Labels

Thursday, February 24, 2011

சிங்கள வெறியின் உச்ச கட்டம் - பார்வதி அம்மையாரின் அஸ்தியை நாசப்படுத்திய கேவலம்



தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மா ளின் அஸ்தி நேற்று முன் தினம் (22.02.2011)இரவு அடையா ளம் தெரியாத சிலரால் மிகவும் கேவலமான முறையில் நாசமாக்கப் பட்டுள்ளது. அவரை எரியூட்டிய இடத்தில் மூன்று நாய்களை சுட்டுப் போட்டதுடன், அவரது அஸ்தியையும் தாறுமாறாக அள்ளி வீசியுள்ளனர்.

இது குறித்து இலங்கை தமிழ் இணையதளங்கள் வெளியிட்டுள்ளதாவது:
நேற்று முன் தினம் (22.02.2011)மாலை பார்வ தியம்மாளின் உடல் இறுதிமரியாதை நிகழ் வுக்குப் பின்னர் ஊரணி மயானத்தில் எரியூட்டப் பட்டது. இரவு 7 மணிக்குப் பின்னர் அங்கு கூடியிருந்த மக் கள் கலைந்து சென்றனர்.

நேற்று (23.02.2011)காலை மயானத்துக்குச் சென்று அஸ்தியை சேகரிக்க முயன்ற போது அங்கு அஸ்திகள் தாறுமாறாக வீசப்பட்டிருந்தது தெரிந்தது. மேலும் பார்வதியம்மாள் உடல் எரிக்கப்பட்ட இடத்தில் மூன்று நாய்கள் சுடப் பட்டு அரைகுறையாக எரிக்கப்பட்ட நிலையில் அவரது அஸ்தியுடன் போடப்பட்டு இருந்தது.

சிங்களப் படைகளே இந்த கேவலமான செய லில் ஈடுபட்டிருக்கலாம் என அந்தப் பகுதியினர் அச்சத்துடன் தெரிவித் தனர். நேற்று மாலை மயானத்திற்கு வந்த சிலர் பார்வதியம்மாளின் இறுதிநிகழ்வுகளை நடத்தியவர்கள் யார்? என சிங்களத்தில் மிரட் டும் தொனியில் விசாரித் ததாகவும் கூறினர்.

Wednesday, February 23, 2011

திருமாவளவனுக்கு இலங்கையில் அனுமதி மறுப்பு: சத்யராஜ் கண்டனம்



பார்வதி அம்மாளின் உடலுக்கு அஞ்சலி செலுத்த திருமாவளவனுக்கு இலங்கையில் அனுமதி அளிக்காததற்கு நடிகர் சத்யராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.


நடிகர் சத்யராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் மரணம் அடைந்ததற்காக, உலக தமிழர்களுடன் சேர்ந்து நானும் வருத்தப்பட்டேன். பார்வதி அம்மாளின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிப்பதற்காக, சென்னை தியாகராயநகரில் உள்ள ஒரு பள்ளியில் பழ.நெடுமாறன், வைகோ ஆகிய இருவரின் தலைமையில் இரங்கல் கூட்டம் நடந்தது. அங்கு சென்று நான் அஞ்சலி செலுத்தினேன்.

பார்வதி அம்மாளின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்துவதற்காக, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இலங்கைக்கு செல்ல இருந்தார். அதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி மறுத்து இருக்கிறது.

இதற்காக, என் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

இதில் இருந்து இலங்கையில் தமிழர்களுக்கு சுதந்திரம் வழங்கப்படவில்லை என்று தெரிகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் நடிகர் சத்யராஜ் கூறியிருக்கிறார்.

உலக தமிழர்களின் கண்ணீர் அஞ்சலியுடன் வீரத்தாய் பார்வதி அம்மாவின் உடல் தகனம் செய்யப்பட்டது













தமிழீழ தேசிய தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்களின் தாயாரும் ஈழத்தாயுமான பார்வதி அம்மாவின் பூதவுடல் 22.02.2011 அன்று மாலை 4.50க்கு சிதைமூட்டப்பட்டது, அமரர் வேலுப்பிள்ளையின் ஒன்று விட்ட சகோதரர் சங்கரநாரயணன் சிதைக்குத் தீ மூட்டினார். இந் நிகழ்வில் உள்ளுர், தமிழக அரசியல்வாதிகள் இரங்கல் உரையுடன் சிங்கள இனவெறி அரசின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இறுதி நிகழ்வு நடைப்பெற்றது.

ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்ட வீரத்தையின் பூதவுடல் தேசியத் தலைவரின் வல்வெட்டித்துறை வீட்டுக்கு முன்னால் பத்து நிமிடங்கள் வைக்கப்பட்டிருந்ததாகத் செய்திகள் தெரிவிக்கின்றன.

குவித்து வைக்கப்பட்டிருந்த இராணுவத்தினரையும் பொருட்படுத்தாது மக்கள் வீரத்தையின் இறுதி காரியத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

தமிழகத்திலிருந்து பழ. நெடுமாறன், வைகோ, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோரின் இரங்கல் உரைகள் தொலைபேசி ஊடாக ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பப்பட்டன.

மேலும் சுரேஷ் பிரேமச்சந்திரன், விநோ நோகதரலிங்கம்,சிவசக்தி ஆனந்தன், பா. அரியநேத்திரன்,யோகேஸ்வரன்,ஸ்ரீதரன், சரவணபவன்,கஜேந்திரகுமார்,சிவாஜிலிங்கம்,ஸ்ரீகாந்தா உட்படப் பெரும் எண்ணிக்கையிலான உள்ளுர் தமிழ் அரசியல் பிரமுகர்கள் வீரத்தாயின் இறுதிக் காரியத்தில் கலந்து கொண்டதுடன் இரங்கல் உரைகளையும் நிகழ்த்தினர்.

இதேவேளை, இந்த இறுதி நிகழ்வைப் புகைப்படம் பிடித்துக் கொண்டிருந்த புகைப்படப்பிடிப்பாளர்கள் உட்பட பலரையும் இராணுவத்தினர் விசாரணைக்கு உட்படுத்தியதுடன் அவர்களைப் புகைப்படம் பிடித்ததுடன் அவர்களது அடையாள அட்டைகளையும் புகைப்படம் பிடித்தனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

வடமராட்சியின் அனைத்து வீதிகளிலும் செல்வோர் அனைவரும் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர் இந் நடவடிக்கையில் இராணுவத்தினரும் காவல்துறையினரும் ஈடுபட்டிருக்கின்றனர்.

நிகழ்வு நடைபெறும் இடத்திற்குச் செல்வோரை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் சோதனைகளுக்கு உட்படு்த்தியே அனுமதிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றனர்.

Tuesday, February 22, 2011

இலங்கையில் நடப்பது காட்டாட்சியா? - கி. வீரமணி அறிக்கை



விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் தாயாரின் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவனை விமான நிலையத்திலேயே தடுத்து, அனுமதி மறுத்து, வந்த விமானத்திலேயே அவரைத் திருப்பி அனுப்பிய இலங்கை அரசைக் கண்டித்தும், துக்கம் விசாரிக்கச் செல்லுவதற்கு அவருக்கு மீண்டும் அனுமதி பெற்றுத் தர வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் அவர்களின் அருமைத் தாயார் திருமதி பார்வதி அம்மாள் அவர்கள் இரண்டு நாள்களுக்குமுன் இலங்கை யாழ்ப்பாணத்தில் காலமானதையொட்டி, மனிதநேயத்துடன் அவர்களுக்கு இறுதிமரியாதை செலுத்த விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தோழர் திருமாவளவன் அவர்கள் நேற்றிரவு இலங்கைக்குப் புறப்பட்டுச் சென்று, அவர் விமான நிலையத்தில் இறங்கியபோது, அவருக்கு இலங்கைச் சிங்கள இராஜபக்சே அரசு உள்ளே செல்ல அனுமதி மறுத்து, அவரை வந்த விமானத்திலேயே திரும்பிச் செல்லுமாறு பிடிவாதம் காட்டி, சிங்கள அரசின்அதிகாரிகள் அவரை சென்னை திரும்பும்படிச் செய்துவிட்ட கொடுமையைக் கேட்டு உணர்ச்சியும், மனிதநேயமும் உள்ள நமது நெஞ்சங்கள் குமுறுகின்றன.

