Labels

Monday, October 11, 2010

தமிழ் ஈழத்தில் மலர்ந்தது சிங்கள தேசம்! - விகடன்





மட்டக்களப்பு பன்குடா பகுதியைச் சேர்ந்த சீனித்தம்பி பத்மநாபனை, தமிழ் ஈழப்
பகுதியில் பெரும்பாலானவர்கள் அறிவார்கள். அந்தப் பகுதியில் மிக வசதியான குடும்பத்துக்காரர். தன்னுடைய செல்வத்தை எல்லாம் போராளிகளுக்கு உணவு தயாரித்துக் கொடுப்பதற்காகவே செலவு செய்தார். காட்டுப் பகுதியில் பதுங்கி இருக்கும் புலிகளுக்கு சாப்பாடு செய்து அனுப்பிவைப்பதுதான் அவரது வேலையாக இருந்தது. இந்திய ராணுவம் அங்கு இருந்தபோதும், அதே காரியத்தை சீனித்தம்பி செய்தார். அதைக் கண்டுபிடித்த ராணுவம், காலில் சுட்டு அவரைக் கைது செய்தது. ராணுவ முகாமில் சிறைவைக்கப்பட்ட நிலையில், அவர் இறந்துபோனார். உடலைக்கூட, அவரது குடும்பத்தினருக்குத் தர வில்லை!

அப்பாவுக்கு ஏற்பட்ட நிலையை, அவரது மகள் ஷகிலா உணர்ந்தார். உடனே, அவரும் நாட்டுக்காகப் போராட புலிகள் அமைப்புக்குள் இணைந்தார். புலிகளின் மிகப் பெரிய வெற்றியாகச் சொல்லப்படும் ஆனையிறவு சமரில் சித்திரா என்று பெயரிடப்பட்டு, இவர் களத்தில் இறங்கினார். அதில் சித்திராவுக்கு விலா எலும்பில் பலத்த காயம் ஏற்பட்டது. அதன் பிறகு, அவர் புலிகள் அமைப்பில் இருந்து விலகினார். அதே அமைப்பைச் சேந்த உருத்தி என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் இரண்டு பிள்ளைகள் பிறந்தனர். 2007 ஜூலையில் மேஜர் உருத்தி, சிங்கள ராணுவத்தால் கொலை செய்யப்பட்டார். அப்பா, கணவர் இருவரையும் நாட்டுக்காகக் கொடுத்த அந்தப் பெண், மாவீரர் குடும்பங்களுக்கு மாதம்தோறும் தரப்படும் தொகையை மட்டும் வாங்கி, தானும் உண்டு தனது குழந்தைகளையும் காப்பாற்றி வந்தார். அவரது உடலில் ஏற்பட்ட பாதிப்பு காலப்போக்கில் அதிகமாகி, அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே பிழைக்க முடியும் என்று சொன்னார்கள். அதற்கான செலவு ` 38 ஆயிரம் என்றும் சொல்லப்பட்டது.

அதற்காகப் பல இடங்களில் அலைந்தார். வெளிநாட்டில் இருக்கும் தனது உறவினர் மூலமாக அதை வாங்க முயற்சித்தார். அங்கே இருந்து பணத்தை அனுப்பிவைக்கும் சிரமத்தால், தொகை வந்து சேரவில்லை. சிகிச்சைக்கு வழி இல்லாமல், கடந்த 17-ம் தேதி சித்திரா செத்துப்போனார். அவரது இரண்டு பிள்ளைகளும் அநாதையாக நிற்கின்றன. இது தனிப்பட்ட ஒரு சித்திராவின் கதை அல்ல; ஓர் இனத்தின் கதை. ஒவ்வொரு குடும்பத்திலும் உழைக்க முடிந்தவர் அனைவரையும் போர் தின்று துப்ப... மற்றவர்கள் பிழைக்க வழி தெரியாமல் கிடப்பதுதான் இன்றைய ஈழத் தமிழனின் நிலை!

சொந்த தேசத்து மக்களை இப்படிச் சூன்யத்தில் தள்ளிவிட்ட இலங்கை அரசாங்கம், மகிழ்ச்சியாக இருக்கிறது. 'ஓர் இனத்தை அழிக்க வேண்டுமானால், அம்மக்களைக் கொல், அவர்கள் வாழும் மண்ணைக் கைப்பற்று' என்பதுதான் அரசியல் பாசிசத்தின் அரிச்சுவடி. இன்றைய ஈழத்தில் அதுதான் நடந்தது. இன்னும் ஒரே ஆண்டில், 'மலர்ந்தது சிங்கள தேசம்' என்ற அறிவிப்பை அவர்கள் செய்ய இருக்கிறார்கள். பயங்கவாதத்துக்கு எதிரான போர் என்று சொல்லி, விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது போர் தொடுக்கப்பட்டது. அந்த அமைப்பை முழுமையாக ஒழித்துவிட்டோம் என்று கடந்த ஆண்டு மே மாதம் அறிவித்தார்கள். அதற்குப் பிறகாவது வடக்கு, கிழக்கு, யாழ்ப்பாணம் பகுதி வாழ் தமிழ் மக்களை நிம்மதியாக வைத்திருக்கலாம். ஆனால், அதைச் செய்யவில்லை. அதாவது, அங்கே நடந்துகொண்டு இருப்பது பயங்கரவாதத்துக்கு எதிரான போர் அல்ல; ஓர் இனத்துக்கு எதிரான போர் என்பதால்தான், ஈழத் தமிழர்களை இன்னும் சிறுகச் சிறுகச் சித்ரவதை செய்து கொன்று தீர்த்து வருகிறார்கள் என்றே அங்கே இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. "தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில், 55 சதவிகிதத்துக்கு மேல் சிங்களவர்களைக் குடியமர்த்த வேண்டும். அடுத்த தேர்தலில் இந்தப் பகுதிகளில் சிங்கள எம்.பி-க்களே அதிகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும்" என்ற முடிவோடு, இந்தக் காரியங்கள் செய்யப்படுகின்றன.

