற்சி செய்யணும்.
குழந்தைகள் படித்து கொண்டுள்ளனர்.
நன்றி !வணக்கம்...
நேர்காணல் : மகா.தமிழ்ப் பிரபாகரன்
04 Feb 2011
தினத்தந்தி கக்கும் நஞ்சு!

தமிழ்த் தேசியத் தந்தை, அய்யா ஆதித்தனாரின் பேரால் இயங்கும் "தினத்தந்தி" யின் மீது சிறிது உறவுப்பாசத்துடனே பலரும் இருந்து வருகின்றோம். அதன் தரம் என்ன என்பதில் இவர்கள் பலரும் அக்கறைக் காட்டாமல், பார்ப்பன ஊடகங்களை விமர்சிப்பது போல் இதனை விமர்சிப்பதுமில்லை.
இந்நிலையில், தினத்தந்தி தலையங்கத்தில் மௌனமாக ஒரு விசத்தைக் கலந்துள்ளனர்.
ஈழத் தமிழ் அகதிகள் குறித்தான அந்தக் கட்டுரையை இணைத்துள்ளேன்.
பிரபாகரன் இறந்து விட்டார் என்பதும், இலங்கையில் அமைதி நிலவுவதாகவும் அங்கு செல்லும் தமிழகத்திலிருக்கும் அகதிகள் உரிமையுடன் வாழ்வார் என்பதும்தான் அந்த செய்தி.
கூடவே தற்போது அகதிகள் வரத்து குறைவாக இருக்கின்றது என்பதும் இவர்களின் கவலையாகவும், அவர்கள் வரும் போது வாஞ்சையுடன் அரவாநித்தது போலவும் சித்தரித்துள்ளது.
நமக்கெதிரான கருத்துகளுக்கும் செயல்களுக்கும் உடனடியாக வினையாற்ற வேண்டியது இன்றியமையாக் கடைமையாகும். உடன் நமது கண்டனத்தை தினத்தந்திக்கு தெரிவியுங்கள்.
Subscribe to:
Comments (Atom)
