தோழர் தொல். திருமாவளவன் அவர்கள் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தின் தலைவர் மட்டுமல்ல; இந்திய நாடாளுமன்றத்தின் உறுப்பினரும்கூட (எம்.பி.).

இலங்கையில் நடப்பது காட்டாட்சியா?

ஏற்கெனவே இந்திய அரசு அனுப்பிய தூதுக் குழுவில் சென்று, இராசபக்சேவிடமே நேரில் விவாதித்துத் திரும்பிய குழுவினரில் ஒருவர் - அவரை ஒரு இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளக் கூடாது என்று திருப்பி அனுப்புவது பச்சை பாசிசப் போக்கு அல்லவா? காரணத்தைக் கூறுங்கள் என்று பல முறை அவர் வற்புறுத்தி அதிகாரிகளிடம் வாதாடியும் பலனில்லை.

அவர் அரசியல் நிகழ்வுக்குப் போகவில்லை; துக்க நிகழ்ச்சி - மரண வீட்டுக்குச் செல்வதுகூட கூடாது என்றால், அங்கு காட்டாட்சியா நடக்கிறது?

மத்திய அரசு பரிகாரம் தேட வேண்டும்

இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி வேறுபாடு இன்றி இலங்கை அரசின் போக்குக்குக் கண்டனம் தெரிவிக்க முன்வர வேண்டும்.

தனிப்பட்ட தொல். திருமாவளவனுக்கு ஏற்பட்ட அவமானமோ, பின்னடைவோ அல்ல இது. இந்தியப் பேரரசுக்கு ஏற்பட்ட அவமானம் என்ற நிலைப்பாட்டுடன், கொதிப்புடன் மத்திய அரசின் வெளியுறவுத் துறை இதனை எண்ணிப் பரிகாரம் தேட வேண்டும்.

மீண்டும் அனுமதி தேவை!

ஏற்கெனவே பிரபாகரனின் தந்தையார் திரு. வேலுப்பிள்ளை அவர்கள் மறைந்தபோது செல்ல அனுமதித்துவிட்டு, இப்போது மட்டும் மறுப்பதேன்? தமிழக மீனவர்களை இலங்கை அரசு காக்கை குருவிகளைப் போல சுட்டுக் கொல்லுவது, சிறைப்பிடிப்பது, மத்திய அரசு தலையிடுவது, பிறகு விடுதலை எனும் நாடகம் நடத்துவது - ஒரு வாடிக்கையான வேடிக்கைக் கூத்தாகி விட்டது!

மத்திய அரசு இதுகுறித்து இலங்கைத் தூதரிடம் பேசித் தனது கண்டனத்தைத் தெரிவிப்பதும், மீண்டும் அவருக்கு அனுமதி வழங்கி துக்கம் விசாரிக்க உதவுவதும் அதன் முக்கியக் கடமையாகக் கருத வேண்டும் என்று வற்புறுத்துகிறோம்.

கி. வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சிங்களப்படையினரின் போர்க்குற்றம் குறித்த அய்.நா. அறிக்கை : ஓரிரு நாளில் தாக்கல்



இலங்கை போரின் போது சிங்களப்படை யினர் நிகழ்த்திய போர்க் குற்றங்கள் தொடர்பான அய்.நா. குழுவினரின் விசாரணை அறிக்கை ஓரிரு நாள்களில் அய்.நா. தலைமைச் செயலாளர் பான் கி மூனிடம் தாக் கல் செய்யப்பட உள் ளது. இந்த அறிக்கையின் நகல் ஒன்று இலங்கை அரசிடம் வழங்கப் பட்டு, அதன் அடிப் படையில் மேற்கொள் ளும் படி கேட்டுக் கொள்ளப்படும் என்று அய்.நா. தலைமைச் செயலாளர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித் தன.

அய்.நா. போர்க்குற்ற விசாரணைக் குழுவின் பதவிக் காலம் டிசம்பர் மாதமே முடிவடைய இருந்த நிலையில், இலங்கைக்குச் சென்று போர்க்குற்றம் குறித்து விசாரிப்பதற்காக அதன் பதவியின் காலம் மேலும் 2 மாதங்களுக்கு நீட் டிக்கப்பட்டது.