"வடக்கு மாகாணத்தில் சிங்களவர்கள்தான் முன்னர் பெருமளவில் வாழ்ந்தார்கள். பின்னர், அவர் கள் தமிழர்களால் விரட்டி அடிக்கப்பட்டார்கள். சிங்களவர் விரும்பினால், மீண்டும் வடக்குப் பகுதிக் குப் போய் வாழலாம்" என்று பகிரங்கமாக அறிவித்து உள்ளார் ஜனாதிபதி மகிந்தா ராஜபக்ஷே. "வட கிழக்கின் பாதுகாப்பு கருதி, அங்கு நிரந்தர ராணுவ முகாம்களும் படைத் தளங்களும் அமைக்கப்படும். அதில் பணிபுரியும் ராணுவத்தினர் தங்கி வாழ, அந்தப் பிரதேசத்தில் ராணுவக் குடியிருப்புகள் அமைக்கப்படும்" என்று ராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூர்ய அறிவித்தார். இப்போது வடக்கில் மட்டும் ஒரு லட்சம் ராணுவ வீரர்கள் உள்ளனர். அதையட்டி, ஒரு லட்சம் குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன. இவர்கள் அனைவருக்கும் போர் வெற்றிக்குத் துணை புரிந்ததற்காக நிலங்கள் கொடுக் கப்பட உள்ளன. பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரால், சிங்கள நிறுவனங்களுக்கு பல நூறு ஏக்கர் நிலங்கள் தாரை வார்க்கப்படுகின்றன. கடலோரப் பகுதி அனைத்தும் சுற்றுலாத்தலங்களாக மாற்றப்பட்டு, பீச் ரிசார்ட்ஸ் அமைக்க சிங்கள நிறுவனங்கள் உள்ளே நுழைந்துவிட்டன. மாவட்ட நிர்வாகத்தைக் கவனிக்க, அனைத்து இடங்களிலும் சிங்களவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளார்கள். ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் இதை மேற்பார்வை செய்கிறார்கள். மாவட்டக் காணி அதிகாரிகளாக நியமிக்கப்படும் சிங்கள அலுவலர்கள், ஏதாவது ஒரு திட்டத்தின் பெயரை எழுதி, நிலங்களைத் தாரை வார்க்கும் வேலையை நித்தமும் பார்த்து வருகிறார்கள். இன்னும் ஆறு மாதங்களில் தமிழர் நிலங்கள் அனைத் தும் கபளீகரம் செய்யப்பட்டு இருக்கும். இங்கு ஒரு சென்ட் நிலத்துக்கு போலிப் பத்திரம் வைத்திருந்தால், 20 ஆண்டுகளுக்கு வழக்கு நடக்கும். ஆனால், அங்கு ஓர் இனம் வாழ்ந்த நிலப் பகுதியே வேறு பெயர்களுக்கு பட்டப் பகலில் பட்டா மாற்றம் செய்யப்பட்டு வருகிறது!

60 ஆண்டுகளுக்கு முன்னால் திரிகோணமலையை தமிழர் தாயகத்தின் தலைநகர் என்றே பிரகடனம் செய்தார்கள். இதைத் தொடர்ந்தே, அந்தப் பகுதியில் சிங்களவர்களை அதிகமாகக் குடியேற்ற பல்வேறு திட்டங்களைப் போட்டார்கள். 1.3 சதவிகிதமாக இருந்த சிங்கள மக்கள்தொகை, கடந்த ஆண்டு 30 சதவிகிதம் ஆனது. 81.76 சதவிகிதமாக இருந்த தமிழர் தொகை, 23.5 சதவிகிதமாக சுருங்கிப்போனது. இன்று திரிகோணமலையை, தமிழர் பிரதேசமாகவே சொல்ல முடியாது. இதே நிலைமையை மட்டக்களப்பும் அம்பாறையும் நெருங்கிக்கொண்டு இருக்கின்றன. முல்லைத் தீவும் கிளிநொச்சியும் அதே கதியை அடையப்போகின்றன. தமிழர்களின் வீடுகள் இருந்த இடங்கள் இடிக்கப்பட்டு நிலங்களாகவும், நிலமாக இருந்த பகுதிகள் வீடு கட்டும் இடங்களாகவும் வழங்கப்படுகின்றன. தன்னுடைய இடம், வீட்டைச் சட்டரீதியாக யாரும் இனி திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பே இல்லை.


மட்டக்களப்பு பன்குடா பகுதியைச் சேர்ந்த சீனித்தம்பி பத்மநாபனை, தமிழ் ஈழப்


பகுதியில் பெரும்பாலானவர்கள் அறிவார்கள். அந்தப் பகுதியில் மிக வசதியான குடும்பத்துக்காரர். தன்னுடைய செல்வத்தை எல்லாம் போராளிகளுக்கு உணவு தயாரித்துக் கொடுப்பதற்காகவே செலவு செய்தார். காட்டுப் பகுதியில் பதுங்கி இருக்கும் புலிகளுக்கு சாப்பாடு செய்து அனுப்பிவைப்பதுதான் அவரது வேலையாக இருந்தது. இந்திய ராணுவம் அங்கு இருந்தபோதும், அதே காரியத்தை சீனித்தம்பி செய்தார். அதைக் கண்டுபிடித்த ராணுவம், காலில் சுட்டு அவரைக் கைது செய்தது. ராணுவ முகாமில் சிறைவைக்கப்பட்ட நிலையில், அவர் இறந்துபோனார். உடலைக்கூட, அவரது குடும்பத்தினருக்குத் தர வில்லை!

அப்பாவுக்கு ஏற்பட்ட நிலையை, அவரது மகள் ஷகிலா உணர்ந்தார். உடனே, அவரும் நாட்டுக்காகப் போராட புலிகள் அமைப்புக்குள் இணைந்தார். புலிகளின் மிகப் பெரிய வெற்றியாகச் சொல்லப்படும் ஆனையிறவு சமரில் சித்திரா என்று பெயரிடப்பட்டு, இவர் களத்தில் இறங்கினார். அதில் சித்திராவுக்கு விலா எலும்பில் பலத்த காயம் ஏற்பட்டது. அதன் பிறகு, அவர் புலிகள் அமைப்பில் இருந்து விலகினார். அதே அமைப்பைச் சேந்த உருத்தி என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் இரண்டு பிள்ளைகள் பிறந்தனர். 2007 ஜூலையில் மேஜர் உருத்தி, சிங்கள ராணுவத்தால் கொலை செய்யப்பட்டார். அப்பா, கணவர் இருவரையும் நாட்டுக்காகக் கொடுத்த அந்தப் பெண், மாவீரர் குடும்பங்களுக்கு மாதம்தோறும் தரப்படும் தொகையை மட்டும் வாங்கி, தானும் உண்டு தனது குழந்தைகளையும் காப்பாற்றி வந்தார். அவரது உடலில் ஏற்பட்ட பாதிப்பு காலப்போக்கில் அதிகமாகி, அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே பிழைக்க முடியும் என்று சொன்னார்கள். அதற்கான செலவு ` 38 ஆயிரம் என்றும் சொல்லப்பட்டது.