எனி னும், பல்வேறு காரணங் களால் அய்.நா. போர்க் குற்ற விசாரணை நடத்த வில்லை. மாறாக இலங்கை அரசால் அமைக்கப்பட்ட விசா ரணைக் குழுவிடமும், இலங்கை அரசிடமும் பல்வேறு வினாக்கள் அடங்கிய பட்டியலை அளித்த அய்.நா. குழு வினர், அவற்றுக்கு விடையளிக்கும்படி கேட்டுக்கொண்டனர். அதை ஏற்றுக் கொண்ட இலங்கை அரசு, அய்.நா. குழு எழுப்பிய வினாக் களுக்கு அண்மையில் விடை அளித்திருந்தது.

அதன் அடிப்படை யில் போர்க்குற்ற விசா ரணை அறிக்கையை மார்சுகி தரூஸ் மென் தலைமையிலான அய்.நா. குழு தயாரித்து விட்டதாகவும், அடுத்த ஓரிரு நாள்களில் இக் குழுவினர் அய்.நா. பொதுச்செயலாளர் பான் கி மூனை சந்தித்து இந்த அறிக்கையை வழங்குவார்கள் என்றும் அய்.நா. வட்டாரங்கள் தெரிவித்தன.

போர்க் குற்ற விசாரணைக் குழு வின் பதவிக்காலம் வரும் 28ஆம் தேதியுடன் முடி வடைய இருப்பதால் அதற்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய் யப்பட்டுவிடும் என்று அந்த வட்டாரங்கள் கூறின.

விசாரணை அறிக்கையின் நகல் ஒன்று இலங்கை அர சுக்கு அனுப்பி வைக்கப் படும் என்றும், அதன் அடிப்படையில் போர்க் குற்றங்களில் ஈடுபட்ட வர்கள; மீது நடவ டிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்ளப் படும் என்றும் அய்.நா. வட்டாரங்கள் தெரிவித்தன. இலங் கைப் போரின்போது சிங்களப்படையினர் பல்வேறு போர்க்குற்றங் களை இழைத்தனர்.

அப்பாவி தமிழ் மக் களைக் கடத்தியும், பாலியல் வன்கொடுமை செய்தும் அவர்கள் கொடுமைப்படுத்தினர். பாதுகாப்பு வளையப் பகுதிகளில் தஞ்சம் புகுந்த தமிழ் மக்கள் மீதும், மருத்துவமனை களில் மருத்துவம் பெற்று வந்த தமிழ் மக்கள்மீதும் சிங்களப் படையினர் ஏவுகணை களை வீசிக் கொன்ற னர்.

இதற்கெல்லாம் மேலாக போரின் இறு திக்கட்டத்தில் சரண டைவதற்காக வெள்ளைக்கொடி ஏந்தி வந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் நடேசன், சமாதானப் பிரிவு செய லகத்தின் பொறுப்பாளர் புலித்தேவன் ஆகியோ ரையும் அவர்கள் இரக் கமின்றி படுகொலை செய்தனர்.

சிங்களப்படை யினரின் இத்தகைய போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்று அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்திய தையடுத்து மூன்று உறுப் பினர்கள் கொண்ட போர்க்குற்ற விசாரணைக் குழுவை அய்.நா.பொதுச் செயலாளர் பான் கி மூன் கடந்த ஆண்டு சூன் மாதம் அமைத்திருந்தார்.

இந்தோனேசிய நாட்டின் முன்னாள் தலைமை வழக்குரைஞர் மார்சுகி தரூஸ்மென், தென்னாப் பிரிக்க மனித உரிமைப் போராளி யாஸ்மின் சூகா, அமெரிக்காவைச் சேர்ந்த சட்டப்பேரா சிரியர் ஸ்டீவன் ரட்னர் ஆகியோர் இக்குழுவில் இடம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக் கது.

Monday, February 21, 2011

பார்வதியம்மாள் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள அனுமதி மறுப்பு : திருமாவளவன் ஆவேசம்







விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன் தாயார் பார்வதியம்மாள் இறுதிச்சடங்கு இன்று நடக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் இந்த இறுதிச்சடங்கில் கலந்துகொளவதற்காக இலங்கை சென்றார்.

விமானத்தில் சென்று கொழும்பில் இறங்கிய திருமாவளவனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
கொழும்பு சென்ற திருமாவளவனை அதே விமானத்தில் திருப்பி அனுப்பியது இலங்கை.


இது குறித்து ஆவேசமான திருமாவளவன், எம்.பி.யாகிய தன்னை திருப்பி அனுப்பியது இந்தியாவுக்கு அவமானம். இந்த அவமானத்தை போக்கும் வகையில் இலங்கை அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தவிருப்பதாக கூறியுள்ளார்.

கொலைவெறியன் ராஜபக்சே - திருமாவளவன் ஆவேசம் :

சிவப்புக் கம்பளம் விரிக்கும் இந்திய அரசை இராஜபக்சே ஓர் பொருட்டாகவே மதிப்பதில்லை! இந்திய, தமிழக அரசுகள் கடுமையாக எச்சரிக்க வேண்டும் என்று தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் தாயார் அன்னை பார்வதி அம்மாள் கடந்த 20Š02Š2011 அன்று அதிகாலையில் வல்வெட்டித் துறை பொது மருத்துவமனையில் காலமானார். அவரது உடல் இன்று (22Š.02.Š2011) மாலை நல்லடக்கம் செய்யப்படுகிறது.

அந்த இறுதி வணக்க நிகழ்வில் கலந்துகொண்டு விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் அஞ்சலி செலுத்துவதற்காக நேற்று (21Š.02Š.2011) நள்ளிரவு 12.30 மணியளவில் கட்சிப் பொறுப்பாளர்கள் வெற்றிச்செல்வன், இளஞ்சேகுவேரா ஆகியோருடன் கொழும்பு சென்றோம்.

கொழும்பு விமான நிலையத்தில் சிங்கள அரசின் குடிவரவுத் துறை அதிகாரிகள் எங்களை வழிமடக்கி, "இலங்கைக்குள் நுழைய உங்களுக்கு அனுமதியில்லை. இந்தியாவுக்குத் திரும்பிச் செல்லுங்கள்!'' என்று கூறினர்.

""நாங்கள் மேதகு பிரபாகரன் அவர்களின் தாயாரின் இறுதி வணக்க நிகழ்வில் கலந்துகொள்வதற்காகவே வந்திருக்கிறோம். வேறெதுவும் உள்நோக்கம் இல்லை. ஆகவே எங்களை அனுமதிக்க வேண்டும்'' என்று வாதாடினோம்.

"அவ்வாறு அனுமதிக்க இயலாது. நீங்கள் வந்த அதே விமானத்தில் திரும்பிச் செல்லுங்கள்'' என்று வற்புறுத்தினர். "நான் ஏற்கனவே பலமுறை இலங்கைக்கு வந்திருக்கிறேன். இந்திய நாடாளுமன்றக் குழுவிலும் ஓர் உறுப்பினராக வந்து போயிருக்கிறேன். நான் சமூக விரோதி அல்ல. இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற முறையில் எனக்கு மதிப்பளிக்காவிட்டாலும், இந்திய அரசுக்காவது நீங்கள் மதிப்பளிக்க வேண்டும்.


இது தனிப்பட்ட முறையில் எனக்கு ஏற்பட்ட அவமானம் என்பதைவிட இந்திய அரசுக்கும், இந்திய தேசத்திற்கும் இழைக்கும் பெரும் அவமதிப்பே ஆகும். இதை இந்திய நாடாளுமன்றத்தில் ஓர் உரிமைப் பிரச்சினையாக எழுப்புவேன்'' என்றும் எச்சரிக்கை விடுத்தேன்.

மேலும் என்னையும் என்னுடன் வந்தவர்களையும் எதற்காகத் திருப்பி அனுப்புகிறீர்கள் என்பது தொடர்பாக எழுத்துப்பூர்வமான அறிக்கையினை அளிக்க வேண்டும் என்று நான் வற்புறுத்தினேன். அவ்வாறு வழங்க இயலாது என்று மறுத்ததோடு எங்களை வலுக்கட்டாயப்படுத்தி அனுப்புவதிலேயே குறியாக இருந்தனர்.