அதற்காகப் பல இடங்களில் அலைந்தார். வெளிநாட்டில் இருக்கும் தனது உறவினர் மூலமாக அதை வாங்க முயற்சித்தார். அங்கே இருந்து பணத்தை அனுப்பிவைக்கும் சிரமத்தால், தொகை வந்து சேரவில்லை. சிகிச்சைக்கு வழி இல்லாமல், கடந்த 17-ம் தேதி சித்திரா செத்துப்போனார். அவரது இரண்டு பிள்ளைகளும் அநாதையாக நிற்கின்றன. இது தனிப்பட்ட ஒரு சித்திராவின் கதை அல்ல; ஓர் இனத்தின் கதை. ஒவ்வொரு குடும்பத்திலும் உழைக்க முடிந்தவர் அனைவரையும் போர் தின்று துப்ப... மற்றவர்கள் பிழைக்க வழி தெரியாமல் கிடப்பதுதான் இன்றைய ஈழத் தமிழனின் நிலை!

சொந்த தேசத்து மக்களை இப்படிச் சூன்யத்தில் தள்ளிவிட்ட இலங்கை அரசாங்கம், மகிழ்ச்சியாக இருக்கிறது. 'ஓர் இனத்தை அழிக்க வேண்டுமானால், அம்மக்களைக் கொல், அவர்கள் வாழும் மண்ணைக் கைப்பற்று' என்பதுதான் அரசியல் பாசிசத்தின் அரிச்சுவடி. இன்றைய ஈழத்தில் அதுதான் நடந்தது. இன்னும் ஒரே ஆண்டில், 'மலர்ந்தது சிங்கள தேசம்' என்ற அறிவிப்பை அவர்கள் செய்ய இருக்கிறார்கள். பயங்கவாதத்துக்கு எதிரான போர் என்று சொல்லி, விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது போர் தொடுக்கப்பட்டது. அந்த அமைப்பை முழுமையாக ஒழித்துவிட்டோம் என்று கடந்த ஆண்டு மே மாதம் அறிவித்தார்கள். அதற்குப் பிறகாவது வடக்கு, கிழக்கு, யாழ்ப்பாணம் பகுதி வாழ் தமிழ் மக்களை நிம்மதியாக வைத்திருக்கலாம். ஆனால், அதைச் செய்யவில்லை. அதாவது, அங்கே நடந்துகொண்டு இருப்பது பயங்கரவாதத்துக்கு எதிரான போர் அல்ல; ஓர் இனத்துக்கு எதிரான போர் என்பதால்தான், ஈழத் தமிழர்களை இன்னும் சிறுகச் சிறுகச் சித்ரவதை செய்து கொன்று தீர்த்து வருகிறார்கள் என்றே அங்கே இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. "தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில், 55 சதவிகிதத்துக்கு மேல் சிங்களவர்களைக் குடியமர்த்த வேண்டும். அடுத்த தேர்தலில் இந்தப் பகுதிகளில் சிங்கள எம்.பி-க்களே அதிகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும்" என்ற முடிவோடு, இந்தக் காரியங்கள் செய்யப்படுகின்றன.

"வடக்கு மாகாணத்தில் சிங்களவர்கள்தான் முன்னர் பெருமளவில் வாழ்ந்தார்கள். பின்னர், அவர் கள் தமிழர்களால் விரட்டி அடிக்கப்பட்டார்கள். சிங்களவர் விரும்பினால், மீண்டும் வடக்குப் பகுதிக் குப் போய் வாழலாம்" என்று பகிரங்கமாக அறிவித்து உள்ளார் ஜனாதிபதி மகிந்தா ராஜபக்ஷே. "வட கிழக்கின் பாதுகாப்பு கருதி, அங்கு நிரந்தர ராணுவ முகாம்களும் படைத் தளங்களும் அமைக்கப்படும். அதில் பணிபுரியும் ராணுவத்தினர் தங்கி வாழ, அந்தப் பிரதேசத்தில் ராணுவக் குடியிருப்புகள் அமைக்கப்படும்" என்று ராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூர்ய அறிவித்தார். இப்போது வடக்கில் மட்டும் ஒரு லட்சம் ராணுவ வீரர்கள் உள்ளனர். அதையட்டி, ஒரு லட்சம் குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன. இவர்கள் அனைவருக்கும் போர் வெற்றிக்குத் துணை புரிந்ததற்காக நிலங்கள் கொடுக் கப்பட உள்ளன. பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரால், சிங்கள நிறுவனங்களுக்கு பல நூறு ஏக்கர் நிலங்கள் தாரை வார்க்கப்படுகின்றன. கடலோரப் பகுதி அனைத்தும் சுற்றுலாத்தலங்களாக மாற்றப்பட்டு, பீச் ரிசார்ட்ஸ் அமைக்க சிங்கள நிறுவனங்கள் உள்ளே நுழைந்துவிட்டன. மாவட்ட நிர்வாகத்தைக் கவனிக்க, அனைத்து இடங்களிலும் சிங்களவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளார்கள். ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் இதை மேற்பார்வை செய்கிறார்கள். மாவட்டக் காணி அதிகாரிகளாக நியமிக்கப்படும் சிங்கள அலுவலர்கள், ஏதாவது ஒரு திட்டத்தின் பெயரை எழுதி, நிலங்களைத் தாரை வார்க்கும் வேலையை நித்தமும் பார்த்து வருகிறார்கள். இன்னும் ஆறு மாதங்களில் தமிழர் நிலங்கள் அனைத் தும் கபளீகரம் செய்யப்பட்டு இருக்கும். இங்கு ஒரு சென்ட் நிலத்துக்கு போலிப் பத்திரம் வைத்திருந்தால், 20 ஆண்டுகளுக்கு வழக்கு நடக்கும். ஆனால், அங்கு ஓர் இனம் வாழ்ந்த நிலப் பகுதியே வேறு பெயர்களுக்கு பட்டப் பகலில் பட்டா மாற்றம் செய்யப்பட்டு வருகிறது!

60 ஆண்டுகளுக்கு முன்னால் திரிகோணமலையை தமிழர் தாயகத்தின் தலைநகர் என்றே பிரகடனம் செய்தார்கள். இதைத் தொடர்ந்தே, அந்தப் பகுதியில் சிங்களவர்களை அதிகமாகக் குடியேற்ற பல்வேறு திட்டங்களைப் போட்டார்கள். 1.3 சதவிகிதமாக இருந்த சிங்கள மக்கள்தொகை, கடந்த ஆண்டு 30 சதவிகிதம் ஆனது. 81.76 சதவிகிதமாக இருந்த தமிழர் தொகை, 23.5 சதவிகிதமாக சுருங்கிப்போனது. இன்று திரிகோணமலையை, தமிழர் பிரதேசமாகவே சொல்ல முடியாது. இதே நிலைமையை மட்டக்களப்பும் அம்பாறையும் நெருங்கிக்கொண்டு இருக்கின்றன. முல்லைத் தீவும் கிளிநொச்சியும் அதே கதியை அடையப்போகின்றன. தமிழர்களின் வீடுகள் இருந்த இடங்கள் இடிக்கப்பட்டு நிலங்களாகவும், நிலமாக இருந்த பகுதிகள் வீடு கட்டும் இடங்களாகவும் வழங்கப்படுகின்றன. தன்னுடைய இடம், வீட்டைச் சட்டரீதியாக யாரும் இனி திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பே இல்லை.



"இலங்கைத் தீவின் எந்த இடத்திலும் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழக் கூடாது என்பதற்கு ஏற்ப மகிந்தா அரசு மறைமுகத் திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்கள் இருந்தால், தமிழ் மக்கள் தமது பாரம்பரியத் தாயகம், அதற்கான சுயநிர்ணய உரிமை, தன்னாட்சி கோருவார்கள். அதனை இல்லாமல் செய்வதற்கான நடவடிக்கையே இது!" என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தம் சொல்கிறார்.

இதைத் தமிழர்கள் மட்டும் சொல்லவில்லை. அந்த நாட்டின் மிக முக்கியப் பத்திரிகையான சண்டே லீடர் (கொலை செய்யப்பட்ட லசந்தாவின் பத்திரிகை!) 'மகிந்தாவின் சிங்களக் குடியேற்றம்' என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டது. 'தமிழர்கள் அதிகம் வாழும் முறிகண்டியில் 12 ஆயிரம் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டு இருக்கிறார்கள். இது மீண்டும் ஓர் இனக் கலவரத்தை ஏற்படுத்துவதற்கான திட்டம்' என்று சொல்கிறது அந்தப் பத்திரிகை. இந்த முறிகண்டி பிள்ளையார் கோயிலுக்கு அருகில் வேண்டும் என்றே புத்த விகார் நிறுவப்பட்டது. நில உரிமையாளர் புத்த விகார் அமைக்கக் கூடாது என்று நீதிமன்றம் போய் தடை வாங்கி இருக்கிறார். ஆனால், வட கிழக்கு மாகாணத்தின் அனைத்துப் பகுதிகளிலும் புத்த விகார்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. 'யாழ்ப்பாணத்தில் அரச மரங்கள் இருக்கும் இடங்களில் எல்லாம் புத்தர் சிலைகளை வைக்கிறார்கள்' என்று சொல்கிறார் ஒரு பத்திரிகையாளர்.

மன அழுத்தம் போக்கவும் நம்பிக்கையை ஏற்படுத்தவும், புத்த பிட்சுக்கள், தமிழர் பகுதியில் மனநல வகுப்புகளை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். 'இது தமிழர்களை மதம் மாற்றும் முயற்சி' என்று இந்து அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. பௌத்தர் கள் கொண்டாடும் பொசன் பண்டிகை, வெசாக் பண்டிகைக் கொண்டாட்டங்கள்தான் தமிழர் பகுதிகளில் அதிகமாக நடக்கின்றன. கிளி நொச்சியில் நடந்த பொசன் பண்டிகையை ராணுவத் தளபதி ஊறுஊ ராஜகுரு தலைமை தாங்கி நடத்தினார்!

சகல இடங்களிலும் உயர் அதிகாரிகளாக சிங்களர்கள் நியமிக்கப்படுகிறார்கள் என்பதைவிட, பள்ளிக்கூடங்களில் சிங்கள ஆசிரியர்களே அதிகமாக வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள். இவர்களிடம் பேசுவதற்காக சிங்களம் படித்தாக வேண்டிய நெருக் கடி அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. காலப்போக்கில் சிங்கள வழிக் கல்வியைக் கொண்டுவரவும், தமிழ்க் கல்வியை முற்றிலுமாகத் தடைபோடுவதற்கும் இது வழிவகுக்கும். முல்லைத் தீவு, அளம்பில், செம்மலை, வட்டுக்கால், முள்ளிவாய்க்கால், மாத்தளம், சாலை ஆகிய தமிழ்ப் பகுதிகள் அனைத்திலும் சிங்கள மீனவர்களே மீன் பிடிக்கிறார்கள். தமிழ் மீனவர்களுக் குப் படகும் இல்லை. வலையும் இல்லை. இருந்தும், மீன் பிடிக்கச் சென்றால், அவர்களைக் கடல்பகுதிக்கு ராணுவம் விடுவது இல்லை. இப்படி தமிழன் மொத்த மாக தண்ணீர் தேசத்தில் தத்தளிக்கிறான். "சண்டை நேரத்துல செத்திருந்தா, நிம்மதியாப் போயிருக்கும்!" என்றே ஒவ்வொரு தமிழனும் ஒப்பாரிவைக்கிறான். சமாதியில் போய் உட்கார்ந்துகொண்டு சாவை அழைப்பதுபோலவே அவர்களது வாழ்க்கை.

இருக்கட்டும், நமக்குத்தான் 'எந்திரன்' ரிலீஸ் ஆகிவிட்டதே!

- ப.திருமாவேலன்
நன்றி : ஆனந்த விகடன்

Tuesday, October 5, 2010

சரத்பொன்சேகா-கைதி எண்.0/22032


இலங்கை ராணுவ தளபதியாக இருந்து, விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் வெற்றிக்கு வழி வகுத்தவர், சரத் பொன்சேகா. போர் முடிவடைந்தவுடன், ராஜபக்சேவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், ராணுவ பதவியில் இருந்து விலகி, அரசியலில் குதித்தார்.

அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பின்னர், கைது செய்யப்பட்டு, கடற்படை தலைமையகத்தில் உள்ள தடுப்பு காவல் மையத்தில் அடைக்கப்பட்டார்.

அவருக்கு எதிராக ராணுவ கோர்ட்டில் 2 வழக்குகள் தொடரப்பட்டன. ராணுவத்துக்கு ஆயுத கொள்முதல் செய்ததில் ஊழல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு 3 ஆண்டுகள்வரை ஜெயில் தண்டனை விதிக்க ராணுவ கோர்ட்டு கடந்த 17-ந் தேதி சிபாரிசு செய்தது. இதற்கு, முப்படை தளபதி என்ற முறையில், அதிபர் ராஜபக்சே ஒப்புதல் அளித்தார்.

இதையடுத்து, கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு, தடுப்பு காவல் மையத்தில் இருந்து கொழும்பில் உள்ள வெளிக்கடை சிறைக்கு பொன்சேகா மாற்றப்பட்டார்.

`எஸ்' வார்டில் உள்ள தனிமை `செல்'லில் அவர் அடைக்கப்பட்டார். அவருக்கு கைதி உடை தரப்பட்டது. அது, அவரது உடம்புக்கு பொருத்தமாக இல்லை. சிமெண்ட் தரையில் பாய் விரித்து அவர் படுத்துக்கொண்டார். ஒரு தலையணை மட்டுமே அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

மறுநாள் வெள்ளிக்கிழமை, அதே பிளாக்கில் உள்ள மற்ற கைதிகளை போலவே, அதிகாலை 5 மணிக்கு பொன்சேகா எழுந்து விட்டார். அவரது அறையில் கழிவறை உள்ளது. ஆனால் தண்ணீர் வசதி இல்லை.

இதனால், பொன்சேகா, தனது வார்டுக்கு வெளியே உள்ள தண்ணீர் தொட்டியில் வாளியில் தண்ணீர் எடுத்து பயன்படுத்தினார். குளிப்பதற்கும், மற்ற பயன்பாட்டுக்கும் அவர் இப்படித்தான் தண்ணீர் எடுக்க வேண்டி இருந்தது.

பின்னர், காலை உணவுக்காக, மற்ற கைதிகளை போலவே, பொன்சேகாவும், கையில் தட்டும், குவளையும் ஏந்தி வரிசையில் நின்றார். பின்னர், பொன்சேகா செய்ய வேண்டிய வேலையை முடிவு செய்வதற்காக, அவரது உடல்நிலையை டாக்டர் பரிசோதித்தார். அவருக்கு பொருத்தமான உடைகள் தைப்பதற்காக, அவரது உடலை டெய்லர் அளவெடுத்தார்.

மதிய உணவுக்காக, பொன்சேகா மறுபடியும் வரிசையில் நின்றார். அரிசி சாதம், வெள்ளரிக்காய் கறி, பருப்பு, காய்கறி கூட்டு, சிறிய மீன் துண்டு, மசாலா ஆகியவை வழங்கப்பட்டன. பிறகு, மதியம் 2 மணிவரை, தனது அறையில் பொன்சேகா இருந்தார். பிறகு, தனக்கு ஒதுக்கப்பட்ட வேலையை செய்தார்.

இரவு 7 மணிஅளவில், அறைக்கு திரும்பினார். அப்போது, விளக்குகள் அணைந்து விட்டன. இதனால் இருட்டிலேயே பொன்சேகா தரையில் பாய் விரித்து தூங்கினார். பொன்சேகாவின் தினசரி ஜெயில் வாழ்க்கை இதேபோன்று கழிந்து வருகிறது.

சிறையில் அவருக்கு கைதி எண். 0/22032 வழங்கப்பட்டுள்ளது. சிறையில் அவருக்கு உரிய வேலை கொடுக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி வெலிக்கடை சிறைக்கு வரும் தபால்களை பிரித்து உரியவர்களுக்கு வினியோகிக் கும் வேலை கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தபால்களை பிரிக்கும் வேலையில் தொடர விரும்பாவிட்டால் அவருக்கு சிறையில் உள்ள அரசு அச்சகத்தில் நோட்டீஸ் அச்சடிக்கும் வேலை கொடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

தபால் பிரிக்கும் வேலை அல்லது நோட்டீஸ் அச்சடிக்கும் வேலையை சரத்பொன்சேகா ஏற்றுக் கொள்வாரா? என்பதில் கேள்விக்குறி நிலவுகிறது. அவர் இந்த வேலைகளை செய்யாவிட்டால் கடுமை யான வேலை ஒன்றில் அவர் ஈடுபடுத்தப்படுவார் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

Saturday, October 2, 2010

நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் பிரதமராக ருத்திரகுமாரன் தேர்வு!


நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் பிரதமராக ருத்திரகுமாரன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் வெளியாகி உள்ள செய்தியில்,


நாடுகடந்த தமிழ் ஈழ அரசின் பிரதிநிதிகள் செப்டம்பர் 29ம் தேதி முதல் அக்டோபர் 1ம் தேதி வரை 3 நாட்கள் கூடி அரசுக்கான அரசியலமைப்பினை அங்கீகரித்ததுடன் பிரதமரையும் தேர்வு செய்தனர். இதனைத்தொடர்ந்து அமைச்சரவையினை உருவாக்கும் செயற்பாடுகள் தொடர்ந்தன.


நியூயார்க் நகரில் ஐநா சபைக்கு அருகேயுள்ள பிளாசா ஹோட்டலில் ஒன்றுகூடிய பிரதிநிதிகளுடன் பாரீஸ், லண்டன் நகரங்களில் உள்ள பிரதிநிதிகளும் விடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் தொடர் கொண்டு விவாதித்தனர்.


இந்த விவாதத்தில், பிரதமருக்கு உதவியாக 3 துணை பிரதமர் பதவிகளும் 7 அமைச்சர் பதவிகளும் உருவாக்கப்படவேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.


நாடுகடந்த தமிழ் ஈழ அரசின் நாடாளுமன்றம் இரண்டு அவைகளைக் கொண்டதாக இருக்கும். இது தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட நாடாளுமன்றத்தையும், செனட் என்னும் நியமன உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனைச் சபையையும் கொண்டிருக்கும்.