மேதகு பிரபாகரன் அவர்களுக்கு மட்டுமின்றி இனமான உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனுக்கும் அன்னையாய் விளங்கும் பார்வதி அம்மாளுக்கு அஞ்சலி செலுத்துவதற்குக்கூட அனுமதிக்காத, ஈவிரக்கமில்லாத கொடுங்கோலன் இராஜபக்சேவையும் சிங்கள இனவெறி அரசையும் விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது.

அன்னை பார்வதி அம்மாள் இறப்பையொட்டி ஈழத்தில் கருப்புக்கொடிகள் ஏற்றக்கூடாது எனவும் ஆங்காங்கே அவரின் திருவுருப்படங்களை வைத்து அஞ்சலி செலுத்தக்கூடாது எனவும் சிங்கள இனவெறியன் இராஜபக்சேவின் இராணுவ கொடுநெறி அரசு கெடுபிடி செய்து வருகிறது.

அன்னை பார்வதி அம்மாளுக்கு தமது கண்ணீர் அஞ்சலியைச் செலுத்தத் துடிக்கும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்குக்கூட அஞ்சுகிற வகையில் இராஜபக்சேவின் இராணுவம் மக்களை அச்சுறுத்தி வருகிறது. கடுகளவும் கருணையில்லாத கொடூரன் இராஜபக்சேவின் இத்தகைய தமிழர் விரோதப் போக்கு எல்லையற்று நீண்டுகொண்டே போகிறது.

ஈழத்தமிழர்களுக்கு மட்டுமின்றி தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் இந்திய ஆட்சியாளர்களுக்கும் சவால் விடுகிற வகையில் இராஜபக்சேவின் அணுகுமுறைகள் தொடர்கின்றன. இலட்சக்கணக்கான மக்களைக் கொன்றுகுவித்த இனவெறிபிடித்த கொலைவெறியன் இராஜபக்சேவுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் இந்திய அரசை ஓர் பொருட்டாகவே மதிப்பதில்லை என்பது இந்திய நாடாளுமன்ற உறுப்பினரான என்னை திருப்பி அனுப்பியதிலிருந்தே அறியலாம்.

இந்நிலையில் இந்திய, தமிழக அரசுகள் இராஜபக்சே கும்பலைக் கடுமையாக எச்சரிக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது. மேலும் தமிழகத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகள் வற்புறுத்துகிறது.

நேரிலே அஞ்சலி செலுத்த முடியாவிட்டாலும் அன்னை பார்வதி அம்மாளுக்கு இலட்சோபலட்சக் கணக்கான விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் எமது செம்மாந்த வீரவணக்கத்தை தமிழகத்திலிருந்து செலுத்துகிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

சென்னையில் திருமாவளவன் கைது!:

திருமாவளவன் திருப்பியனுப்பப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் கண்டன ஆர்ப்பாட்டமும் இராஜபக்சே உருவபொம்மை எரிப்புப் போராட்டமும் நடத்தினர்.

இலங்கை அரசையும், அந்நாட்டின் அதிபர் ராஜபக்சேவையும் கண்டித்து அரியலூர் மாவட்டம் செந்துறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர்.

இச்செயலை கண்டித்து காஞ்சிபுரம் சிக்னல் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து பூண்டி ஒன்றியம் சீதஞ்சேரியில் அக்கட்சி தொண்டர்கள் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர். பின்னர் ராஜபக்சே உருவ பொம்மையை ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை தலைமை தாங்கினார்.கட்சி தொண்டர்கள் பெரும் திரளாக இதில் கலந்து கொண்டனர்.

இதேபோல கும்மிடிப்பூண்டி ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கும்மிடிப்பூண்டி பஸ் நிலையம் அருகே ஒன்றிய செயலாளர் ஜெமினி தலைமையில் இலங்கை அதிபர் ராஜபக்சே உருவபொம்மை தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில் நகரசெயலாளர், கண்ணியப்பன், பொருளாளர் தலீத்ஐயா, ஒன்றியதுணைச்செயலாளர் நேசக்குமார், சுப்பிரமணி உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் இன்று (22.02.2011) சென்னையில் இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு தொல்.திருமாவளவன் தலைமையேற்றார்.

முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட திருமாவளவன் உட்பட 300 பேர் கைது செய்யப்பட்டனர்.


இலங்கை அமைச்சரைக் கைது செய்ய வேண்டும்: ராமதாஸ்


விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன் தாயார் பார்வதியம்மாள் இறுதிச்சடங்கு இன்று நடக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் இந்த இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக இலங்கை சென்றார்.

விமானத்தில் சென்று கொழும்பில் இறங்கிய திருமாவளவனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கொழும்பு சென்ற திருமாவளவனை அதே விமானத்தில் திருப்பி அனுப்பியது இலங்கை.

இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’பார்வதி அம்மாளின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளக் கூடாது என விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவனை இலங்கை அரசு திருப்பி அனுப்பி இருக்கிறது.


திருமாவளவன் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் டிப்ளமேட்டிக் பாஸ்போர்ட் வைத்திருப்பவர். எந்த நாட்டிற்கும் எப்போது வேண்டுமானாலும் செல்ல இந்த பாஸ்போர்ட் அனுமதிக்கும். ஆனால் அவரை இலங்கை திருப்பி அனுப்பியது இந்திய அரசை அவமதித்த செயலாகும்.


சென்னை நீதிமன்றத்தால் கொலை வழக்கு ஒன்றில் தேடப்பட்ட குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை அமைச்சர் இந்தியாவுக்கு தாராளமாக வந்துசெல்கிறார்.


ஆனால் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரை இலங்கை திருப்பி அனுப்புகிறது. இது பெரும் அவமானம்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தேடப்பட்ட குற்றவாளி என அறிவிக்கப்பட்ட இலங்கை அமைச்சரை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்த சர்வதேச காவல்துறை மூலம் இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

பொதுமக்கள் அஞ்சலிக்காக தீருவில் மைதானத்தில் பார்வதி அம்மாள் உடல்



பார்வதி அம்மாளுக்கு அஞ்சலிகள் செலுத்துவதற்கு சிறீலங்கா இராணுவம் அச்சுறுத்தல்
விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள் யாழ்பாணம் வல்வெட்டித்துறையில் நேற்று (20.02.2011) காலை காலமானார்.


பார்வதி அம்மாளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளில் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. அஞ்சலிகள் செலுத்துவதை கூட சிங்கள இராணுவம் தடுத்து வருகிறது. ஆனால் அதனையும் மீறி தமிழ் மக்கள் தமது இறுதி வணக்கத்தை தெரிவித்து வருகின்றனர்.

யாழில் பல பகுதிகளில் கறுப்புக்கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. குறிப்பாக வடமராட்சி பகுதியில் பல வீடுகளிலும், பொது அமைப்புக்களின் அலுவலகங்களிலும் கறுப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.


தற்போது வல்வெட்டித்துறை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள பார்வதி அம்மாளின் உடல் தீருவில் மைதானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.


அங்கு தான் கேணல் கிட்டு, லெப். கேணல் புலேந்திரன், லெப். கேணல் குமரப்பா ஆகியோரின் நினைவு மண்டபம் கட்டப்பட்டிருந்தது. ஆனால் அது பின்னர் சிறீலங்கா இராணுவத்தினரால் அழிக்கப்பட்டுவிட்டது.


கடந்த வருடம் காலம்சென்ற தேசத்தின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் உடலும் அங்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

சோகத்தில் மூழ்கியுள்ளது யாழ்.குடாநாடு :

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளின் மறைவையடுத்து யாழ்.குடாநாடு சோகத்தில் மூழ்கியுள்ளது.

யாழ். குடாநாட்டில் போக்குவரத்து சேவைகள், மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது. யாழ்.நகரப் பகுதியில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்ட நிலையில் காணப்படுகிறது.


பார்வதி அம்மாளுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக வெளிநாடுகளில் இருந்தும், தமிழ் நாட்டிலிருந்தும் பல தமிழ் பிரமுகர்கள் வருகை தரவுள்ளதாக தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.