நாடுகடந்த தமிழ் ஈழ அரசுக்கான அரசியலமைப்பினை அங்கீகரித்து ஏற்றுக்கொண்டதனைத் தொடர்ந்து, கனடாவைச் சேர்ந்த பொன் பாலராஜன் நாடாளுமன்ற சபாநாயகராகவும், சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த சுகன்யா புத்திரசிகாமணி துணை சபாநாயகராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.


விஸ்வநாதன் ருத்திரகுமாரன் நாடுகடந்த தமிழ் ஈழ அரசின் முதலாவது பிரதமராக நாடாளுமன்றத்தால் தேர்வு செய்யப்பட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

Friday, September 17, 2010

தமிழீழத்தின் விடுதலை நோக்கி, தொடரும் நீதிக்கான தார்மீக நடைப் பயணங்கள்…! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்…..



இலங்கை அரசினால் கடந்த வருடம் ஈழத்தமிழ் மீது மக்கள் நிகழ்த்தப்பட்ட இனவழிப்பு போரில், உடல், உள, வாழ்வியல் ரீதியில் இன்று வரை மீளமுடியாது அல்லற்படும் மக்களிற்கு, நீதி வழங்கும் நடவடிக்கைகளில் அசமந்தப் போக்கை கடைப்பிடித்து வரும் சர்வதேச மன்றங்களை தட்டியெழுப்பும் வகையில் நீதி தேடி தொடரும் நீண்ட மனிதப் பயணங்கள்…!

தமிழீழ மக்களிற்கு, இலங்கை இனவாத அரசினாலும், அதன் இராணுவ, காவற்றுறை, புலனாய்வுத் துறை படைகளினாலும் ஏற்படுத்தப்பட்டன வழிப்புக்கு எதிரான சட்டங்களுக்கு முறனான குற்றங்களுக்கும் மானிடத்திற்கு எதிரானகுற்றங்களுக்கும் போர்க் குற்றங்களிற்கும், தமிழீழ மக்கள் இன்றுவரை அனுபவித்துக் கொண்டிருக்கும் பேரவலங்களிற்கும், சர்வதேசத்திடம் நீதி கேட்டு, சர்வதேச சமூகத்தில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் விதத்தில் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டு வரும், மனித நேய உணர்வாளர்களின் மகத்தான விடுதலை நோக்கிய அமைதி வழி செயற்பாடுகளை, நாடுகடந்த அரசாங்கம் வரவேற்று ஆதரவளிக்கிறது!

அந்த வகையில் 2009ம் ஆண்டு மார்ச் மாதம் 4ம் நாள் கனடா ரொரன்ரோ நகரிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்னால் 5 மாணவர்கள் சமாதானத்தை நோக்கி ஒபரா வின்ப்பிரேயை சந்திக்கழூ என்று அமெரிக்கா சிக்காக்கோ மாநகரில் உள்ள ஹார்போ கலையகம் நோக்கி, கடும் குளிர் காலத்தில் 60 நாட்கள் பயணத்தை மேற்கொண்டிருந்தார்கள்.

அண்மையில் யூலை 2010ல் திரு.சிவந்தன் அவர்கள் பிரித்தானியாவில் இருந்து, ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் செயலகத்தை நோக்கி «நீதிக்கான நடை» என்று கடும் பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

 இலங்கை அரசு மீது ஐ.நா. சுயாதீன போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ள வேண்டும். அதற்கு ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

 எமது பெண்கள் சிறுவர்கள் மீது அநீதியிழைத்த சீறீலங்கா அரசு மீது சர்வதேச நீதிமன்றத்தில் தண்டணை வழங்கப்படவேண்டும். அத்துடன் சிறைகளில் தவிக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும்.

 மனித உரிமைகள் மதிக்கப்படும் வரை சிறீலங்கா அரசை அனைத்து நாடுகளும் புறக்கணிக்க வேண்டும்.

 தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும்.

என்கிற கோரிக்கைகளை முன் வைத்து பெல்ஜியம் ஐரோப்பியத் தலைமை ஒன்றியம் நோக்கிய தமிழ் மக்களுக்கான அடுத்த நீதிப்பயணத்தை மேற்கொண்டிருக்கும்,

திரு. ஜெகன் (62) அவுஸ்திரேலியா, திருமதி தேவகி குமார் (36) சுவிஸ், திரு. வினோத் (48) பிரான்ஸ், ஆகியோருக்கு, அவர்களின் இந்த மனித நேய முயற்சி அதன் இலக்கினை எட்டவும், இந்த நீதிக்கான நடைப் பயணத்தை ஒருங்கமைத்தோருக்கும் நாடு கடந்த அரசாங்கம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

மனித நேய உணர்வாளர்களின் மகத்தான விடுதலை நோக்கிய இத்தகைய செயற்பாடுகள் தொடரப்பட வேண்டும், என்பதில் நாடுகடந்த அரசாங்கம் தனது அக்கறையை வெளிப்படுத்துகின்றது.

செயலகம்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

Thursday, September 2, 2010

நாடு கடந்த தமிழீழ அரசின் இரண்டாவது அமர்வு: உருத்திரகுமாரன் அறிவிப்பு


திகதி:02.09.2010

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையின் இரண்டாவது அமர்வினை செப்டெம்;பர் மாத இறுதிப்பகுதியில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை பொதுமக்களுக்கு அறியத் தருவதில் நாம் மகிழ்வடைகிறோம்.


கடந்த மே மாதம் 17-19ஆம் நாட்களின்போது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையின் முதலாவது அமர்வினை அமெரிக்காவின் அரசியலமைப்பு எழுதப்பட்ட, சுதந்திரப்பிரகனடம் மேற்கொள்ளப்பட்ட வரலாற்றுப்புகழ்மிக்க பிலடெல்பியா மாநகரில் நாம் கூட்டியிருந்தோம். இம் முதல் அமர்வின்போது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனக்கான இடைக்கால நிறைவேற்றுச் சபையினை அமைத்துக் கொண்டதுடன், இடைக்கால முதன்மை நிறைவேற்றுனரையும் தெரிவு செய்து கொண்டது.


மேலும் இம் முதலமர்வு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான அரசியல் அமைப்பினை உருவாக்கிக் கொள்வதற்காகவும், உடனடித் தேவைகளையொட்டிய பணிகளை முன்னெடுப்பதற்காகவும் சில செயற்பாட்டுக்குழுக்களை அடையாளம் கண்டு உருவாக்கியிருந்தது. அரசியல் அமைப்பு விவகாரக்குழு, அரசியல் அமைப்பு உபகுழு, கல்வி, பண்பாடு;, உடல்நலம்;, விளையாட்டுத் துறைகளுக்கான குழு, பொருண்மிய நலன்பேணல் மேம்பாட்டுக்கான குழு, அனைத்துலக ஆதரவு திரட்டலுக்கான குழுவிற்கான புலமையாளர் உபகுழு, ஆதரவுதிரட்டல் உபகுழு, ஊடகங்கள் உபகுழு, இனஒழிப்பு, போர்க்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்களை விசாரிப்பதற்கான குழு, பெண்கள், சிறுவர், மூத்தோர் நலன் பேணும் குழு, வர்த்தக மேம்பாட்டுக் குழு, மாவீரர்கள், போராளிகள் குடும்ப நலன் பேணும் குழு, போர்க்கைதிகளை விடுவிப்பதற்கான குழு, இயற்கை வளங்கள் மேம்பாட்டுக் குழு, இடம் பெயர்ந்தோர் ஏதிலிகள் பற்றிய குழு ஆகியவையே இக் குழுக்களாகும்.


நாம் அமைத்துள்ள வௌ;வேறு குழுக்கள் தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக ஒவ்வொரு குழுவுக்கும் ஒருங்குகூட்டுனர் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து வேலைத்திட்டங்களுக்கான திட்டமிடல் ஆரம்பிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டு வருகிறது.


இதேவேளையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பு அரசியலமைப்புக் குழுவினால் உருவாக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு உருவாக்கப்படும் அரசிலமைப்பை விவாதித்து ஏற்றுக் கொண்டு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான நிரந்தரக் கட்டமைப்பை வடிவமைப்பதே இம்மாத இறுதிப் பகுதியில் கூட்டப்படவுள்ள அரசவையின் இரண்டாவது அமர்வின் நோக்கமாகும். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது நிரந்தரக் கட்டமைப்பை உருவாக்கும்போது செயற்பாட்டுக் குழுக்கள் அமைச்சுக்களாக வடிவமைக்கப்பட்டு நிரந்தரக் கட்டமைப்புக்களாக்கப்படும். இவ் இரண்டாவது அமர்வு தொடர்பான மேலதிகத் தகவல்களை மக்களுக்கு இயன்றளவு விரைவில் அறியத் தருவோம்.


இத் தருணத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இடைக்கால முதன்மை நிறைவேற்றுனர் என்ற நிலையில் இருந்து மக்கள் முன்னால் ஒரு சில விடயங்களைத் தெளிவு படுத்துவது எனது தலையாய கடமையெனக் கருதுகிறேன்.


நாம் எமது அரசியல் பெருவிருப்பான சுதந்திரத் தமிழீழத் தனியரசை அமைப்பதற்கான போராட்டத்தை அரசியல் இராஜதந்திரத் தளத்தில் முன்னெடுப்பதற்காகவே நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை உருவாக்கியுள்ளோம்.

தாயகத்தில் இடம்பெற்றுக் கொண்டிருந்த எழுச்சி மிகுந்த விடுதலைப்போராட்டத்துக்கு உறுதுணையாக நாம் முன்னர் விடுதலைப்பணிகளை மேற்கொண்டு வந்தோம். தற்போது தமிழீழத் தனியரசுக்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்கான அரசியல் வெளியெதுவும் தாயகத்தில் இல்லாதமையால் புலத்தில் வாழும் தமிழீழ மக்களாகிய நாம் உலகத் தமிழினத்தின் பங்குபற்றுதலுடன், நியாயத்துக்காகவும், ஒடுக்கப்படும் மக்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கக்கூடிய உலக சமூகத்தின் ஆதரவுடன் எமது விடுதலைப் போராட்டத்தை அரசியல் இராஜதந்திரத் தளத்தில் முன்னெடுக்க திடசங்கற்பம் ப+ண்டுள்ளோம்.

நமது செயற்பாடுகள் தாயக மக்களின் அரசியல் வெளியையும் அதிகரிக்க உதவும் எனவும் நாம் உறுதியாக நம்புகிறோம்.
எம்மைப் பொறுத்த வரையில் சுதந்திரத் தமிழீழம் ஒரு தோற்கடிக்கப்பட்ட அரசியல் இலக்கு அல்ல. பல்லாயிரக்கணக்கான மாவீரர்களதும் மக்களதும் குருதியாலும் ஈகத்தாலும் உயிர்ப்ப+ட்டப்பட்ட விடுதலைத்தீ நாம் நமக்கெனத் தமிழீழத் தனியரசினை அமைக்கும்வரை எம் நெஞ்சமெல்லாம் கனன்று கொண்டுதான் இருக்கும். இவ் விடுதலைத்தீயினை அணைத்துவிடுவதற்கு எதிரி பகீரத முயற்சி செய்து வருகின்றமை நாம் அறிந்ததே. எதிரியிடம் இருந்து நம் விடுதலைத்தீயினை பாதுகாப்பதனையும், எமது விடுதலை இலக்கினை முன்னோக்கி நகர்த்துவதனையும் சவால்களாகக் கொண்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது பணிகளை முன்னெடுக்க உறுதி ப+ண்டுள்ளது. எமது இரண்டாவது அமர்வில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான நிரந்தரக் கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டபின்னர் நமது பணிகள் வேகம் பெறும்.


நாம் அனைவரும் ஒன்றுபட்டு எதிரியிடமிருந்து வரும் சவால்களை முறியடித்து, நமது போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியுள்ள இக் காலகட்டத்தில் நாம் எமக்குள்ளேயே முரண்படுவதும், ஆளுக்காள் அவதூற்றுச்சேறு வீசுவதும் எதிரிக்குத் துணைபோகும் நடவடிக்கைகளேயன்றி நம் இலட்சியத்துக்கோ அல்லது நமது விடுதலைப்பயணத்துக்கோ எவ்விதத்திலும் உதவும் நடவடிக்கைகள் அல்ல. இந்த அவதூறுகள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மீதும், அதன் இடைக்கால முதன்மை நிறைவேற்றுனராகப் பணிபுரியும் என் மீதும் மேற்கொள்ளப்படுகின்றன.

குறிப்பிட்டு விரல் விட்டு எண்ணக்கூடிய ஒருசிலர் தமது சொந்த நலன்கள் சார்ந்து மேற் கொள்ளும் கைங்கரியம் இது என்பதனை நாம் அறிவோம். நாம் அனைவரும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. ஜனநாயக விழுமியங்களில் கருத்துச் சுதந்திரம் முக்கியமானது. ஆக்கப+ர்வமான விமர்சனங்கள் எமது பணியைச் செழுமைப்படுத்தும். ஆனால் உண்மைக்குப் புறம்பான அபாண்டங்களை உண்மை போல் திருப்பி திருப்பிக் கூறுவதும், மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்திக் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முனைவதும் போராட்டத்தின் நலன் சார்ந்த அல்லது மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகள் அல்ல.


அண்மையில் தமிழீழத்துக்கு எதிராக நான் கருத்துச் சொல்லியுள்ளதாகவும், சிறீலங்கா அரசுக்காகச் செயற்படுவதாகக் கூறியுள்ளதாகவும் அபாண்டங்கள கூறி; நான் கதைத்ததாகக் கூறும் ஒலிப்பதிவு உலவ விடப்பட்டு கண்டனங்கள் எழுப்பப்;பட்டுள்ளதாக எனது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இது குறித்து மக்களுக்கு உண்மையினைத் தெளிவுபடுத்த வேண்டியது மக்கள் மத்தியில் ஏற்படக்கூடிய குழப்பங்களைத் தவிர்க்க அவசியமானது என உணர்கிறோம்.


தமிழ் ஈழம் சாத்தியமானதல்ல என நான் என் வாழ்நாளில் எவருக்கும் கூறவும் இல்லை, நான் அப்படிக் கருதவும் இல்லை. தமிழ் ஈழம் சாத்தியமானது மட்டுமல்ல, அது காலத்தின் தவிர்க்க முடியாத கட்டாயம் என்ற அடிப்படையில் தான் எனது கடந்த கால, தற்போதய அரசியல் வேலைப்பாடுகள் அமைந்திருந்தன, அமைந்து வருகின்றன.


கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் இலண்டனில் இருந்து கதைப்பதாகக்கூறி; சுரேந்திரன் எனும் பெயரில் ஒருவர் என்னுடன் தொலைபேசியில் உரையாடியிருந்தார். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஆதரவாளராகத் தன்னை அறிமுகப்படுத்திய இவருடன் நான் மேற்கொண்ட உரையாடல் எனக்குத் தெரியாமலே பதிவு செய்யப்பட்டு, அதனை இடையிடையே வெட்டி ஒட்டி மோசடியான முறையில் திரிபுபடுத்தப்பட்ட கதையொன்று சோடிக்கப்பட்டுள்ளதாக நான் உணர்கிறேன். தமிழீழத்துக்கான போராட்ட வடிவம் மாறியுள்ளமை குறித்தும், எமக்கிடையே நடைபெறும் சேறுப+சும் நடவடிக்கைகள் ஊடாக சிறீலங்கா அரசு செய்யும் வேலைகளை நாமும் செய்கிறோம் என்று கண்டனம் வெளிப்படுத்தியும் நான் தெரிவித்த கருத்துக்களை, கணினி மென்பொருளைப் பயன்படுத்தி உரையாடலின் சில பகுதிகளை நீக்கி, சிலபகுதிகளை வேறு இடத்திலிருந்து வெட்டி ஒட்டி இந்த மோசடியினை இவர்கள் மேற்கொண்டுள்ளனர் என்றே நான் கருதுகிறேன். இத்தகைய ஒரு மோசடி தமிழ்த் தேசியத்தின் பேரிலும் தமிழீழ விடுதலையின் பேரிலும் இடம்பெற்றிருப்பது தமிழர் சமூகத்துக்கு பெரும் வெட்கக்கேடானது.

மக்களை ஏமாற்றுவதற்காக வௌ;வேறு மோசடிகளின் ஊடாகப் பொய்க்கதைகளைச் சோடிப்பது கருத்துச் சுதந்திரத்தினையும் மக்களின் அறிவாற்றலையும் அவமதிக்கும் மிகவும் அற்பத்தனமான செயற்பாடாகும்.
நான் முன்னர் கூறியபடி எமது தற்போதய போராட்டம் ஜனநாயகத்தின் வழியில் முன்னனெடுக்கப்படுவதாகும். ஜனநாயகத்தின் முக்கிய அம்சங்களிலொன்று வெளிப்படைத்தன்மை (வசயnளியசநnஉல) என்பது. எனவே தனிப்பட்டவர்களோ அல்லது அமைப்புக்களோ தம்மை யாரென மக்கள் முன்னிலையில் வெளிப்படுத்தித் தமது கருத்துக்களை, கண்டனங்களை வெளியிடுவதுதான் அரசியல் நாகரீகம். அதுதான் அரசியல் துணிவு மிக்க செயலாகும். இதைவிட இத்தகைய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சில இணையத்தளங்கள் கடந்த காலங்களில் நாடு கடந்த அரசாங்கம் தொடர்பாக எடுத்த நிலைப்பாடுகளை மக்கள் நினைவுபடுத்திப் பார்க்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்ளுகிறேன்.


செப்டெம்பர் மாத இறுதியில் நடைபெறும் இரண்டாது அமர்வில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான நிரந்தரக் கட்டமைப்பின் நிர்வாகத்தை நாம் தெரிவு செய்யவுள்ளோம். இந்த நேரத்தில்; மேற்கூறிய மோசடியான அவதூறுப் பரப்புரை முயற்சிகள் இன்னும் தீவிரமடையவும் கூடும். எனினும் நாம் இந்த மோசமான நடத்தைகளைக் கடந்து ஆரோக்கியமான அரசியற் பண்பாட்டை உருவாக்கியாக வேண்டும். இதனால் இத்தகைய அவதூறுச் சேறுவீசல்களை புறம் தள்ளி ஒதுக்கிவிட்டு நாம் முன்னேறிச் செல்லவே விரும்புகிறோம். இனி வரும் காலங்களில் இத்தகைய அவதூறுகளுக்குப் பதில் அளித்துக் கொண்டிருப்பதனைத் தவிர்த்துக் கொள்ளவும் விரும்புகிறோம். மக்கள் எமது இந்த நிலைப்பாட்டைப் புரிந்து கொள்வார்கள் என நாம் திடமாக நம்புகிறோம்.
நன்றி

விசுவநாதன் ருத்ரகுமாரன்
இடைக்கால முதன்மை நிறேவேற்றுனர்.